தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அழகுச் சொல்லொன்று வேண்டும்

சின்னு (சிவப்பிரகாசம்)
அழகுச் சொல்லொன்று வேண்டும்!
அறிவெது சொல்லிடத் தான் வேண்டும்!
இழியது இவ்வுலகில் இல்லை!
இயற்றிய பொருளில் வாழ்ந்தால்!
என்று சொல்லிடவும் வேண்டும்!
தொடர்கதை போலன்று வாழ்வு!
விட்டுத் தொடர்ந்திட முயன்றால்!
துரத்திடும் சாவு!
என ஓதிடவும் வேண்டும்!
கொடியது இவ்வுலகில் இல்லை- அனைவரும்!
கொற்றவர் ஆவதும் இல்லை - வாழ்வில்!
தோல்வி என்பது இல்லை - வாழ்வை!
வென்றார் எவரும் இல்லை!
என ஓங்கி உரைத்திட வேண்டும்!
அன்பைச் சொல்லிடவேண்டும்!
ஆனந்தம் எதுவென்றும் சொல்லும்!
அழகுச் சொல்லொன்று வேண்டும்!
செந்தமிழ்ச் சொல்லொன்று வேண்டும்!
சென்னியில் உரைத்திட வேண்டும்

நிற்காமல் நின்றுகொண்டு

அத்திவெட்டி ஜோதிபாரதி
பள்ளி விட்டதும்!
எங்கும் நிற்காமல்!
வீட்டுக்கு வந்துவிடு!
அம்மா சொன்னது!
மனதில் ஒலித்தது!
காத்திருந்தேன் பேருந்துக்காக!
இருட்டியதும் வந்தது!
பேருந்து இறுமாப்புடன்!
இடம் கிடைக்குமா என்ற!
ஏக்கத்துடன் படியில்!
உந்தி ஏறியதும்!
நிற்காமல் பறந்தனர்!
நடத்துனரும் ஓட்டுனரும்!
மதியம் உண்ட களைப்பில்!
மயங்கிப்போய் நான்!
இருக்கையில் இருக்க !
இடமில்லாமல்!
நின்று கொண்டே விழுந்தேன்!
தூக்கம் சொக்கியதும்!
இடம் வந்ததும்!
இறங்கிக்கொண்டேன்!
எதுவுமே தெரியாத இருட்டு!
இருந்தாலும் கண்டேன்!
தெரியாத தெருவும்!
எரியாத விளக்கும்!
அதற்குத்தான்!
தெருவிளக்கென்று பேரோ?!
கும்மிருட்டில் காத்திருந்த!
சிற்றொளிக் கைவிளக்கு!
தம்பி என்று தழுவிக்கொண்டது!
என் தாய்.!
!
-அத்திவெட்டி ஜோதிபாரதி

பிறவாத மகளுக்கு

கீதா ரங்கராஜன்
பரவசம் அளித்திடும் நீ உயிர்த்தெழும் தருணத்தை!
சிலிர்ப்புடன் உணர்ந்திட துடித்திடும் தாய் நான்!
கிளி என மிழற்றிடும் உன் கனி மொழி அமுதினை!
களிப்புடன் பருகிட தவித்திடும் தாய் நான்!
நான் உணர்ந்திடும் அனைத்தையும் உனக்குள்ளே விதைத்திட!
அடங்கொனா ஆவலில் திளைத்திடும் தாய் நான்!
என் விழி எனும் வாசலில் கனவுகள் பயிரிட!
வெற்றிடம் நிரப்பிட விரைந்து வாராயோ

வாழ்க்கை.. துப்பாக்கிகள்.. வாழை குலை

முல்லை அமுதன்
வாழ்க்கை!
------------!
எப்போதும்!
வேர்களின்!
நம்பிக்கையில் இறுமாப்புடன்!
நிற்கும்...!
புயல்!
வந்து மோதினாலும்!
வெற்றிவீரனாகவே சாயும்..!
நாணல்!
மரத்தைப் பார்த்தே கிண்டலடிக்கும்..!
தன்னைப்போல்!
இரு...!
வாழலாம்...!
பூக்கள்!
வண்டுடன் காமுற்ற!
போதையில்!
கிடக்கும்..!
இலைகள் யாராவது !
உரசமாட்டார்களா !
என்று சிலிர்த்து !
நிற்கும்...!
சருகாவதற்குள்!
வாழ்வை !
அனுபவித்துவிடும் துடிப்பு...!
மரம்!
தன்னில் !
முளைத்தவற்றைப் பார்த்து !
சிரித்துக் கொண்டாலும்!
மௌனமாகவே!
நிற்கும்..கம்பீரமாக..!
இலைகளும்..பூக்களும்!
விசுவாசமாகவே!
இருக்கும்!
என்கிற!
நம்பிக்கையில்!
குருவிச்சை!
ஒட்டி!
முளைத்ததை!
அறியாமாலேயே வளர்ந்தது.!
பூக்களின்!
காமம்,!
இலைகள்!
குருவிச்சையுடனான !
உரசல்..!
மரத்தை!
வெட்டிச் சாய்க்க!
சரிந்து வீழ்ந்தது...!
வேர்கள்!
மட்டும் கவலைப்படாதே...!
இதுதான் வாழ்க்கை...!
நானிருக்கிறேன்..!
என்னிலிருந்து!
புதிதாய்!
வீச்சுடன் மரம் !
முளைக்கும் என்றது....!
02.!
துப்பாக்கிகள்!
----------------------!
துப்பாக்கிகள் கூட!
அகிம்சை !
பற்றி !
போதிக்கிறது.!
சமாதானம் பேசிய படியே!
எங்களூரில்!
இயந்திர வாகனங்கள்!
வந்தன..!
குழந்தைகளின் தலைகளை!
நெரித்தபடி..!
இராணுவம்!
வயிற்றை கிழித்து!
பயங்கரவாதியைத் தேடுகிறான்..!
வகுப்பறையில்!
தலமைஆசிரியர் முன் நின்றேன்!
எங்கு!
குண்டு வைத்தாய் !
என்ற விசாரனைக்காக...!
நீ சுட்டாய்..!
தீவிரவாதி என்று நீயே!
சொல்லிக்கொள்கிறாய்..!
ஆமாம் என்கிறார்கள்!
அண்டி நிற்பவர்கள்.!
இறந்த பின்!
எந்த உடன்படிக்கையின் கீழ்!
என்!
பிணத்தை!
விசாரனை செய்யப்போகிறீர்கள்?!
03.!
வாழை குலை!
---------------------!
வாழை குலை!
தள்ளி!
மகிழ்ச்சியாய்!
முற்றத்தில் நின்றது.!
கிணற்றடியில்!
நின்று வாழையைப் !
பார்த்தால்!
அப்பாவின் முகத்திலும் மகிழ்வு!
பொங்கும்...!
உறவுகள்!
விரதம் என்று !
இலைகளை வெட்டிச் செல்வர்.!
தங்கை!
கணவனுக்குப் பிடிக்கும்!
என்று!
பொத்தியை !
கொண்டு சென்றாள்.!
மிச்சமிருந்த குலையை !
மருமக்கள் உரிமையுடன்!
பங்கு போட்டனர்.!
போதாதற்கு-!
வாசிகசாலைக்காரரும்!
விளக்கீட்டுக்கென!
குத்தியை வெட்டிச் செல்ல!
மொட்டையாய் !
அந்த வாழை மரம்..!
அப்போதும் அப்பா !
சிரித்தபடியே இருந்தார் !
புகைப்படமாய்

கவிதை

மின்னல் இளவரசன்
வார்த்தைகள் தவமிருக்கும் கூடாரம்!
வாழ்க்கை நமக்களித்த இளைப்பாறுதல்!
உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்வலைகள்!
கால வெள்ளத்தால்!
அழியாத கனவு பெட்டகம்!
காலத்தின் கண்ணாடி!
கற்பனைகளின் முன்னோடி!
நிறைவேறா ஆசைகளின்!
நிழல் வடிவம்!
உள்ளதை உரைத்து!
நல்லதை விதைக்கும் நல் ஆசான்!
அல்லவை போக்கி!
நல்லவை தரும் நண்பன்!
உன்னதத்தை நோக்கிய பயணம்!
உயர்வைதேடும் இமயம்!
வார்த்தைகளை இணைக்கும் விளையாட்டு!
வருங்காலத்தை பாடும்!
வசந்த ராகம்!
கோடையில் வீசும் தென்றல்!
குளிர்விக்க வந்த மலைச்சாரல்!
எழுத்துக்களை மாலையாக்கி!
சிந்தனையை சீர்படுத்தும் பூஞ்சோலை

தெய்வம் தெரிய மனிதம் தொழு

வித்யாசாகர்
புண் போல மனசு முள்போல எண்ணம் !
எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை,!
இங்கே யார்மேல் வருந்தி !
யாருக்கென்னப் பயன்.. ?!
ஒரு சொட்டு உண்மை !
சிறுதுளி கருணை !
உருகாத மனசுருக; உள்ளேப் !
பேரன்பு ஊறாதோ...?!
கோபத்தை முட்களுள் தொலைக்கும்!
நினைக்க மனசு துடிக்கும் !
மன்னிப்பில் எல்லாம் மறக்கும்!
மனசெங்கும் வாராதோ... ?!
அன்பிற்கே அணங்கும் உடம்பு!
அடுத்தவற்கழவே கண்ணீர்!
கொடுக்க உயிர்!
கொஞ்சும் தீண்டலில் கொடுவாள் உடையாதோ...?!
கைத்தடிபோல் பெரியோர்!
ஊனியெழ பாடம்!
விளங்கிக்கொள்ள வலி!
வாழ்க்கை' திருத்தத்தைத் தாராதோ...?!
திட்டம் விடு இயல்பு உணர்!
திருப்பி அடித்தாலும்!
திருத்த யோசி!
திருந்தா உள்ளமும் வலிக்காதோ...?!
நல்லது செய்!
கெட்டதைத் தவிர்!
கல்லுக்கும் புல்லுக்கும்கூட!
மனதைத் திற; சமயம் சொல்படி கேளாதோ...?!
மொத்தத்தில் - சுயநலம் விடு!
மனிதம் கொள்!
மனமாசு அறு!
மறுபக்கமிருக்கும் தெய்வம்; தோல்வியை மற!!!

இதமாய் இனிக்கிறது

உடுவையூர் த.தர்ஷன்
ஒருமுறை உன்னை பார்த்தேனே -என் !
இதயம் உடைந்ததடி !
மறுமுறை உன்னை ரசித்தேனே -என் !
இளமை கொல்லுதடி !
நீ முத்தம் சிந்தவில்லை - ஆனால் !
இதமாய் இனிக்கிறது !
நீ கவிதை பேசவில்லை -ஆனால் !
மனசும் இசைக்கிறது !
விழியினில் விழுந்திட்ட ஒரு விதை நீ !
நினைவினில் வளர்ந்திடும் ஒரு செடி நீ!
உயிரினில் உலவிடும் ஒரு மதி நீ!
உதட்டினில் பிறந்திடும் ஒரு மொழி நீ!
பூக்களின் இதழில் உந்தன் வதனம் !
நிலவின் மடியில் உந்தன் புருவம் !
கண்களை திறந்தாய் பகலின் ஜனனம் !
கூந்தலை கலைத்தாய் இரவின் மரணம் !
காதல் செய்தேன் உன்னை மட்டும் !
கனவில் காப்பேன் உன்னை மட்டும் !
நெஞ்சில் சுமந்தேன் உன்னை மட்டும் !
என்னுயிர் கொடுப்பேன் உனக்காய் மட்டும் !
முளைக்கின்ற தடங்களில் இருப்பிடம் அமைத்தேன் !
சிரிக்கின்ற விழிகளின் புதுமொழி படித்தேன் !
தவிக்கின்ற நிழலிடம் முகவரி கொடுத்தேன் !
பிரிகின்ற நொடியினில் என்னுயிர் விடுவேன்

நீல வானில்.. ஏன் படைத்தான் எம்மை?

கிரிகாசன்
நீல வானில் காணும் வாழ்க்கை..ஏன் படைத்தான் எம்மை?!
!
01.!
நீல வானில் காணும் வாழ்க்கை!
--------------------------------------------- !
நீலமேகமதில் ஆயிரம்தாரகை!
நீந்திட எங்குமொளிப் பிழம்பு!
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்!
காணும் சிவப்பொளி மஞ்சளுடன்!
ஊதாக் கடும்நீலம் உள்ளதொரு அண்டம்!
உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்!
காது ஓம் என்னுமோர் ரீங்கார ஓசையில்!
காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்!
சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்!
தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ!
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத்!
துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர!
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு!
நீலக்கரும்குழி தானுறிஞ்ச!
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகின்றேன்!
சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்!
காணும்பகற்கன வாலெழுந்து ஒரு!
கட்டிலில் சாய்ந்து முகில்களினை!
வானில் குரங்காக வண்ணத்துப் பூச்சியாய்!
வட்ட முகமாய் வடிவெடுக்கும்!
மீளப் பரந்து உருக்குலைந்துபஞ்சாய்!
மெல்லிய மேகம் பறந்துசெல்லும்!
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே!
தேவதையொன் றெழில் வானில்வந்தாள்!
அந்தோஅழகிய தேவதையே வெண்மை!
ஆடைகள் பூண்ட எழிலரசி!
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த!
மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்!
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்!
எங்குசென்றே அமைதி கொள்வேன்!
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்!
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன!
வானோ பிரபஞ்சமா யாக்கி விரித்ததில்!
வண்ணக் குழம்புகள் வைத்தது யார்!
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்!
காரணமென்ன அறிந்துளயோ!
ஆவி துறந்ததும் அண்ட வெளியினில்!
நாம்போகு பாதையோர் பால்வெளியோ!
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே!
தூரம் சென்றேநாம் உறங்குவமோ!
சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்!
காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்!
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்!
செல்லும் இடம்வெகு தூரமாசொல்!
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது!
முற்றியதும் அன்னம் உண்பதற்கு!
கல்லை யுடைத் தில்லம் கட்டுகிறோம்குளிர்!
காற்றும் விலங்கும் தவிர்ப்பதற்கு!
ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்!
ஆயின் பிறந்திட்ட காரணமென்!
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்!
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்!
வானில் தெரிந்திட்ட தேவதையோஒரு!
வண்ணத்தடியினைக் கையெடுத்தாள்!
தேனில் குழைத்திட்ட மென்குரலாலொரு!
சேதி சொல்லியொரு கோடுபோட்டாள்!
சின்ன மனிதனே உன்னைப் படைத்தவன்!
விண்ணில் பரந்தெங்கும் வாழுகிறான்!
பொன்னில் நதியினில் பூவில் குழந்தையில்!
பூமியெங்கும் அவன் ஆளுகின்றான்!
மின்னு மிடியையும் மேகத்து நீரையும்!
அள்ளி யெடுத்துப் பொழியவைத்தான்!
இன்பமிழைத்து மகிழவைத்தான் பின்பு!
துன்ப மெதுவென்று கொள்ளவைத்தான்!
கண்ணைவிழித்து கிடக்குமட்டுமொரு!
காரணமேதும் பெரிது இல்லை!
கண்ணைமூடி உயிர் சென்றுவிட்டால் இந்தக்!
காயமழிந்திட ஆவது என்?!
விண்ணின் திருமகள் வேடிக்கையாய்!
நகைசெய்து சுடரெழும் பூவிழிகள்!
எண்ணிச்சிரித்திட ஈதுசொன்னள்அந்த!
இன்பக் குரல்மணிநாதமெழ!
மண்ணில் விளைந்திட்ட உன்னுடல் மீண்டும்!
மண்ணுக்கென விட்டுஏகிடுவாய்!
விண்ணில் பறந்து, உலவி விளையாடி!
வேண்டும்வரை சுகம் காணுகிறாய்!
கண்ணில் தெரிகின்றகாட்சியெல்லாம் கடு!
வண்ணமலரின் வடிவங்களாம்!
விண்ணின் பெரு வாண வேடிக்கை என்பது!
வேண்டும்வரை காணும் இன்பங்களாம்!
மண்ணில் கொடுமைகள் செய்தவரோ பெரு!
மாயக் குழம்பினில் சிக்கவைத்து!
கன்னிச் சிவந்திட வெப்பமிட்டுஅவர்!
காது கிழிந்திடச் சத்தமிட்டு!
பொன்னைப் புடமிடச் செய்வது போலவர்!
பொல்லா மனதைப் புடமிடுவோம்!
முன்னர் இழைத்திட்ட பாவங்கள் தீர்ந்திட!
மீண்டும்பிறந்திட செய்துகொள்வோம்!
என்ன இழைத்துமே ஏது பயனவர்!
இத்தரை மீண்டதும் செய்வதெல்லாம்!
கன்னமிடுதலும் பொய்கொலையும்ஓர்!
காரணமின்றிக் கொடுமைகளே!
சொல்லச் சிறுதடி மீதிருந்துஒரு!
சின்னப்பொறி எழுந்தேபரவ!
இல்லையென அவள் ஆகியிருந்தது!
வெள்ளைமுகிலும் விண்நீலமுமே!!
மெல்லவிழிகளைமூடிநின்றேன் இந்த!
மேதினி மீது நடப்பதென்ன!
சொல்லிய தேவதை உண்மையிலோ அல்ல!
சொப்பனமோ புரியவில்லை!
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில!
விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்!
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு!
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்!
ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்!
அன்பினை மட்டு மிழந்துவிட்டார்!
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு!
நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்!
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை!
கேட்பதற்கு இங்கு யாருமில்லை!
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்!
கத்தி எடுப்பவன் தானே இறை!
எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்!
கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை!
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட!
வாழ்வுதனில் என்று தோன்றவில்லை!
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்த!
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன்!
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை!
தேவதையே கொஞ்சம் நில்லுஎன்றேன்!
02.!
ஏன் படைத்தான் எம்மை?!
-------------------------------------!
கண் படைத்தா னேன் அழுவதற்கா!
கால் படைத்தா னதைத் தொழுவதற்கா!
மண் படைத்தான் கீழ் விழுவதற்கா!
மனம்படைத்தான் அஞ்சி ஒழிவதற்கா!
விண் படைத்தான் ஒளி வருவதற்கா!
வீசுந் தென்றல்உயிர் தருவதற்கா!
கண்கள் மின்னும் பெரு இடியிடித்தே!
கடும்புயலாய் எம்மை வருத்திடவா!
பூக்கள் செய்தானதைப் பறித்திடவா!
பூவித ழேன்கைகள் பிரித்திடவா!
பூக்கள் வைத்தான்வண்டு குடித்திடவா!
போதை கொண்டேமலர் வருத்திடவா!
பாவை கொண்டாலெழில் பலிகொள்ளவா!
பருவ உடல்தினம் வதைசெய்யவா!
தேவை என்றாலின்பம் துய்த்திடவா!
தேடியதும் அதைத் தீயிடவா!
நாடு என்றால்அது நரகமதா!
நரபலி தானவர் அறநெறியா!
தேடு என்றால்ஒரு திரவியமா!
தீதுசெய்தே வரும் பாவங்களா!
அரசன் என்றால் அவன் அறிவுளனா!
ஆளைக்கொல்லும் ஒரு எமன்மகனா!
சிரசு கொய்தே அவன் சிரிப்பதற்கா!
சேவை என்றாலுயிர் குடிப்பதுவா!
இனமழித்தால் அது இறைமை என்றா!
இரத்தம் பட்டே செம்மைஅடைந்திடுமா!
தினம்படுபொய் சொல்லத் திறமைஎன்றா!
திருகு தாளம் சன நாயகமா!
உலகமென்றால் அது உழலுவதா!
உயிர்கள் என்றால்ஆடும் ஊஞ்சல்களா!
கலகமென்றால் பெருங்காவியமா!
கண்களில் நீரிடல் அரசாங்கமா!
வெட்டுகிறான் எமை விரட்டுகிறான்!
வேடிக்கை பார்ப்பது விரிஉலகா!
கட்டுகிறான் கடல் மீதெறிந்தான்!
கையறு நிலையாய் கவினுலகா!
எத்துணைநீசரை எதிர்த்து நின்றோம்!
எடுத்தடி வைத்தவர் திகைக்க வைத்தோம்!
நித்திலம்மீதினில்நேர்மைவெல்ல!
நெஞ்சினை முன்னே நிமிர்த்திவந்தோம்!
பூக்களைக் கொய்தனர் இடியிடிக்க!
புதுவிஷம் வைத்தனர் துடிதுடிக்க!
தீக்களை வைத்தனர் தெருமுழுக்க!
தீய்ந்தது ஈழம் தேம்பியழ!
ஒருவனை எதிர்த்தது உலகமெல்லாம்!
ஒருநிரைசேர்ந்தது உண்மை கொல்ல!
பெருகி யதோ பேரவலமல்ல!
பேய்களின் பிடியின் ஆழங்களே!
இறந்தது ஈழ தமிழனல்ல!
இயற்கையின் தர்மதிருவுளமே!
எரிந்தது தீயில் ஊர்களல்ல!
இறையவன் கோவில் வாசல்களே

தோழன் முத்துக்குமாருக்கும்

றஞ்சினி
தோழர் ரவிக்கும் மலேசியாவில் இறந்ததாக அறிந்த!
தோழருக்காகவும்....!
---------------------------------------------------------------------!
ஏன்!
தோழர்களே இந்தக்!
கொடிய!
முடிவு மூச்சடைத்து!
வார்த்தைகள்!
மறுக்கிறது ஓவெனக்!
கதறியழ!
உங்களைப்!
பெற்றவர்கள் உடன்பிறந்தோர்!
உறவுகள்!
தோழர்களுடன் இணைக்கிறேன்!
நானும்!
நெஞ்சு வலிக்கிறது!
கரம்குவித்துக் கேட்கிறோம்!
யாரும் இனி எடுக்காதீர்கள்!
இந்த!
முடிவை!
தோழர்களே!
ஈழத்துச்செய்திகள்!
உலுக்கிடும்!
இந்நேரம் உங்களையும்!
இழக்க தயாராக!
இல்லை நாம்!
..!
நெஞ்சு!
வலிக்கிறது தோழனே!
முத்துக்குமார் நீ!
எழுதிய சாசனம் மிகவும்!
வலியது!
இவ்வளவு!
அறிந்தும் எதுவுமே!
இயலாதென்று கருகிய!
உன்னுடல் சொல்லிய!
செய்திகள் உன்!
கடிதத்திலும் மேலானது!
நீங்கள் இறந்திருக்கக்கூடாது!
பாசிச!
அரசுகளுக்கு மனித!
உயிர்கள் பெரிதில்லை!
இந்த!
முடிவுக்கு உங்களைத்!
தள்ளியவர்களை வன்மையாகக்!
கண்டிக்கிறோம்!
நீ!
இட்ட தீ ஒளிக்கட்டும்!
இந்த!
அரசுகளை இதயம்!
வலிக்கிறது தோழர்களே இந்தக்கொடிய!
முடிவை எண்ணி!
நீங்கள்!
இறக்கவில்லை தோழர்களே!
வாழ்கிறீர்!
எம்முள்..!
-றஞ்சினி

முயற்சி

ரா.கணேஷ்
மின்விசிறியில் புடவையை!
கட்டி தொங்கவிட்டு!
கழுத்தில் இறுக்கி!
மனைவியின் வாசத்தோடு!
தோற்று விடாமலிருக்க!
எகிறி குதித்திருக்கிறாய்!
முயற்சி வலியது!
என்று!
தெரியாமலாவிருக்கும் உனக்கு ...?