உயிர் ஜெபிக்கும் ஒரு மந்திரம் - எழிலி

Photo by WrongTog on Unsplash

அனைவருக்கும் ஒரு கவிதையின் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்!




ஆசைப்பட!
மறுக்க !
அழுது மடிய !
சிரித்து மகிழ!
கனவு மெய்ப்பட!
கண்டங்கள் தாண்ட!
இங்கேயே நிற்க!
நின்று செழிக்க!
நாளை வளர!
வளர்ந்து கொண்டே,
வளர்ந்து கொண்டே,
எங்கும் பரவி
வியாபிக்கும்
எல்லாவற்றிலும்
நாங்கள்!

உன் " பெருந்தன்மை"
மட்டுமே
பேசப்பட வேண்டும்!

தேசமே!
தேசமே!
சுதந்திரத்தை
எமக்களித்து
தியாகியாகிறாய்!
1947 -களின் பின்!

நூறுமுறை  மரித்தாலும்
உன் மடியில்!
ஒரு முறைப் பிறந்தாலும்
உன் வயிற்றில்!
உனக்காக உன்
தலைமுறைகள்.

எமக்காக நீ
மட்டும் தான் !
உயிர் ஜெபிக்கும்
ஒரு மந்திரம்!

இந்தியா
எழிலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.