கடுதாசி - எழிலி

Photo by Jr Korpa on Unsplash

செம்பவல்லிஅறிஞ்சங்குப்பம்,
(ஆறாம் வகுப்பு)

அன்புள்ள அப்பாக்கு,

பள்ளிக் கூடம்  தெறந்தாச்சு!
பாடமெல்லாம் புதுசாச்சு!

பள்ளிக்கூட
உடுமாத்துத் துணியாட்டம்
பாடம் மொத்தமும் ஒண்ணாச்சு!

பட்டணத்தத்தாண்டி  நம்ம
ஊரும்   தெரிஞ்சாச்சு!

நம்மூரு இன்னைக்கு
பேப்பர்ல வந்திருக்கு !

என்னைக்காவது ஒரு நா(ள்)
என் படமும் டி.வி.யில!

இன்னாரு மகதா(ன்)
மாநிலத்துல மொதன்னு
அன்னைக்கு
ஒம்பேருக்கும்,நம்மூருக்கும்
பெருமை வரும்  நிச்சியம்!

' சமச்சீர்'  கல்வி
சகலருக்கும் பொதுவாச்சு!
சத்துணவு  (திட்டம்)போல
புத்திக்கு ஊட்டமாச்சு!

என்ன நா(ன்) சொல்லுதேன்னு
ஒனக்குப்
புரிஞ்சிதோ தெரியலை,நீ
அடுத்தமொற   வரையில
கட்டாயம்   நா(ன்)
பேசுவேன்  இங்கிலீசுல!

புறப்படறேன்
இப்போ  நேரமாச்சு,
ஆறாம் வகுப்புப்
புத்தகம்
வாங்கணும் நாழியாச்சு!


பெறுநர்,
கொளுத்து - கோயிந்தன்,
துபாய்
எழிலி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.