தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வேண்டும் வீரப்பன்கள்

ஜான் பீ. பெனடிக்ட்
செய்தி: வீரப்பன் காட்டில் களைகட்டுகிறது 'ரியல் எஸ்டேட்' தொழில்!
காட்டு வளமே நாட்டு வளம்!
கற்றுத் தருது பள்ளிக்கூடம்!
காட்டை அழித்து நாடாக்குது!
காசு குவிக்கும் வஞ்சகர் கூட்டம்!
அதிரடிப்படை தவிர்த்த அத்தனையும்!
அருகில் வராது ஆண்டு வந்தான்!
ஆடு மாடு விலங்குகள் மேய்ந்திடவும்!
அடுப்பெரிக்க சுள்ளிக்கும் ஆவணம் செய்தான்!
வீரப்பன் வீழ்ந்த விவரம் கேட்டதும்!
வீறுகொண் டெழுந்தன விளம்பரப் பலகைகள்!
ஊட்டி முதுமலை போல் ரிசார்ட் கட்ட!
உகந்த இடம் சத்தியமங்கலம் காடென!
மீசைக்கார வீரப்பனால்!
நாசமானது சந்தனமும் யானையுமே!
நாசக்கார பெரும்புள்ளிகளால்!
மோசம் போச்சு ஒட்டுமொத்த வனவளமே!
களிறுகளைக் கொன்ற கயவனே யாயினும்!
காட்டைக் காத்திட்ட காவலன் அவன்!
வேகமாய் அழியும் காட்டுவளம் காக்க!
வேண்டும் காட்டுக்கொரு வீரப்பன் தானே!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

அது

முத்துவேல்.ச
23 வருடங்களாகியும்!
'அது'!
ஒரு கையளவு நீளமே!
வளர்ந்திருந்தது!
அதன் தங்கை!
திருமணத்திற்குத்!
தயாராகிவிட்டாள்.!
அதுவும் பெண்தான்.!
பேசாது.!
நடக்காது!
இன்று பிறந்தாற் போல்தான்.!
இன்றைக்காவது!
கொன்றே விடுவதென!
தீர்மானமாய்!
கழுத்தை நெரிக்கப் போன!
தந்தையைப் பார்த்து!
அது ஏனோ சிரித்து வைத்தது!
சிரிப்பில் சிதறுண்டுபோன தந்தை!
கொலைப்பழி நேராமல்!
திரும்பி விடுகிறார்.!
-ச.முத்துவேல்

மாமிஷ தின்னி!

ஜே.பிரோஸ்கான்
முளைத்து விட்ட அல்லது!
முளைக்க வைத்து விட்ட!
பெருமை கொண்டு சீறும்!
மிருகத்தைக் கொண்ட வனத்தின்!
ராஜ்ஜிய அடக்குமுறையில்!
அவிழ்த்து எறியப்படுகின்ற!
மான்களின் மேலான வேட்டை அம்புகளின்!
கூர் முனையின் கீழாக!
சொட்டும் குருதியின் நிகழ்காலத்தில்!
தடை செய்யப்பட்ட மாமிஷத்தின்!
சதைப்பிண்டங்களை அள்ளி அள்ளி!
பசீ தீர்க்கும் பெருத்த மிருகத்தின் பாய்ச்சல்!
புனிதம் மனக்கும் கறித்துண்டுகளை!
சுவைக்கும் அதனுடைய எண்ணம்!
கலிஷரத் தனமானதுதான்.!

ஒரு தாயின் சோகத்தில்

புஸ்பா கிறிஸ்ரி
மனமே மனித மனமே !
இன்னமும் எதற்கு !
இந்தச் சோகம்? !
யார் உன்னை !
அடித்தார்கள்? !
உன்னை இந்தச் !
சாக்கடையில் !
தள்ளியவர்கள்.. !
இன்று சுதந்திரமாகச் !
சுற்றித் திரிகின்றார்கள். !
அன்று உன்னை !
அணைக்க மறந்தவர்கள் !
உன் நண்பர்களா? !
ஏன் உன் வாழ்வு !
மரணித்திருக்கிறது? !
உன் வாழ்க்கைப் புத்தகம் !
மூடப்பட்டிருந்ததா? !
அது என்றாவது !
திறக்கப் பட்டு !
படிக்கப் பட்டு !
அதனால் !
திருந்தப் போகும் !
நிலை..உன் மறு !
நண்பர்களுக்காவது !
வரட்டும்.. !
அன்று நீ !
திருந்தியிருந்தால் !
இன்றைய சிறைக்கூடம் !
வேறு யாருக்கோ !
உபயோகப் பட்டிருக்கும். !
உன் வீட்டின் அறை !
உனக்காகத் தான் !
காலியாக இருக்கிறது. !
நீ வரும் நாளில் !
உன் மனமாற்றத்திற்காக !
ஏங்கிக் கிடக்கும் !
உன் தாயின் !
கருணை உள்ளம் !
இன்றும் உனக்காக !
அழுகிறது. !
நீயும் அழுது விடு !
இனியேனும் திருந்தி விடு. !
வாழ்க்கை உன்னை !
மன்னிக்கக் காத்திருக்கிறது !
நீ தயாரா? !
தயவு செய்து தயாராகி !
வெளியே வா. !
இனியும் தவற வேண்டாம்.. !
தாயை நேசித்து வா.. !
!
-புஷ்பா கிறிஸ்ரி

கடைசி பேருந்து... நாங்கள் பூக்களாக

கே.பாலமுருகன்
கடைசி பேருந்து... நாங்கள் பூக்களாக!
---------------------------------------------------!
1. கடைசி பேருந்து!
கடைசி பேருந்திற்காக!
நின்றிருந்த போது!
இரவு அடர்ந்து!
வளர்ந்திருந்தது!!
மனித இடைவெளி!
விழுந்து!
நகரம் இறந்திருந்தது!!
சாலையின் பிரதான!
குப்பை தொட்டி!
கிளர்ச்சியாளர்கள்!
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!!
பேருந்தின் காத்திருப்பு!
இருக்கையிலிருந்து!
விழித்தெழுகிறான் ஒருவன்!!
நகர மனிதர்களின்!
சலனம்!
காணமல் போயிருந்தது!!
விரைவு உணவுகளின்!
மிச்சம் மீதியில்!
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!!
ஊடுருவி ஊடுருவி!
யார் யாரோ திடீரென!
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!!
கறுப்பு மனிதர்களின்!
நடமாட்டம்!!
பேருந்து நிற்குமிடம் மட்டும்!
குறைந்த வெளிச்சத்தில். . .!
ஒரு சிறுமி!
சாலையைக் கடந்து!
வெருங்கால்களில் இருண்டுவிட்ட!
கடைவரிசைகளை நோக்கி!
ஓடும்போதுதான்!
கடைசி பேருந்து!
வந்து சேர்ந்திருந்தது!!
இரு நகர பயணிகள் மட்டும்!
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்!
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க!
அபார வெளிச்சம்!!
கடைசி பேருந்து!
கொஞ்சம் தாமதமாகவே!
வந்திருக்கலாம்!!
2.நாங்கள் பூக்களாக இருக்கிறோம்!
கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்!
வாழ்ந்தே பழகிவிட்டோம்!!
எங்கள் வீதிகளின்!
மரங்களெல்லாம் பேசுகின்றன!!
நாங்கள் நடந்து வருகையில்!
கிளைகளால் உரசி!
எங்களை தேற்றுகின்றன!!
எங்கள் பறவைகள்!
உறக்கத்திலும் சிறகுகளை!
முடக்குவதில்லை!!
சேற்றுக் குளங்கள்!
எங்களின் தாய் பூமியாக!
இருந்து வருகின்றன!!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!!
எங்கள் சாக்கடையிலும்!
தங்க மீன்கள்தான்!!
சிரிக்கின்றன பேசுகின்றன!!
நாங்கள் கடவுள்களை!
வணங்குவதில்லை. . .!
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்!
படையலுக்குச் சென்றதில்லை!!
எங்கள் மரங்கள்!
எங்களை உதிர்த்ததில்லை!!
என்ன ஆச்சர்யம்?!
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!!
- கே.பாலமுருகன்!
மலேசியா

சந்திப்பு

கனக.ஈஸ்வரகுமார்
கடலோரம் காத்திருந்தாய் - !
கவிதையொன்று கேட்டிருந்தாய்-அதை !
கடிதமாக தந்திருந்தாய்- இன்று !
காணும் வரை கண் விழித்திருந்து !
காதலின் முகவரியை தேடுகிறாய் !
என்னை உணர்ந்த பின் -என் !
கவிதைகள் சுமந்து வந்த உந்தன் !
கனவுகளையும் அறிந்திருப்பாய் !
கனக.ஈஸ்வரகுமார்

போல

பாண்டூ
குழந்தை அழும் ! !
அழுவதால் நீ !
குழந்தையாக முடியாது ! !
பூ புன்னகைக்கும் ! !
புன்னகைப்பதால் நீ !
பூவாக முடியாது ! !
காற்று தழுவும் ! !
தழுவுவதால் நீ !
காற்றாக முடியாது ! !
நதி ஓடும் ! !
ஓடுவதால் நீ !
நதியாக முடியாது ! !
மழைத்துளி விழும் ! !
விழுவதால் நீ !
மழைத்துளியாக முடியாது ! !
வானவில் வளையும் ! !
வளைவதால் நீ !
வானவில்லாக முடியாது ! !
கம்பன் கவிசெய்தான் ! !
கவிசெய்வதால் நீ !
கம்பனாக முடியாது ! !
மாதிரியின் முகமூடியில் !
தன் முகவரி இழந்தவனே ! !
நில்! !
சூரியன் தனை உள்வாங்கித் !
தன் சுயம் இழக்காத !
நிலவைப் பார் ! !
கவனி ! !
மாதிரியைப் படி !
அதன் மாதிரி நீ !
ஆகிவிடாதபடி ! !
செல் ! !
மாதிரியைத் தொடர்ந்து அல்ல ! !
மாதிரியின் பாதைகளில் !
தொடர்ந்து... !
போலச் செய்து !
போலியாகி விடாதே ! !
மாதிரி !
சூரிய ஒளிகீற்றுகள் தான் ! !
அதில் !
உன் சுயமெனும் !
கண்களை இழந்துவிடாதே ! !
மாதிரியை !
உன் தோளில் வை ! !
மாதிரியின் தோளில் !
நீ சவாரி செய்யாதே ! !
ஏனென்றால் !
உன் சுவடுகள் !
தெரியாமல் போய்விடும் ! !
!
பாண்டூ ... !
சிவகாசி.
+91 98421-42192

எனது அறை.. எனது காதல்.. தெரியாமல்

இராமசாமி ரமேஷ்
எனது அறைகூவல்.. எனது காதல்.. தெரியாமல்!
01.!
எனது அறைகூவல்!
.............................!
என்!
உடம்பைத் தின்ற!
மனிதர்கள் தான் -இப்போது!
என் பெண்மையைப் பற்றி!
விமர்சிக்கிறார்கள் ...!
என்னை!
அங்குலம் அங்குலமாக!
அனுபவித்தவர்கள் தான்!
நான் வேசி என!
விபரிக்கிறார்கள்.....!
எனது!
அதரங்களையும்!
அந்தரங்கங்களையும் அணைத்து!
போதையில் மிதந்தவர்கள் தான்!
என்னை -நடத்தை கெட்டவள் என்று!
நக்கலடிக்கிறார்கள் ...!
நானே சொர்க்கமென!
நாளாந்தம் வந்து போனவர்கள்தான்!
எனக்கு பலவிதமான!
பட்டப் பெயர்களை!
பரிசளித்து மகிழ்கிறார்கள்...!
என்னை அணைத்து!
உடலை நுகர்ந்து!
என் இளமையையும் வாழ்க்கையையும்!
கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களே!
இன்று-என்னை!
கொல்லப்போவதாய்!
கோஷமிடுகிறார்கள்...!
அரசியல்வாதியிலிருந்து!
அன்றாடங் காய்ச்சி வரை!
ஆடையிழந்து என் முன்னே!
நிர்வாணமாய் கிடந்தவர்கள்!
என்னை துயில் உரிந்து!
துரத்துவதற்கு திட்டமிடுகிறார்கள்..!
சமூகமே சமூகமே !!!
உங்களில் ஒருவன்!
ஒருத்தியோடு வாழ்பவன்!
ஒருவர் வந்து சொல்லுங்கள்!
உடனடியாய் நானும்!
ஊரைவிட்டுப் போகிறேன்..!
02.!
எனது காதல்!
-------------------!
அன்பே!!
அன்று உன்னை!
காதலித்தேன்....!
என் உண்மைக்காதலை!
நீ ஏற்றுக்கொள்ளவில்லை!
தட்டிக்கழித்தாய்...!
இன்றும் உண்னைக் காதலிக்கிறேன்!
ஆனால்...!
தட்டிக்கழிக்க நீயில்லை!!
நீ ஏற்காத!
எனது உண்மைக்காதலினால்!
இப்போது நனைந்துகொண்டிருக்கிறது!
உனது கல்லறை...!
!
03.!
தெரியாமல்!
-----------------!
எங்கள் தேசம்!
மலர்ந்துகொண்டிருப்பதாக!
சிலர் சொல்கிறார்கள்நாங்கள்!
மடிந்துகொண்டிருப்பது!
தெரியாமல்...!
வசந்தம்!
வீசத்தொடங்கியிருப்பதாக!
வாழ்த்துப் பாடுகிறார்கள்!
நாங்கள்!
புயலுக்குள் சிக்குண்டு!
புதைந்து போவது!
தெரியாமல்...!
இழப்புக்களை!
ஈடுசெய்யப்படுவதாக!
பறையடிக்கிறார்கள்!
நாங்கள்!
இழந்தவைகளை!
இனிமேலும் பெறமுடியாதென்று!
தெரியாமல்...!
மீண்டுமொரு புதுவுலகை!
எமக்கு!
தந்திருப்பதாய் மகிழ்கிறார்கள்!
நாங்கள்!
தாய்மண்ணை இழந்துவிட்டு!
தவித்துக்கொண்டிருப்பது தெரியாமல்...!
இனிமேல்!
எமக்கான மீட்பர்களாய்!
நாமுள்ளோமென!
புகழுரைக்கிறார்கள்!
நாங்கள்!
அவலச் சிலுவைகளை!
சுமந்துகொண்டிருப்பது!
தெரியாமல்...!
மன்னிக்க வேண்டும்!
மீட்பர்களே!!
உங்களால் எம்துயரை!
தீர்க்க முடியாது போனால்!
போகட்டும்!
எம்மீது திணித்த!
பாவச்சிலுவைகளையேனும்!
எடுத்து விடுங்கள்!
நாங்கள் நாங்களாகவே!
எமக்கான!
இடர்களை நீக்கி!
எழுந்து கொள்கிறோம்

எதார்த்தத்தின் நிழலில்

தமிழ் ராஜா
இன்றும் நான் பேருந்தில் தான்!
பயணம் செய்து கொண்டிருக்கிறேன்!
நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து.......!
உன்னுடைய விமானப் பயணம்!
எப்படி இருந்த தென்று!
நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள்!
என்னைத் தவிர....... .!
என்னுடைய விசாரிப்பை!
நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய்!
என்பதை நானறிவேன்!
நம்முடைய வாழ்க்கை தான்!
எவ்வளவு சீக்கிரத்தில்!
எதார்த்தத்தின் நிழலில்!
சரணடைந்து விட்டது.........!
என்னுடைய டைரியில்!
உனது பெயர் இடம்பெறுவது!
அரிதாகிவிட்டது!
உனது நினைவை எப்பொழுதாவது!
ஒரு முறைத் தூண்டும்!
கனவு கூட இப்பொழுதெல்லாம்!
வருவதில்லை!
நான் உறங்குவதே இல்லையென்பதால்....!
எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!!
உன்னை மறந்ததில் எனக்கு...!
பெருமிதமாக்த் தான் இருந்தேன்!
உன் குரலை அலைப் பேசியில்!
கேட்கும் வரை......!
எப்படி இருக்கிறாய்?!
என உன் குரல்!
ஒலிக்கையில்.....!
நலமென்று சொல்ல மட்டும்!
பொய்யெனக்கு வரவில்லை!
ஆனால் நீ மட்டும் சொன்னாய்.......!
- தமிழ்ராஜா

ஆயுதபூசை

தமிழ்நேசன், கரிக்கலாம்பாடி
இன்று எங்கள் ஊரில்!
ஆயுதபூசை!
மேல்நாட்டாரின் அறிவியலால்!
கண்டுபிடிக்கப்பட்ட கருவிகள்!
அனைத்தும் கழுவப்பட்டன.!!
எங்கள் அலுவலகக்!
கணிப்பொறியும் தப்பவில்லை!!
மஞ்சளோடும் குங்குமத்தோடும்!
மாலைகளும் சூட்டப்பட்டன!!
இனமானம் இழந்த எம்!
தமிழரின் மூளைஆயுதம் மட்டும்!
தூசுதுடைக்கப்படாமல்!
அட்டகாசமாய் நிறைவேறியது!
ஆயுதபூசை