தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மீள்பிரசவம்

துரை. மணிகண்டன்
கண்ணில் கண்ட காட்சி!
கடைக்கோடி மக்களையும்!
புரட்டிப்போட்டது கவலையுடன்!
இயற்கை ஆதி ரேகையை இழந்துவிட்டுத் தவித்தது!
குழந்தையைக் காணாத தாய்போல!
விஞ்ஞான விபரீத விபத்தில்!
தற்கோலை செய்துகோண்டது மண்!
தன்னை மறந்த நிலையில்!
மக்கள் கூட்டம் கழுவேறியது!
மனிதனைச் சலவை செய்ய!
இறைவன் கீழே வந்தான்!
அறிவு ரத்தத்தைப் பாய்ச்சி!
அகிலத்தை மீள்பிரசவம் செய்ய.......!
!
-துரை. மணிகண்டன்

வண்ணத்துப்பூச்சிகளை

எம்.ரிஷான் ஷெரீப்
வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள் !
---------------------------------------------------!
அவன் தன்!
வேட்டைப்பற்களை மறைக்க!
தேவதூதனையொத்தவொரு!
அழகிய முகமூடியைத் தன்!
அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட!
பின்னரான பொழுதொன்றில்தான்!
அவள் அவனைப் பார்த்தாளெனினும்!
ஒரு செங்கழுகின் சூட்சுமத் தேடலையும்!
அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை !
அக்கழுகு!
அழகிய பெண்களின் மாமிசப்பட்சி!
அவர்தம் வாழ்வினைக் கொழுவி!
உயிர் எஞ்சத் துண்டுகளாய்!
வெட்டியெடுத்துச் சப்பிச் சிரிக்கும்!
கோரங்களைக் கொண்டவை அதனது நாட்கள் !
அவள்!
செந்தாமரை மலரொத்தவொரு!
தேவதைக்குப் பிறந்தவள்!
ஏழ்மையெனும் சேற்றுக்குள்!
வனப்பு நிறைக்க மலர்ந்தவள்!
அன்பைத்தவிர்த்து ஏதொன்றும் அறியா!
அப்பாவிப்பெண்ணக் கழுகின்!
கூர்விழிகளுக்குள் விழுந்தவள் !
சுவனக் கன்னியையொத்த!
தூய்மையைக் கொண்டவளின்!
கவனம் பிசகிய கணமொன்றிலவன்!
கவரும் இரையுடனெறிந்த காதல் தூண்டிலின் முள்!
மென்தொண்டையில் இலகுவாக இறங்கிற்று!
என்றுமே உணர்ந்திராதவொரு!
விபரீதக் குருதிச்சுவையை நா உணர்ந்திற்று !
நேசத்தினைச் சொல்லிச் சொல்லி!
அவளது சதைகளை அவ்விஷப்பட்சி!
தின்றரித்து முடிந்தவேளையில்!
வாழ்வில் காணாவொரு துயரத்தை!
அவள் கண்கள் விடாதுசொரிந்திட!
எந்நாள்பொழுதும் தீராப்பசியோடவன்!
வேறொரு அழகியை ஈர்க்கச் சென்றான்!
இயல்பை மறந்த நாட்கள் தொடர்ந்து வர!
அவளது தேவதைப்பாடல்கள் சோரலாயின !
ஆழி நடுவிலொரு ஒற்றைப்படகிலமர்ந்து!
சூழ்ந்த தனிமைக்கும் துயருக்கும்!
மீளப்பெறமுடியா இழப்புக்குமாக!
வசந்தகாலத்து வனங்களின்!
வண்ணத்துப்பூச்சிகளைத் தன்!
அரணாக அவள் சூடிக் கொண்டாள்!
இன்று!
மீட்டமுடியாக் காலத்தின் வினைகளைத்!
தம் இச்சையால் உணர்ந்த பல திமிங்கிலங்கள்!
இடையறாது படகை!
வட்டமிட்டுக் கொண்டேயிருக்கின்றன

ஏவலர்கள்.. அடிமை நாச்சியார்

வி. பிச்சுமணி
ஏவலர்கள் எஜமானர்களாய்.. அடிமை நாச்சியார்!
01.!
ஏவலர்கள் எஜமானர்களாய்!
---------------------------------------------------!
நாம் வடிதத கடவுள் சிலைதான்!
இருந்தபோதிலும்!
எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது!
நாம் விதைத்து அறுத்த நெல்தான்!
இருந்தபோதிலும்!
நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை!
நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள்!
இருந்த போதிலும் !
பணிந்து முன் நிற்க வேண்டியுள்ளது.!
நாம் வாக்களித்து வாகைசூடிய தலைவர்கள்!
இருந்தபோதிலும்!
நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்கள்!
நாம் இயற்கையில் மனிதாக பிறந்துவிட்டோம்!
இருந்த போதிலும்!
நமக்கு முதுகெலும்பு இருப்பதை மறந்துவிட்டோம்!
02.!
அடிமை நாச்சியார்!
-------------------------------!
அம்மாவோடு மாமாவின் கிராமத்திற்கு!
செல்லும் போது எல்லாம் உடனே!
எதிர்வீட்டு நண்பனை தேடி ஓடுவேன்!
வீட்டு முடுக்கில் முன்னங்கால்கள்!
கட்டப்பட்ட கழுதைகளை!
தாண்டி செல்ல தயங்கும் போது!
அய்யம்மாவின் குரல்!
வாங்க நாய்னா நாச்சியார் வந்திருக்காங்களா எனும்!
அம்மா வந்திருக்கா என பதில் அளிக்கும் என் குரல்!
வேலு கழுதையை பொதியுடன் ஆற்றுக்கு பத்தி செல்ல!
அவனுடனும் கால்கட்டு எடுத்து கழுதையுடனும்!
நடந்து செல்கையில் வழியில் உள்ள வயலில்!
சோளகதிர் உடைத்து கஞ்சிக்கு அவன் கொண்டு வந்த!
உப்பை போட்டு சோளம் அவித்து!
சாப்பிட்ட காலம் நெஞ்சில்!
இப்பொழுது செல்லும் போது வேலு இல்லை!
அய்யம்மா நய்னா எப்பவந்தீங்க என தளர்நத குரலில் கேட்க!
நய்னா நாச்சியார் அர்த்தம் புரிந்து தெளிந்து!
அடிமைப்படுத்தும் அந்த வார்த்தைகளை!
நான் முழுங்கி நாளாகிவிட்டதால்!
நீங்க நல்லாயிருக்கீங்களா!
வேலு என்ன செய்கிறார் என கேட்க!
வித்தியாசம் ஏதும் தெரியாது காட்டாது!
நய்னாவுக்கு எத்தனை பிள்ளைங்க!
என குசலம் விசாரித்தார் அந்த அம்மா

நான் செத்து நான்

முஷாரப் முதுநபீன்
தனிமையின் தவாளிப்புகளுள்!
என் உணர்வுகள் ஒதுங்கிக் கொண்ட போது........!
நெல் மணிகள் !
எனைத்தூக்கி சொருகிக் கொள்கின்றன..!
எந்திர வலிமை !
என் வலிகளுக்கு வெளிச்சமாய்....!
அசதியாய்...!
மிக மிக அசதியாய் இருக்கிறது...!
அம்புகள் ஓரணியில் நின்று !
புள்ளியை பொத்தலாக்கிய!
நோவின் அந்தத்தில் கூட!
சகிப்புத்தனமை தீபமாய் ஒளிர்கிறது.!
இருந்காலும் குறி தவறிய!
அம்புகள் சில!
என் குரல்வளையை !
குத்தி காயப்படுத்துகிறது...!
ஓ..வென்று அழத்தோணுகிறது.!
அழுகிறேன்..விழுகிறேன்...!
விழுந்து விழுந்து அழுகிறேன்...!
ஒரு கண்ணீர்த்துளியின்!
மரணத்திற்கும் இன்னொரு!
கண்ணீர்த்துளியின்!
ஜனனத்திற்கும் இடையில்!
உயிர் சிக்கித் தவிக்கிறது...!
பெற்றோலுக்குள்ளும் !
குப்பி விளக்கினுள்ளும் மாறி மாறி!
உட்கார்ந்து விடுகிறேன்!
கையில் தீக்குச்சியோடு..!
ஏனோ தெரியாது!
யாரும் தீப்பெட்டி தருவதாயில்லை.!
இரண்டாம் முறையாய்!
தாயின் கருப்பைக்குள்!
தங்கி விடுகிறேன்!
இல்லை இல்லை..!
தொங்கி விடுகிறேன்.!
மீண்டும் பிறக்கிறேன்.!
மழழையாக அல்ல..!
இப்பிறவியில் எனக்கு!
உங்கள் நெருப்பெட்டி தேவையில்லை..!
இப்பிறவியில் நான்!
பெற்றோலுக்குள்ளோ..!
குப்பி விளக்கினுள்ளோ அல்லாமல்!
சூரியனில் உட்கார்ந்துள்ளேன்

வாழ்த்துவோம்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
தன்னைத்தானே அறிந்த நேர்மை உள்ளங்கள் !
தனக்குத்தானே உண்மையான நெஞ்சங்கள் !
துணையாய் நடக்கும் நட்பின் சொந்தங்கள் !
தூங்காதிருக்கும் இரத்தச் சொந்தங்கள் !
வாழ்த்துவோம் !
துணிவுடன் ஏழ்மையை எதிர்க்கும் இதயங்கள் !
முட்களை வெட்டி பாதையமைக்கும் கரங்கள் !
தன்னைக் கொடுத்துத் தாயைக் காக்கும் தனயர்கள் !
துவளும் கால்களைத் தாங்கும் கொள்கைகள் !
வாழ்த்துவோம் !
வேண்டும் பொருட்களை வேண்டா ஞானங்கள் !
தாண்டும் இன்பங்களை பகிரும் மனிதர்கள் !
மீண்டும் மீண்டும் உதவும் உள்ளங்கள் !
சீண்டும் போதும் பொறுக்கும் அறிவுகள் !
வாழ்த்துவோம் !
நாளைய உலகை மறக்கும் தௌ¤வுகள் !
இன்றைய உலகில் சிரிக்கும் அதரங்கள் !
நாளைய உலகை திறக்கும் சாவிகள் !
எதிர்காலத்தின் மழலைச் செல்வங்கள் !
வாழ்த்துவோம்

பிளவு

தான்யா
அவனைக் காணும் போதெல்லாம் !
ஏற்படும் இயல்பது, !
ஏதோ ஒரு கணம் நின்று !
கதைபேசி !
பின் பிணக்காகி !
சிதறும். !
நம்பிக்கையற்ற நம்பிக்கை அது !
அந்தரங்கத்தில் ஏற்படும் !
அருவருப்பைப் போல சிதறுண்டு போகும் !
குப்பிகளைத் தாண்ட விரும்பாத !
புத்தி அது. !
எல்லாவற்றையும் தாண்ட விளையும் !
புத்தி இது. !
எங்கே அந்த உருபிழந்த உருவங்கள்! !
எங்கெங்கோ சிதறுண்டு !
ஒட்டி வைத்த ஒட்டடைகள் !
சொல்லாமல் தொடர்ந்து கொல்லும் !
வேர்கள் !
வேதனையில் சிதறுண்ட உருக்கள் !
இவற்றுக்குள் வாழும் ஐந்துக்கள் !
ஆதி தேடி நாங்கள் !
-தான்யா !
நன்றி: உயிர்நிழல்

வாடகை வீடு

நவா நடா
வாடகை வீட்டில் வாழ்ந்திட்ட நாங்கள்,!
வாழ்வினில் அகதிகள் ஆனோம்,!
தேடிய சொந்தம் எம்மிடம் இல்லை!
தெருவினில் ஓடுது வாழ்க்கை,!
வீட்டினில் உருப்படி ஏழு, இந்த!
விடிவினில் உருப்படி ஏது?!
கூட்டினில் கல்லை எறிந்தால் - அங்கு!
குருவிகள் வாழ்ந்திடுமோ? !
!
-நவா நடா

விமானம்

ஆ.முத்துராமலிங்கம்
சிறு பிராயத்தில்!
அலாதிப்பிரியம் விமானங்கள் மீது.!
!
வெகு உயரத்தில் குச்சியாய் செல்லும்!
விமானத்தை பலமுறை பார்த்தும் அதன்!
ஆச்சரியம் குறைந்ததில்லை.!
!
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கூட!
அதன் இறைச்சல் கேட்டு!
வெளிமுற்றத்திற்க்கோடிவந்து!
பார்த்திற்கின்றேன்.!
!
கோவில்கொடையில்!
சந்தையில் எங்கும் என்!
விளையாட்டுப் பொருளில் முதன்மை!
வகித்தது விமானம்.!
!
சில தினங்களுக்கு முன் கூட!
அதன் நினைவுகள்!
பூட்டிய என் உதடுகளுக்குள்!
சிறு புன்னகையை மிச்சம் வைத்திருந்தது.!
!
ஆனால் இன்று என் பிள்ளைகள்!
விமானச்சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று!
பதுங்குக்குழிக்குள் புகும் அவலம் பார்த்து!
அறைகின்றது! விமானம் ரசித்த என் நெஞ்சை.!
!
விமானம் குறித்த என்!
ரசனையும், ஆச்சரியமும்!
கைநழுவி விழுந்த பீங்கான்!
கோப்பையைப் போல!
உடைந்து சிதறிவிட்டது.!
!
பாட்டி சொல்லும் பேய் கதைகளைப் போல்!
பயத்தை நிறப்புகின்றது விமானங்களும்!
அதன் செயல்களும்.!
!
-ஆ.முத்துராமலிங்கம்!
சாலிகிராமம்

போரபிமானம்

ரவி (சுவிஸ்)
அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்!
காலங்கள் இவை.!
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.!
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே!
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி!
இளைப்பாறுகிறான்.!
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்!
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.!
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.!
ஒருவன் தன்னை பாதுகாக்கும் உரிமை என்பது!
இன்னொருவனை!
அல்லது இன்னொருவளை அழிப்பதாகும்!
என்பது கோட்பாடாகிறது.!
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியவனுக்கு!
பயங்கரவாதி பட்டமளிக்கப்படுகிறது.!
போர்விமானத்தின் இரைச்சலில் ஊர்!
ஒளித்துக்கொள்கிறது பதுங்கு குழிகளினுள்.!
குண்டுகள் வலைவீசி இழுத்த!
கட்டடங்களின் சிதைவுக்குள்!
குழந்தை அந்தரிக்கிறது.!
நாய் இருப்புக் கொள்ளாமல் ஓடித்திரிகிறது.!
கிற்லரின் யூதவதை முகாமிலிருந்து கிளம்பிய!
ஒரு பிசாசுபோல்!
புகைமண்டலங்களின் நடுவே!
வெளித்தெரிகிறது இஸ்ரேல்.!
மீண்டும் லெபனானுக்குள் புகுந்துகொள்கிறது.!
ஆயுதங்களை பிரசவிக்கும் ஆலைகளில் இங்கு!
இயந்திரங்கள் சூடாகிக்கொண்டிருக்கின்றன.!
இவர்களுக்கான சொர்க்கங்கள்!
தமது மண்ணிலேயே எழுதப்பட!
ஏழைநாடுகளுக்கான சொர்க்கங்கள்!
அடுத்த பிறவியில் என!
சிலுவையை உயர்த்துகின்றனர் பாதிரிமார்!
வத்திக்கானின் மேலாக.!
அவர்கள் எம்மிடம் காவிவந்த பைபிள்!
இப்போதும் எம்மிடம் இருக்கின்றன.!
எமது வளங்கள் எம்மிடம் இல்லை.!
சபிக்கப்பட்ட பூமியின் ஏழ்மைக்கு!
சபிப்பவன்!
போரை முதலுதவியாய் வழங்குகிறான்.!
அழி! எஞ்சிய எல்லாவற்றையும் அழி!!
மனிதாபிமானம் பற்றிப் பேசு!
போர்நெறி பற்றிப் பேசு!
ஓயாது குண்டுவீசு, கொல்!
கொன்று போடு ஒரு தாயையோ!
குழந்தையையோ அன்றி ஒரு நாயையோ!
கிடையாதபோது!
அசையாமல் நிற்கும் ஒரு பல்லிக்குமேல் தன்னும்!
குண்டுவீசு.!
தன்னைப் பாதுகாக்கும் உரிமை என்பது!
மற்றவனை அழிப்பதென்பதாகும்.!
வீசு!!
- ரவி (05082006)

சுவாசம்

வேல் கண்ணன்
மீன் விற்கும் ஒருத்தியும்!
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்!
ஒரே வீட்டில் இருந்தார்கள்!
இவர்கள்!
கண்ணயர்ந்தவேளையில் !
சுவரில் சாய்ந்திருக்கும்!
கூடைகள்!
நூகர்தலுக்கு!
இடம் வலம் ஏது?!
கலந்தேயிருந்தன!
வாசனையும் வீச்சமும்!
ஆத்திரமோ அவசரமோ!
நாள் ஒன்றில் மாறிப்போன!
கூடைகளிருந்து கூடுதலாகவே!
விற்றும் தீர்த்தன !
சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து!
கலந்தே வெளியேறுகிறது!
நாசிகள் தேர்ந்தெடுத்து!
கொள்கின்றன தேவையானவற்றை