தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சில்லரையாய்... வருவாயோ

செண்பக ஜெகதீசன்
01.!
சில்லரையாய்...!
-------------------!
ஆழக்கடல்!
அமைதியாய் இருக்கையில்!
இந்த!
ஓரக்கடல் ஏன்!
ஓலமிடுகிறது...!!
மணக்கும் மலர்கள்!
இணக்கமாய்!
மௌனம் சாதிக்கும்போது!
இந்த!
சருகுகள் ஏன்!
சலசலக்கின்றன...!!
பிணமும் கேட்கும்!
பணத்தில் கூட,!
கட்டுக் கட்டாய்!
கரன்ஸி நோட்டுக்கள்!
கப்சிப்பாய் இருக்கையில்,!
இந்தச்!
சில்லரைகள் எப்போதும்!
சிணுங்கத்தானே செய்கின்றன...!!
02.!
வருவாயோ...!
-----------------!
உண்டியலில்!
ஒருரூபாய் போட்டு!
வண்டி வண்டியாய்!
வரம் கேட்கும்!
பண்டமாற்று பக்தனே,!
வண்டி வண்டியாய்!
வந்துவிட்டால்!
வருவாயோ நீ!
வறுமையான சாமி பக்கம்

பனித்துளிகள்

அகரம் அமுதா
பனித்துளிகளே! முகில்தெளிக்கும்!
பன்னீர்த் துளிகளே!!
அரும்புகளின் மேனிபூத்த!
அம்மைக் கட்டிகளே!!
!
நீங்கள்!
பூப்பெய்தியப் பூக்களுக்கு!
பூப்பெய்யும் பூக்கள்...!
!
இரவு சிப்பியின்!
திரவ முத்துகள்...!
!
புல்வெளிக்கு வழங்கப்படும்!
போலியோ சொட்டுமருந்து...!
!
மேக விவசாயி கண்ட!
சொட்டுநீர்ப் பாசனம்...!
!
பாமரன் வீட்டுப்!
பாத்திரம் நிறைக்காத!
பருவ மழை...!
மண்மகள் மார்பினில்!
மலைப்பால் வற்றியதால்!
வான்முகில் புட்டிப்பால்!
வழங்கவரும் ஏற்பாடு...!
விண்வெளிச் சாலையில்!
விலக்குகள் எரிந்தும்!
மேக விமானங்கள்!
மோதிக் கொள்வதினால்!
உடைந்து விழுகின்ற!
உதிரித் துண்டுகள்...!
இரவு நீக்ரோவின்!
வெள்ளைவண்ண வாரிசுகளே!!
உங்கள் அழகினிலே!
உள்ளம் பறிகொடுத்து!
மங்கல மலர்களெல்லாம்!
மார்பள்ளிச் சூடிடுதோ?!
புற்களின் மார்பினில்!
இல்லாத கொங்கைக்கு!
கச்சித மானதொரு!
கச்சைஏன் ஆகின்றீர்?!
விண்மீன்களுக்கு நிகரான!
ஊர்வலம் நடத்திட!
மண்ணில் மலர்களுக்காய்!
முழங்கவரும் தொண்டர்களே!!
நீங்கள்...!
பெற்ற வெற்றிக்குப்!
பின்காணத் தோன்றாத!
அரசியல் வாதிகள்போல்!
அதிகாலை மறைவதேனோ?!
அகரம்.அமுதா

எல்லாக கண்களையும் இழந்த

தீபச்செல்வன்
சகோதரியின் கனவு!
-------------------------------------------------------!
யுத்தத்தை முடித்துத்திரும்பும்படி வழியனுப்பிய!
தன் இரண்டாவது கணவனையும்!
இழந்த சகோதரி!
இன்னும் உயிருடன் இருப்பதாக சொல்லியனுப்பியிருக்கிறாள்!
பதிலற்று கரைந்து கொண்டிருக்கின்றன!
என் வார்த்தைகள்!
நொந்துபோன குரல்களால்!
தன் காட்சிகளை அவள் கோரிக்கொண்டிருக்கிறாள்.!
எப்பொழுதும் அவளுக்கு!
முன்னாள் விளையாடித் திரிந்துகொண்டிருந்த!
தன் குழந்தைகளை தேடுகிறாள்.!
அழிக்கப்பட்ட காட்சிகள்!
ஆன்மைவை நிறைத்துக்கொண்டிருக்கின்றன!
எல்லாக் கண்களையும் இழந்துபோயிருக்கிறேன்!
என்பதை திரும்பத் திரும்ப சொல்கிறாள்!
கண்களை பிடுங்கிச் சென்ற ஷெல்!
அவளது இரண்டு பெண் குழந்தைகளையும் விழுத்திச் சென்றது.!
கண்களற்று துடித்துக்கொண்டிருக்கும் பொழுதுதான்!
அவள் மாபெரும் சனங்கள்!
கண்களை இழந்த!
மைதானத்தலிருந்து அகற்றப்பட்டாள்!
கண்கள் தொலைந்து போனது!
குழந்தைகளையும் கண்களையும் அவள் தேடிக்கொண்டிருந்தாள்!
சிதறிய குழந்தைகளின் குருதி!
காயமடைந்த அவளின் கண்கள் இருந்த இடத்தையும் நனைத்தன.!
குழந்தைகளின் குருதியால் ஊறியிருந்தபடி!
பெருநிலத்தை அவள் இறுதியில் பார்த்திருந்தாள்!
என்றும் தன்னால் தன் நிலத்தை!
பார்க்க முடியாதபடி திரும்பியிருக்கிறாள்.!
கடலால் கொண்டு செல்லப்பட்ட நாளிலிருந்து!
கனவிழந்து தன் உலகத்தை தேடிக்கொண்டிருக்கிறாள்!
உடலெங்கும் ஷெல் துண்டுகள் ஓடியலைகின்றன!
கண்களை இழந்த சகோதரி கனவுகளைப் பற்றியே பேசுகின்றாள்

பூக்கட்டும் புதிய புன்னகை.. ஏன் சினம்

சின்னு (சிவப்பிரகாசம்)
01.!
பூக்கட்டும் புதிய புன்னகை!
-------------------------------------!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூ விலங்குகள் அழியட்டும்!
ஒழியட்டும் ஒப்பாத கடமைகள்!
உணரட்டும் புதிய உலகினை!
கதவுகள் இங்கெதற்கு!
கயவர்கள் அழிந்தபின்னர்!
கடமைகள் இங்கெதற்கு!
உணர்வுகள் உணர்ந்த பின்னர்!
இருட்டினில் கோப்பெதர்க்கு!
இந்தியர் விழித்துவிட!
பகட்டினில் வாழ்வெதற்கு!
பட்டினிச் சாவிருக்க!
பகற்பொழுது தேவையில்லை!
பகலவன் உலா வர!
வழித் துணை தேவையில்லை!
மகேசன் பவனி வர!
பூக்கட்டும் புதிய புன்னகை!
பூவுலகு மீட்சி பெற!
உதிக்கட்டும் புதிய விதிமுறை!
அரசியலும் தூய்மை பெற!
இருட்டினில் சட்ட இயற்றலோ!
வெளிச்சம் கொண்டாருங்கள்!
குறைகள் நிறைய இருக்கலாம்!
வெளிச்சத்தில் செயல்படுங்கள்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புவியாளும் மன்னர்கள் மத்தியில்!
தேர்தலுக்கு வாக்களித்தால்!
முடியுமா மண்ணாலும் மன்னர் கடன்!
மடியட்டும் பழைய விதிமுறை!
தேர்தலுக்கு மட்டும் மன்னர் வரும் முறை!
வெளிவிடுங்கள் ஆட்சி முறையினை!
மன்னரும் அறிந்து கொள்ளட்டும்!
பூக்கட்டும் புதிய புன்னகை!
புகைந்து வாழும் மனிதர் வாழ்விலும்!
பட்டினிச் சாவிருக்க!
பகட்டான வாழ்வெதற்கு!
பகலவன் வந்தபின்னும்!
இருட்டறையில் கோப்பெதர்க்கு !
02.!
ஏன் சினம்!
-----------------!
சினத்தினை அழிக்கவல்ல!
சிறு துளி நஞ்சிருந்தால் -என்!
சிந்தைக்கு அளித்திடுங்கள்!
அகத்தினில் மகிழ்ந்திடுவேன்!
ஏழ்மைக்கு வாழ்க்கைப்பட்ட!
ஏழைக்குப் பிறந்திட்டதால்!
கூழுக்குக் கவலைப்பட்டே!
இளமை கழிந்ததுவே!
சினமென்றும் கொண்டதில்லை!
வயிற்றுப் பசியிருக்க!
சிறுவயது கழிந்துவிட!
கை கொண்டே உழைத்து நானும்!
கனவுகள் வளர்த்துக்கொண்டேன்!
மணம் கொண்ட மங்கை நல்லாள்!
மகிழ்ந்திருக்க குழந்தைகள்!
என்வாழ்வும் வளம் கொள்ள!
சிறு பிழையும் சேர்ந்திடவே!
சிறுகுழந்தை வயதுவந்து!
வாழ்வும் தேடிடவே!
சினம் எனைச் சேர்ந்திடுதே!
அவன் வழி அவன் தேட!
என் மனம்!
ஏன் கொள்ளுது பெருஞ்சினம்

பக்தனைத் தேடி......?

நண்பன்
கடவுளைக் காண!
கிளம்பியது கூட்டம்!
கையில் கிடைத்த!
வாகனம் ஏற..!
நடுவழியில்!
சந்தேகம் வந்தது -!
கடவுள் எங்கிருக்கிறார்?!
பக்கத்தில்!
நின்ற வாகன ஓட்டியிடம்!
விசாரணை.....!
விரைந்து செல்லுங்கள் -!
நடை சாத்தும் நேரம்,!
அண்ணா சாலை வளைவில்!
தேவி தியேட்டர்களில்!
ஏதாவது ஒன்றில்....!
ஏதாவது சாலை ஒன்றில்!
பக்தர்கள் சென்ற!
வாகனம் துப்பிய!
அமில வாயுக்களால்,!
சுவாசிக்கத் திணறும்!
மலரொன்றை!
கவிதை ஒன்றால்!
வருடிக் கொண்டே!
தன் பக்தனை!
தேடிக் கொண்டிருக்கக் கூடும்........!
கடவுள் புன்னகையுடன்.......!
_________________!
நண்பன்

விஞ்ஞானம்

சென்னை - நவின், இர்வைன்
விஞ்ஞானம் தோற்கிறது!!
என்னவள்!
உள்ளிழுத்து!
வெளிவிடும் மூச்சுக்காற்றுக் !
கார்பன் டை ஆக்ஸைடாம் !
யார் சொன்னது? !
பிறகெப்படி நான்!
இத்தனை நாள் உயிரோடு!?!

திறவியல்

கார்த்தி.என்
01.!
ஒரே பூட்டை!
மூன்று சாவிகள்!
திறந்தன!
நான்!
ஒன்றைத் தேர்ந்தெடுத்தேன்!
இரண்டைத்!
தொலைக்க!
முடிவெடுத்தேன்.!
!
02.!
அலுவலகப் பெற்றோர்..!
பள்ளி முடித்து!
வீடு திரும்பும்!
குழந்தைக்கு!
எதிர் வீட்டு அக்காவோ!
மளிகைக் கடை மாமாவோ!
தினம் சாவி கொடுக்கும்!
பொம்மைகள்..!
!
03.!
பாதி வழியில்!
திரும்பிச் சென்று!
இழுத்துப் பார்த்த!
அத்தனை முறையும்!
கையோடு வருவதாயில்லை!
வாயிற் பூட்டும்!
வாழ்ந்த நாட்களும்

கண்டுகொண்டேனடி

ந.பரணீதரன்
பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே !
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ !
ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு !
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ !
மனதின் உள்ளே மையல்கொண்டு !
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய் !
உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க !
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன் !
உன் குரலோசைக் குயில் கீதத்தில் !
வார்த்தைகளை மிழுங்கும் !
அந்த நிமிடத்தில் !
என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான !
உன் சிம்பொனிச்சிரிப்பில் !
என் கவிதைகளை நிராகரித்த உன் !
மனதின் பயப்பிராந்தில் !
நான் கண்டுகொண்டேனடி. . !
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை !
என்தன் நினைவுகளால் !
உடையும் உன் பிஞ்சு இதயத்தை !
நானே அறிந்தேனடி. . !
புன்னகை சிந்தும் உன் !
பூவிதழ்களின் மேலே !
உறக்கம் மறந்த உன் !
விழிப்பாவையினுள்ளே !
பூமி கீறும் உன் !
பிஞ்சு விரல்களினுள்ளே !
நான் கண்டேனடி . . !
என்தன் காதல் ஒளிந்திருப்பதை !
வெறுத்த உன் உள்ளம் !
என்னை விரும்பி அழைப்பதில் !
சிறுத்த உன் இடை அடிக்கடி !
சிலிர்த்துக்கொள்வதில் !
கருத்த கூந்தல் எப்போதும் !
சோர்ந்து வீழ்வதில் !
நான் கண்டேனடி . !
கசங்கும் என் இதயத்தை

பூவையின் எண்ணங்கள்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
பொறித்து விட்டேன் மனதில் !
பொன்மகள் பெயரை !
போகாதம்மா நெஞ்சை விட்டு !
பூங்கொடி உன் நினைவுகள் !
காற்றாக வந்தாயோ என் !
கவிதையில் கலந்தாயோ !
நேற்றாக இருந்தாயே !
நினைவாக நிறைந்தாயோ !
மாற்றாத கோலத்தில் !
மங்கையுன் புன்னகை !
மணிக்கணக்கில் பேசினாலும் !
முடியாத பேச்சுக்கள் !
தோன்றாது புவியிலிது போல !
தோற்காத காதல் !
தோகைமயிலே ஒன்றுசொல்வேன் !
துணை இனியெனக்கு நீதானே !
அன்புடன் !
சக்தி

பொம்மையாதல்... பூக்களில்

நிலாரசிகன்
1.பொம்மையாதல்...!
உன் ஆதிக்கத்தை!
முழுமையாக!
தாங்கிக்கொண்டு!
நிழலாக தொடர்கிறது!
என் நிஜங்கள்...!
மிகச்சிறந்த ஓவியத்தை!
தனதாக்கிவிட்ட பெருமையில்!
வலம் வரும் உன் காலடியில்!
சிதைந்த ஓவியமாய்!
நசுங்குகிறது!
என் விருப்பங்கள்..!
என் பதில் எதிர்பாராத!
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்!
உன் முன்னால் ஒரு!
பொம்மையாக தினம்தினம்!
உணர்வற்றுப்போகிறது!
என் பெண்மை.!
!
2.பூக்களில் உறங்கும் மெளனங்கள்...!
உன்னிடம் மென்மை!
எதிர்பார்த்து ஏமாந்து!
முள்ளில் விழுந்த பூவென!
நான் துடிக்கும் தருணங்களில்!
தட்டானின் சிறகுகளை!
பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்!
எவ்வித குற்றவுணர்வுமின்றி!
எனை ஆட்கொள்கிறாய் நீ.!
ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்!
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்!
ஊமையாகிறது என் பெண்மை.!
ஆயுதமற்ற போர்க்களத்தின்!
தினம் தினம் பூக்கள் சுமந்து!
வந்து சருகாகித் திரும்புகிறேன்.!
கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க!
இயலாமல் விடியலுக்காக!
காயங்களுடன் காத்திருக்கிறேன்!
பூக்களில் உறங்கும் மெளனமாக.!
-நிலாரசிகன்.!
!
-- !
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்