தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தொங்கிக்கொண்டிருக்கும் எதிர்காலம்

மிருசுவிலூர் எஸ்.கார்த்தி
விடியும் விடியும்!
என்று காத்திருந்தோம்!
விழுகிறது!
இடிமேல் இடியாய்!
எங்கள்!
தலைகள்மேல் மட்டுமல்ல!
தலைமுறைகள் மீதும்!
குருதியில் மூழ்கும் உயிர்களில்!
மீழும் உயிர்கள் சிலவே!
கரிசனை கொண்ட!
சர்வதேசம் எமைக்!
காத்திடும் எனநம்பி!
காலங்கள்போகுதிங்கே!
காலனும் நெருங்கிறானெம்மை!!
தப்பிக்க வழியின்றி!
பதுங்குகுழி வாழ்க்கையில்!
பாதி ஆயுள் கழிகையில்!
அங்கே நீங்கள்!
உப்பில்லாப் பேச்சுக்களால்!
உம்மிருப்பை நிலை நிறுத்த!
ஊரூராய் போய்!
உபதேசம்செய்கிறீர்!
தினம் தினம் நீட்டப்பட்ட!
துப்பாக்கி முனைகளிலே!
தொங்கிக் கொண்டிருக்கிறது!
எமது எதிர்காலம்!
எப்போது தான்!
இந்தத் துப்பாக்கிகள்!
துருப்பிடிக்கப் போகின்றன.!
எப்போது தான் எமது கனவுகள்!
தூசுதட்டப் படப்போகின்றன!
எப்போது தான் எமது!
தலைகள் நிமிரப்போகின்றன

கனவுத் தூதுவன்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
கழிந்த எல்லா நாட்களைப் போலவே!
குறுகி வளைந்து கரடுமுரடாய்ச் செல்கிறது!
என் வழிப் பாதைகள்!
மரங்கள் தூவும் மகரந்தப் பூக்களும்!
மனம் இளக்கியோடும் மெல்லிய காற்றசைவுகளும்!
அவ்வசைவுகள் கொண்டு சேர்க்கும்!
பறவைச் சப்தங்களும்!
வானச் சூரியனின் விசையழுத்தமற்ற இளஞ்சூட்டுக் கதிர்களும்!
பயண வாழ்த்துக்களிடும் பாதை வழியர்களும்!
என் பாதை பக்கமும் படுப்பதில்லை!
படர்ந்து நீண்ட பிரயாசைப் பிரயாணங்களில்!
தனித்துப் போகிறது என் பாதை மட்டும்!
இரவு தாண்டிய என் கனவுகள்!
என் வழி நோக்கிய பாதைகளிடுகின்றன!
என் மனம் ஆட்கொண்ட கனவுத்தூதுவனொருவன்!
எனக்குண்டான திசை தீட்டுகிறான்!
கழிந்த கால கருமாந்திரங்களைச் சாடியும்!
அதைப் போலல்லாதொரு புது விதி தேடியும்!
சீரழிந்துச் சிதைப்பட்ட!
கதையொன்றைச் சொல்லிச் சொல்லியே!
பிரயாசையூட்டுகிறான் அப்பாதை வழி கிளர்ந்தெழ!
உருவங்களும் உணர்வுகளுமற்ற அத்தூதுவனின்!
வார்த்தைகளற்ற வழி கூறும் அவன் மொழிதல்களில்!
எது எப்படி எதற்கென்றறியா ஒரு கரு நோக்கி!
சதா ஏற்றத்தில் ஏறிச் செல்கிறது!
பின்னடைவுகளுற்ற என் பிரயாணங்கள்

விபத்து.. காதல்.. வில்

ராம்ப்ரசாத், சென்னை
விபத்து!
--------------------!
அபாய வளைவை!
புருவங்களிலா வைப்பாய்!!
அடிக்கடி விபத்தில்!
சிக்கிக்கொள்கிறதே!
என் கண்கள் .....!
!
காதல்!
-------------!
நமக்குள் காதல்!
வந்து விட்டது...!
இனி,!
நீ யும் நானும்!
போய்த்தான் ஆகவேண்டும் ....!
!
வில்!
-------------!
ராமன் வளைத்த வில்!
ஒன்று என்கிறது சரித்திரம்...!
இரண்டு என்கிறேன் நான்...!
உன் புருவங்களைப் பார்த்துவிட்டு ...!
!
-ராம்ப்ரசாத், சென்னை

நீதி கேட்ட தேவதை

கிரிகாசன்
I, II, III & IV!
01.!
வினை வந்தது!
-------------------!
கண்கள் சிவந்திட நெஞ்சம் கனந்திட காண்பது யார்இவளோ?!
பெண்ணின் குணமிழிந் தென்னைக் சினந்திடும் பேதையின் பேரெதுவோ ?!
வண்ண முகம்பெருந் தீயெழுந் தாடிட வந்தவள் யார்மகளோ?!
எண்ண மெடுத்தவள் என்னநி னைத்தனள் எப்படிச் சொல்லுவளோ?!
மின்ன லெனவந்து நின்றவளே யுந்தன் மென்முகம் வாடுவதேன்?!
நன்னரும் மேனி நலங்கெடக் கோபமுன் நெஞ்சி லெழுந்ததுமேன்?!
”பன்னுரும் சேனை படைகொண்டு வீரம்பகை வென்ற தால்மனதில்!
என்னரும் வாழ்வு இழிந்திடச் செய்திடல் எண்ணுவ தாகிடுமோ?”!
அன்னவள் பேச்சில றிந்திட ஆஇவள் அந்தியில் தாமரைகள்!
பன்னள வென்று செறிந்த பளிங்கென்னும் பொய்கையில் நீந்தியவள்!
முன்ன ரெழுந்தவெஞ் சூரியன் மாலையில் மேற்கில் சினமெழுந்து!
தன்னிலை கெட்டு தணல்கொதி கொண்டு கடல்கண்டு வீழுகையில்!
மென்தளிர் மேனியில் தொட்ட களிப்பினில் துள்ளிடும் நீரலைகள்!
வந்து கரைதனில் மண்ணி லுருண்டு விரைந்து புரண்டுசெல்ல!
விந்தை பொலிந்திட வானக் குளத்திலோர் வெண்மதி நீந்துவதாய்!
இந்த மகளிள மான்குளிர்ப் பொய்கையில் இன்பநீராடக் கண்டேன்!
கண்கள் மறந்துமே சிந்தை யிளந்தவள் காரிகை யின்எழிலில்!
அண்ணள வாயொரு கண்ணிமை நேரமயர்ந்தது நிச்சயமே!
எண்ணியொருந் தவறேது மிழைத்திலேன் என்னவென்றே பகர்வாய்!
கண்ணியம் கொண்டு கணமிடம் நீங்கிய காட்சி தெரிந்திலையோ!
”புன்னகை கொண்டுநின் பேச்சில் மயங்கிடப் பேதை யல்லயிவளோ!
கன்னம் பிடித்திவள் கன்னியின் பொன்னிதழ் கைவிரல் தொட்டதுவும்!
இன்னும் அடம்பிடித் தாவல் கொண்டேயிவள் ஆசையில் கொஞ்சியதும்!
பொன்னில் வளர்ந்தவ ளென்று பசற்றிய பொய்யும் மறந்ததென்ன?!
கன்னியிவள் உடல் கற்பில் மாசுஎழக் காரிய மானவரே!
என்னவென் றேயொரு நீதிசொல் லச்சபை முன்னேயெ ழுந்தருளும்!
பின்னையி ராப்பக லோடு கலந்திடும் போதில் அரசமர!
திண்ணையடி வந்து சேரு”மெனச் சொல்லித் தென்றலென நடந்தாள்!
02.!
நீதியைத் தேடி!
--------------------!
அன்னம் நடைஅசைந்தாடுமிடை எழில்வண்ண மயிலெனவே!
எண்ணமது சிதைந்தோட அவள்நடை கண்டுமன மிழந்தேன்!
வண்ணங் குழைத்த நல்மாலைவரஅவள் வஞ்சியின் சொல்லினுக்கே!
திண்ண மெடுத்திவள் செய்வதுமோச மென்றுண்மை பகரச்சென்றேன்!
மஞ்சள் நிறவெயில் மாலைக் காற்றின்கீதம் மாந்தரின் பேச்சினொலி!
பஞ்சென வேதுள்ளி வஞ்சமில்லா தோடும்பாலகர் கொஞ்சுமொலி!
நெஞ்சைக்கவர்ந்திட சங்கீததாளமும் நேரெதிர்காதிற் கொண்டேன்!
சஞ்சலங் கொள்மனம் பஞ்செனஒத்தடம் செய்தது மாலையெழில்!
சின்னஇதழ் விரித்தின்ப மணமெடுத் தேங்கின பன்மலர்கள்!
தின்னவருங் கருவண்டை அசைந்தாடித் தேடின பூங்கொடிகள்!
தன்னவர் வந்திடுங் காலமென இல்ல நங்கையர் பூமுடித்து!
சின்ன அகல்விளக் கேற்றி ஒளியிட்டு சித்திர மாகிநின்றார்!
நெல்மணி தேடிய புள்ளினங்கள் வானில்நீளப் பறந்துவர!
புல்லைக் கடித்தது போதுமென்று பசுபோகும் வழி திரும்ப!
கல்வி பயின்றிடத் திண்ணை அயல்சிறு கன்னியர் கூடியதும்!
சல்சல் சலவென்று சலங்கை குலுங்கிட சின்னவர் ஆடியதும்!
கண்டுமனதினில் கொண்ட உவகைகள் கொஞ்சமல்ல நடந்தேன்!
கொண்டையில் பூவிடும் நங்கைதனை அயல்கண்டு அருகணைந்தேன்!
வண்டையுரித்தன இரண்டுகண்கள் என்னைகண்டு மருண்டிருக்க!
செண்டைமலரொத்தசின்ன இதழென்னும் பூவை மலரவைத்தாள்!
வந்திடவே செய்யீ ரென்றெண்ணவே ஆகா..வந்தீர் அதிசயமே!
சிந்தையி லென்னையும் கொண்டதனாலேயே வந்ததுநிச்சயமே!
இந்தளவே போதும் உங்கள் நினைவுடன் என்றுமே வாழுவேனே!
எந்தநினைவுடன் சொன்னவளோ அவள் நெய்விழி பூத்ததுநீர்!
பித்துப்பிடித்தவள் போலப்பிதற்றிடும் பெண்ணே பெரியோர் எங்கே!
சித்தம்பிழைத்தவள் உன்னை நம்பியிங்கே சேர்ந்தேன் மடமையிலே!
எத்தன் செய்யும்வேலை இட்டவளே இனி என்னைமறந்துவிடு!
இத்துடன் யாவும் நிறுத்திவிட்டாலே பிழைத்தனைஓடிவிடு!
கட்டியணைத்துமே கன்னியென்னை உஙகள் கைகளில் இட்டவரே!
விட்டு விலகிட எண்ணியிருப்பது விந்தையில் விந்தையன்றோ!
தொட்டதனாலேஎன் தூயமனதினில் தோன்றிய வேதனையை!
விட்டு நலங்கொளச் செய்தலன்றி ஒரு வேடிக்கை வேண்டியதோ!
அந்தர வானிலேகூடுகட்டி அதில் ஆனையின்முட்டைவைத்தேன்!
விந்தை நாலுகுஞ்சு வந்ததடாஎன்று வீணில் பசப்பும்பெண்ணே!
உந்தன்மொழி பொய்என்னிடம் செல்லாது போதும் நிறுத்திவிடு!
சுந்தரியே சொல்லு சேதிகேட்கும் சபை சென்றது எங்கேயிங்கு!
சொல்லி முடிக்க முன்வந்தவரோ ஒருசித்திரக்கேலி யென்னும்!
ஒல்லி உருவமும் ஓங்கிய நெற்றியும் ஊடேசிலமுடிகள்!
நல்லது உங்கள் வழக்கென்னகூறுவீர்! நங்கையே சொல்லிடுவாய்!
வல்லவர் சொல்லியபோது புரிந்ததுவந்தவர் ஊர்தலைவர் !
!
03. !
பொய்யுரைத்த பேதை!
------------------------------------!
சின்னவள்தான் இவள் சொல்லும் உண்மையிது சிந்தை மயக்கியவர்!
எந்தன் கனவினில் வந்து நின்றார் இருகன்னம்தழுவிநின்றார்!
பொன்னெனப் பேசி பிதற்றுகிறார் எந்தன் பின்னலைநீவுகிறார்!
முன்னமிருந்து முகம்பிடித்தேமுழு வெண்மதிஎன்குகிறார்!
ஊருக்கும் உண்மைக்கும் நீதிசொல்லும் நல்ல உத்தமமானவரே!
நீருக்குள் நாளொன்று நிற்கையிலே வந்து நெஞ்சில்புகுந்துவிட்டார்!
யாருக்கும் ஏதும் அறியமுன்னே என்னை ஆரத்தழுவி விட்டார்!
போருக்குவீரனாம் பெண்மனதுள் வந்துபித்தனாய் ஆடுகிறார்!
பாலைக் குடிக்க எடுத்துவைத்தால் மனம் பாம்பின் விஷம்என்குது!
காலைவரை கண்ணை மூடினும் பக்கமாய் சேரத் துயில்நாணுது!
வாலை பருவமும் நோயானது என்வண்ணம் குலைந்திடுதே!
சேலை யிருப்பதே பாரமென்று பெருந் தீயில் உடல் வாடுதே!
கண்கள் பனித்தன தொங்கி இமைதனில் கண்ணீர்த்துளி திரண்டு!
பொன்னெனும் கன்னம்கடந்து இதழ்ழெனும் பூவில்கலக்கக்கண்டேன்!
சின்னை இதழ் கசந்ததுவோ, அவள் செவ்விதழ் கோணலிட்டாள்!
என்னைகடைவிழிகொண்டு கண்டுஇதழ் மீண்டும் விரித்துரைத்தாள்!
பூவிழிமூட முடியவில்லைஒரு பொழுதும் தூக்கமில்லை!
நாவில் தெளிவெழும் பேச்சுஇல்லை ஒருநல்ல உணர்வுஇல்லை!
ஆவிதுடிக்குது எண்ணியொரு ஆனந்தகீதம் இசைத்தபடி!
கூவிமகிழ்ந்திட வேண்டிநின்றேன் இந்த கோலமென்றாகிவிட்டேன்!
காற்றாகி வந்து கலகலத்தே என்னைக் கைகளால் நீவுகிறார்!
ஆற்றில்குளிக்கையில் ஆடுமலைகளாய் ஆடையைதள்ளுகிறார்!
ஊற்றிலுணர்வினுள் உள்ளக் கிளர்ச்சியிலோடி பெருகுகிறார்!
வேற்றுமையின்றியே வேண்டுமொருநீதி வேதனைபோயிடவே!
கொட்டியதுபல பொன்விளை காசென கொல்லெனவே நகைத்து!
பட்டெனக் கைதட்டிப் புன்னகைத்து சபாஷ் பார்த்தகனவா என்றார்!
நெட்டி முறித்துவிரல் மடக்கி ஏய் நிற்கும் இளையபெண்ணே!
குட்டிகதை கேட்கக் கூட்டிவந்தாய் இது குற்றம் எனச்சினந்தான்!
செம்புயலாகவேசீறிப் பகைவெல்லும் சீராளன் வீரனே பார்!
வெம்பும்விழி சொரி மங்கையின் பேச்சுமே வேடிக்கையானதுகாண்!
அம்புவிழிகொண்ட ஆரணங்கின் பக்கம் அர்த்தமுளதோ நீசொல்!
நம்புவதா இதில்நானெது கூற நீ நல்லொரு தீர்ப்பளிப்பாய்!
செந்தழல்வீசிய சின்னவளின் முகம் சோர்ந்து துவளக் கண்டேன்!
எந்தளவோ ஓர் எல்லையற்ற சோகம் அங்கவள் மூச்சில்கண்டேன்!
மந்தமெனும் இளம்புன்னகையிலொரு மாசறு காதல் கண்டேன்!
செந்தமிழ் செல்வியின் பின்னும் கதையிலே நேசமிழைதல்கண்டேன்!
பொல்லா மனம் கொண்ட பொய்மகளே ஒருபோதும் மன்னிப்பேயில்லை!
வல்லவன் என்னிடம் சொல்லியவை தந்த வெஞ்சினம் போகவில்லை!
நல்லதொரு நீதிநான் சொல்லுவேனென நங்கையை நோக்கி நின்றேன்!
கல்லில் சிலையென கண்கள் பனித்திட கன்னம் சிவக்க நின்றாள்!
!
04.!
தீர்ப்பு!
-------------!
புன்னகைத் தாள்அவள் பூமலரும் அந்தப்போதை விழிமயக்க!
முன்னமிருப்பது பெண்ணாவளோ ஒருமேகத்தின் தேவதையா!
என்ன விழைந்தது என்மனதில் அவள் ஏற்றிய தீ எரிந்தே!
சின்னதென எழும்வேகம் பரந்திட செய்வதுஎன் திகைத்தேன்!
உந்தன் கனவதில் வந்தவன் நானென கூறிய பொன்மகளே!
எந்தன்கனவிலும் வந்துவிடு எனக்கின்னல் விளைத்துவிடு!
சிந்தும் உன்புன்னகை பங்கம் இழைத்தவன் கண்களில்நீ புகுநது!
தந்துவிடு இவன் தந்தபொருளவை ஒன்றும் குறைவின்றியே!
தொட்டுஇழைத்தவை அத்தனையும் நீயும் தொட்டு அளித்துவிடு!
பட்டு இதழ்களில் முத்தமிட்டால் நீயும் முத்தம் கொடுத்துவிடு!
கட்டியணைத்தை கட்டியணை நீயும் கட்டளையிட்டுவிடு!
கொட்டிகுவித்த குற்றமெல்லாம்ப்தில் குற்றமிழைத்துவிடு!
உந்தன் மனதினில் காதலை தீயிட்ட காளையிவன்தனுக்கு!
சிந்தனையெங்குமே தீயிட்டு காதலின் தீமை உணர்த்திவிடு!
சந்தணமேனியில் செய்தகுறும்புகள் அத்தனையு மெழுதி!
தந்ததைப்போல தழுவிக்கொடுத்திடு தீரும்கணக்குஅதற்கு!
செந்தணல்வீசும் சிலையெனக் கண்டவள் இந்தக்குளிர்நிலவா!
சுந்தரம் வீசிடும்பூந்தென்றலா இல்லைச் சுழலும்வன்புயலா!
சிந்தும் சினமின்றி சேயிழை கண்களில் சேர்ந்ததுமுத்துக்களா!
செந்தூரவாயி னிதழ்கள் துடிப்பது இன்ப கலக்கத்திலா!
செவ்வரியோடிய கண்கள்மயங்கிடச் சற்றுநிமிர்ந்துநின்றாள்!
திவ்வியரூபமாய் சுந்தரிபொன்னெழில் தேகமெடுக்க கண்டேன்!
கொவ்வைஇதழ்களில் புன்னகை பூத்துக் கொஞ்சமருகில் வந்தாள்!
எவ்விதம் உங்கள் கனவில்வருவது ஏழைஅறியே னென்றாள்!
சொன்னவை அத்தனை நான்புரிவேன் ஆனால் சொப்பனமல்ல வென்றாள்!
முன்னே இருந்து அளித்திடுவேன் ஆனால் மொத்தமாயில்லை யென்றாள்!
சின்னச் சின்னதெனத் தந்திடுவாய் நானோ சேர்த்துக் கணக்கிடுவேன்!
என்ன கொடுப்பதில் வஞ்சனைசெய்திடில் வட்டிஎடுப்பே னென்றேன்!
மன்றநடுவரைக் காணவில்லை அவர் மயமாய் ஏகிவிட்டார்!
தென்றலே போதுமா தீர்ப்பு பிழைத்ததா தேவையைக்கூறு என்றேன்!
கன்றிளம் மானுடை துள்ளலுடன் அவள்கண்களில் மின்னொளியாய்!
நின்று இதுகன வில்லை என்றுஎன் நெஞ்சில்முகம் புதைத்தாள்!
(முடிந்தது.)

அழகிய வாழ்வுக்கு ஏங்கும்

த.சரீஷ்
அடுத்த கணப்பொழுது !
உடனடியாக பறிக்கப்படும் !
உரிமைகள்...! !
சில சமயங்களில் உயிரும்...! !
சகோதரிகளின்... !
உயிரிலும் மேலான கற்பு !
பரிதாபநிலையில் களவாடப்படும்...! !
உடல்மட்டும்... !
மண்ணோடு மண்ணாகிப்போகும் !
அல்லது... !
கல்லோடு கட்டப்பட்டு கண்ணீருடன்... !
தண்ணீரில் மூழ்கிப்போகும்...! !
பாதுகாப்பு... !
உறுதிப்படுத்தப்படாத நிலையில் !
உயிருக்கு உறுதியற்ற பதற்றம் !
எப்போதும் நிலவலாம் !
மனிதம் பரவியுள்ள !
புனித தேவாலையத்தில்கூட !
அமைதி குலையும் !
கொடிய கொலைக்கூத்து அரங்கேறும்...! !
எமக்கோ என்றும்... !
மாறாத துயராய் தொடரும் !
மாமனித மரணங்கள்..! !
அவர்களுக்கோ அது !
வெறும்... !
பத்தோடு பதினொன்றாய்...! !
இன்னும் !
சமாதானம் வாழ்கிறது என்று !
எப்போதோ... !
செத்துப்போன ஒன்றுக்கு !
உயிர்கொடுக்கும் !
இன்றய அரசியலுக்கு நடுவில்... !
ஏதோ... !
ஜனநாயகம் என்றும் !
அடிக்கடி அலட்டிக்கொள்கிறார்கள் !
இருப்பினும்... !
இன்று வரை... !
இராணுவத்தின் ஆட்சிதான்...! !
இன்னும்... !
ஒரு இனத்தின்மேல் !
திணிக்கப்பட்ட... !
அடக்குமுறை அரசபயங்கரவாதமாய்..!!! !
!
த.சரீஷ் !
12.01.2006 (பாரீஸ்)

குட்டிதேவதை…

பாண்டித்துரை
புன்னகையை சுமந்து வருகிறாள்!
அறிமுகம் இல்லாமலே – என்!
அகம் தொட எத்தனிக்கிறாள்.!
எப்படியும் முடிகிறது – அவளின்!
உலகத்தினுள் எனை கடத்த!
ஜன்னல் வெளி பேசுகிறாள்!
பறந்து சென்ற பறவைக்காக!
அவள் சொன்ன கதைகளையெல்லாம்!
டெடிபீர் பொம்மைகள்!
எனக்கு தெரிந்திடாத வண்ணம்!
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!!
முகத்தை சுழித்து நாக்கை துருத்தி!
அவளுக்கான சில்மிசங்கள்!
வெறுமையை ஆக்ரமிக்கிறது.!
பொம்மையை தட்டிக்கொடுத்து!
கண்ணயரசெய்த பின்னே!
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்!
அவளுக்கான உலகில்!
எண்ணற்ற ரகசியங்கள்!
புதைந்து கிடக்கின்றன!
எப்போதாவது ஒன்றுதான்!
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது .!
பாண்டித்துரை

மறுபக்கம்

ப.மதியழகன்
காற்றுக்கும் மறுபக்கம் உண்டு!
புயலென புறப்படுவது!
தென்றலின் மற்றொரு வடிவம் தானென!
நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்று. !
கடலுக்கும் மறுபக்கம் ஒன்றுண்டு!
இதமாய் கால்களை வருடிச் செல்லும் அலைகள்!
ஒரு கறுப்பு நாளில் புறப்படும்!
ஆழிப்பேரலையாய் ஆக்ரோஷம் கொண்டு... !
நிலத்துக்கும் மானிட இனம் அஞ்சும்!
மறுபக்கம் ஒன்றுண்டு!
நமக்கு அபயமளித்துக் காத்துவரும் இப்புவியே!
பூகம்பத்தால் விழுங்கும்!
குவியல் குவியல்களாக!
அப்பாவி மக்களை உயிரோடு... !
அக்னிச் சுடருக்கும் மறுபக்கம் உண்டு!
குடும்பமே தீயின் கொடிய நாக்குகளுக்கு இரையான!
எண்ணற்ற துயர சம்பவங்கள்!
இம்மண்ணில் நடந்ததுண்டு. !
வானுக்கும் மறுபக்கம் உண்டு!
நாமனைவரும் வியந்து பார்க்கும் வானமே!
விண்கற்கள் மூலம் விஸ்வரூபம் கொண்டு!
நம்மோடு நேரடி யுத்தம் புரிவதுண்டு. !
மனிதனுக்கும் மறுபக்கமுண்டு!
சரித்திர நாயகர்களது!
சில ரகசியங்கள் மற்றர்களுக்குத் இறுதிவரை!
தெரியாமலேயே!
அவனோடு அவனுடைய அந்தரங்கமும்!
கல்லறையில் புதைந்து போவதுண்டு. !
மண்ணில் வந்து பிறந்திட்ட!
சின்ன சின்ன அரும்புகளிடம்!
மறுபக்கத்தை தேட இயலுமா?!
சமுதாயம் அந்தக் குழந்தைகளை!
கூர் நகங்கள் கொண்ட கருமையான!
தனது கொடிய கரங்களால்!
அரவணைக்கும்போது!
அப்பிஞ்சுகளுடைய அகமும், புறமும்!
முற்றிலும் வெவ்வேறாக,!
கோரமாக மாறிப்போக!
நூற்றுக்கு நூறு சதவீதம்!
வாய்ப்புண்டு

இனியொரு பிறவி.. முத்துத்தமிழ்

கிரிகாசன்
இனியொரு பிறவி வேண்டாம்.. முத்துத்தமிழ் கொல்வோன்!
01.!
இனியொரு பிறவி வேண்டாம்!
--------------------------------------------!
நீலவண்ணமதில் ஆயிரம்தாரகை!
நீந்திட எங்குமொளிப் பிழம்பு!
காலவெளி விண்ணின் மாயகுழம்பினில்!
காற்றில் சிவப்பொளி மஞ்சளுடன்!
ஊதாக் கடும்நீலம் உள்ளதென அண்டம்!
உள்ளே வெளிதாண்டி ஓடுகிறேன்!
காது ஓம் என்றொரு ரீங்கார ஓசையில்!
காற்றில்லா ஆழத்தில் நீந்துகிறேன்!
சட்டென்று சத்தமோர் நட்சத்திரம் வெடித்!
தெங்கும் ஒளிச் சீற்ற மூடுருவ!
வட்டக்குழம்பிலே பற்பலவண்ணத் !
துகள்கள் பரந்தென்னைச் சுற்றிவர!
வெப்ப மெழுந்தென்னைச் சுட்டுவிடஒரு!
நீலக்கரும்குழி தானுறிஞ்ச!
குப்புற வீழ்ந்து சுழன்றுதொலைகிறேன்!
சட்டென்று கண்ணை விழித்துவிட்டேன்!
காணும்பகற்கன வாலெழுந்து மேலே!
வானிற் பறக்கும் முகில்களினை!
ஆளாய்க் குரங்காய் அழகென்று பெண்ணாக!
அற்புதமான வடிவெடுக்கும்!
மீளக் கலைந்து உருக்குலைந்துபஞ்சாய்!
மெல்லிய மேகம் பறந்துசெல்லும்!
கோலம் ரசித்துகிடந்தேன் அடஆங்கே!
தேவதையொன் றெழில் வானில்வந்தாள்!
அந்தோஅழகிய தேவதையே வெண்மை!
ஆடைகள் பூண்ட எழிலரசி!
எந்தன் மனதினில் கேள்வி யொன்றுஇந்த!
மண்ணில் வந்து நானும் ஏன்பிறந்தேன்!
எங்கேயிருந்து பிறந்து வந்தேன் மீண்டும்!
எங்குசென்றே அமைதி கொள்வேன்!
அங்கே யிருப்பது என்ன இந்தப்பெரும்!
ஆழவிண்ணின் வெளிகண்டதென்ன!
வானோ பிரபஞ்சமாய் ஆக்கிவிரித் ததில்!
வண்ணக் குழம்புகள் வைத்தது யார்!
ஏனோ இதுமர்மமென்று இருப்பதன்!
காரணமென்ன அறிந்துளயோ!
ஆவிதுறந் ததும்அண்ட வெளியினில்!
நாம்போகு பாதையோர் பால்வெளியோ!
தாவிப் பறந்துவான் கல்லிற் படாமலே!
தூரம் சென்றேநாம் உறங்குவமோ!
சூரியன்கள் பலதாண்டி வெறுமையில்!
காற்றுமில்லாப் பெரும் சூனியத்தில்!
சீறிவரும் ஒளிச் சீற்றங்கள் மத்தியில்!
செல்லும் இடம்வெகு தூரமாசொல்!
நெல்லை விதைத்து கதிர்வளர்ப்போமது!
முற்றியதும் அன்னம் உண்பதற்கு!
கல்லுடைத் தில்லமும் கட்டினோம்காற்றும்!
குளிர்கொல் விலங்கும் தவிர்ப்பதற்கு!
ஆனசெய லெல்லாம்காரணத் தோடுதான்!
ஆயின் பிறந்திட்ட காரணமென்!
மேனி எடுத்திந்தப் பூமியில் வந்ததால்!
யாருக்கென்ன பயன் என்று கேட்டேன்!
தொல்லையிலா வாழ்வுக் கென்றேபல சில!
விஞ்ஞான ஆய்வில் கருவி கண்டோம்!
செல்லை கணனியை சின்னத்திரை கண்டு!
இன்பமாக வாழ்வை மாற்றிவிட்டோம்!
ஆயினும் எத்தனை பெற்றும் மனிதர்கள்!
அன்பினை மட்டு மிழந்துவிட்டார்!
நாயினும் கேவல மாகச்சண்டை யிட்டு!
நாட்டைப் பிடித்திடக் கொல்லுகிறார்!
யுத்தம் அரசுகள் செய்யும் கொலைகளை!
கேட்பதற்கு இங்கு யாருமில்லை!
ரத்தம்துடித்து அடங்கும்வரை கையில்!
கத்தி எடுப்பவன் தானே இறை!
எத்தனை நல்லவன் நேர்மைகொள்வோன்தமக்!
கிவ்வுலகில் நீண்ட ஆயுளில்லை!
மொத்தத்தில் ஏது நடக்குது மானிட!
வாழ்வுதனில் என்று தோன்றவில்லை!
நேர்மை நீதியற்ற வாழ்விதை விட்டுஅந்!
நீண்ட வெளிதன்னில் நீந்துகிறேன் !
மீளப்பிறந்திங்கு வாழப்பிடிப்பில்லை!
வேண்டாம் இனியோர் பிறவி யென்றேன்!
!
02.!
முத்துத்தமிழ் கொல்வோன்!
------------------------------------------!
முத்துத்தமிழ் சத்தம் இடுமினம்!
வெட்டித்தலை கொத்திக் கிழியென!
சட்டம்ஒரு சுற்றும் புவியிடை உளதாமோ!
சொத்துக்களைத் தட்டிப் பறிதமிழ்!
கற்பைக்கெடு, குத்திக் கொலையென!
புத்தம்மதம் கற்கும் விதிமுறை உளதாமோ!
கொத்துக்குலை மொத்தத் தமிழ்அழி!
கத்திக்குரல் சத்தமிட ஒழி!
மக்கட்தலை சுட்டுக் கருகென வெடிபோட்டு!
சுற்றும்பெரு யந்திரப் பறவையும்!
சுற்றிப்பொது பொத்து பொதுவென!
கொட்டும்இடி குண்டுப் பெருமழை பொழிந்தாக!
முற்றும்அழி ஒற்றைத் தமிழனும்!
சற்றும் விதிபெற்றுக் குறைஉயிர்!
உற்றுக்கொள வெட்டிக் குழியிடு எனவாக!
கத்திக்குடி மக்கள் முழுவதும்!
திக்குத்திசை விட்டுத் திரிபடும்!
சிக்கல்பட நச்சுக் கலவையை எறிந்தானே!
வெட்டித்தலை கொட்டக் குருதியும்!
பட்டுத்தெறி ரத்தக் கறையதும்!
சுட்டுக்கொலை யுற்றுக் கலிபட புவிதானும்!
பட்டுக்கிட செத்துத் தொலையென!
சொட்டும்மனம் இரக்கப் படவிலை!
சட்டம்ஒரு முற்றும் குருடென விழிமூட!
பத்தும்பல கட்டுக் கதைகளை!
விட்டுப்பலர் புத்திக் கழுவிட!
சுத்தம்மனம் புத்தன் மகனென உலகெண்ண!
செத்தும்விழும் ரத்தப் பிணமதை!
கொத்திகுடல் தின்னுங் கழுகதின்!
வர்க்கம் இவன் வெட்டக் குலையென வீழ்ந்தோமே!
பக்கம்இரு ரத்தக் கொலைவெறி!
யுத்தப்பிரி யெத்தன் அரசது!
கத்தையெனக் கட்டுப் பணமது கரமீய!
மத்தம்பிடி பித்தன் கொலையிடு!
வித்தைதனை மெத்தப் பழகிய!
குத்துக்கொலை மன்னன் தலையிடு முடிவீழ!
விட்டுத்துயில் தட்டு கதவினை!
சட்டத்துறை தக்கப் பதிலிடும்!
குற்றந்தனை சொல்லிக் கொடு,பதில் நீகேளாய்!
வெட்டிக்குடல் ரத்தக் குடியனை!
சட்டத்தவர் இட்டுச் சிறையிடை!
குற்றந்தனை ஒத்துக் கொளும்வரை விலகாதே!
கட்டித்தடி வெள்ளை கொடியுடன்!
விட்டுச்சுடும் வீரக் குழலதும்!
வைத்துத்தனி வெற்றுக் கரமுடன் இவர்போக!
கட்டிக்கயி றிட்டு கொடுமைகள்!
சுட்டுத்துடி கொள்ளக் கடும்வதை!
இட்டுக்கொலை செய்யும் கயவரை விடலாமோ!
வெட்டித்தமிழ் மக்கள் கொலையிட!
கத்திக்கிலி பற்றிக் கதறிய!
மொத்தக்குரல் விட்டு போவென விடுமாமோ!
வட்டிச்சக மொத்தத் தொகைபெற!
கத்திக்குரல் விட்டுக் கதறிட!
பட்டுத்துயர் முட்டச் சிறையிடை தள்ளாயோ!
சுற்றிச்சுழல் வட்டப் புவியது!
சுற்றும்ஒளி உச்சிக் கதிரவன்!
கற்றைஒளி புத்திப் புகழொடு தலையோனும்!
ஒற்றைச்சிறு கையிற் கடைவிரல்!
சற்றுத்திசை பக்கம் அசைவிட!
வெற்றித்திரு மைந்தர் குமரரும் படையோடி!
எட்டிக்களம் தொட்டுப் பகைவரை!
முட்டிப்பெரு மின்னல் இடியெனப்!
வட்டப்புயல் பட்டோர் நிலைதனை விளைத்தாரே!
கட்டிப்படை சுற்றிப் பலமெடு!
முத்துத்தமிழ் சொத்துக் குலமதின்!
சத்துப்பெரு முற்றும் மறமெடு தமிழ்வீரன்!
கத்துங்கடல் சுற்றும் பெருவெளி!
மற்றும்நிலம் முற்றும் முப்படை!
பெற்றுக்குல மங்கை கற்பினை அதிபேண!
முத்திப்பயம் சித்தம் கொண்டுலை!
பட்டுப்பல மொக்குப் பதருகள்!
அச்சம்இது மிச்சம் மிலையென போர்கொண்டு!
ஒற்றைக்கரம் கொண்டே உருவிய!
வெட்டுக்கொலை வாளைச் செருகிட!
பக்கம்அணைந் தன்பை முதலினில் பரிவாக!
பெற்றுப்பல வெற்றுக் கதைகளை!
விட்டுப்புறம் வெட்டத் துணிவுற!
வட்டக்கதிர் தானும் மேற்கிடை மறைவானே!
அச்சம்இலை சற்றுப் பொறுபொறு!
சுற்றும்ஒளி மற்றத் திசைதனில்!
எட்டிக்கதிர் விட்டே விடியலில் எழுந்தேகும்!
திட்டமிடு துட்டர் குணமுடன்!
சட்டம்எமை முற்றும் புரிந்திட!
எட்டுத்திசை மெச்ச பிறந்திடும் தமிழீழம்

இருண்ட நாட்கள்

விஷ்ணு
நீ!
எடுத்து வைத்த!
அடிகள் எல்லாம்!
என் இதயத்தில்!
என்பதாலோ ....!
விதிக்கும் சதிக்கும்!
எனக்கு!
வித்தியாசம்!
தெரியாமல் போனது !!!...!
நான் உருகுவது!
தெரியாதது போல்!
நீ!
உன் பார்வையை!
மாற்றிக்கொண்டதும் !!!...!
என்!
கண்களை காண!
தயங்கி நிற்கையில்!
உன் விழிகளில்!
கண்ணீர் உறைந்ததும் !!!...!
விதியாகிப்போனதுவோ !!!...!
இன்று!
என் இதயத்தில்!
முகம் காண!
துடிக்கிறாய் ...!
முடியாது பெண்ணே ...!
நேற்றைய தெளிந்த!
நீரோடை அல்ல அது !!!...!
உன்!
கபடக்காதலை!
அதில் நீயும்!
கலக்கியதால் ...!
காணாமல் போய்விட்டாய்!
கண்ணே ...!
என் மனமும்!
கலங்கியதால் !!!....!
சதியாக நீயும்!
என்னில்!
சதுரங்கம் ஆடி விட்டாய் !!!...!
விதியாக நானும்!
வீழ்ந்து விட்டேன்!
வீதியிலே !!!...!
என்!
இதயத்தில் சாய்ந்து!
இருட்டாக்கி சென்றவளே !!!...!
அணைந்து விட்டாலும்!
தழும்பாய்!
இன்றும் நீ!
தங்கி நிற்கிறாய்!
என்னுள்ளே ..!
!
அன்புடன்!
-விஷ்ணு

நவீன விக்கிரமாதித்தனின் 'காலம்'

வ.ந.கிரிதரன்
வ.நகிரிதரன் -!
!
உள்ளிருந்து எள்ளி நகைத்தது யார்?!
ஒவ்வொரு முறையும் இவ்விதம்!
நகைப்பதே உன் தொழிலாயிற்று.!
விரிவெளியில் படர்ந்து கிடக்குமுன்!
நகைப்போ , நீ விளைவிக்கும் கோலங்களோ,!
அல்லது உன் தந்திரம் மிக்க!
கதையளப்போ எனக்கொன்றும் புதியதல்லவே.!
இரவுவானின் அடுக்குகளில்!
உனது சாகசம் மிக்க!
நகைப்பினை உற்றுப் பார்த்திடும்!
ஒவ்வொரு இரவிலும்,!
நட்சத்திரச் சுடர்களில்,!
அவற்றின் வலிமையில்!
உன்னை உணர்கின்றேன்.!
எப்பொழுதுமே இறுதி வெற்றி!
உனக்குத்தான்.!
எப்பொழுதுமே உன்காட்டில்!
மழைதான். அதற்காக!
மனந்தளர்வதென் பண்பல்ல. ஆயின்!
உன்னை வெற்றி கொள்ளுதலுமென்!
பேரவாவன்று.பின்!
உனைப் புரிதல்தான்.!
ஓரெல்லையினை!
ஒளிச்சுடருனக்குத்!
தந்துவிடும் பொருளறிந்த!
எனக்கு!
அவ்வெல்லையினை மீறிடும்!
ஆற்றலும், பக்குவமும்!
உண்டு; புரியுமா?!
வெளியும், கதியும், ஈர்ப்பும்!
உன்னை, உன் இருப்பினை!
நிர்ணயித்து விடுகையில்!
சுயாதீனத்துடன்!
பீற்றித் திரிவதாக உணரும்!
உன் சுயாதீனமற்ற,!
இறுமாப்புக்கு!
அர்த்தமேதுமுண்டா?!
இடம், வலம் , மேல், கீழ்.!
இருதிசை, நோக்கு கொண்ட!
பரிமாணங்களில் இதுவரையில்!
நீ!
ஒருதிசையினைத் தானே காட்டி!
புதிருடன் விளங்குகின்றாய்?!
உன் புதிரவிழ்த்துன்!
மறுபக்கத்தைக் காட்டுதலெப்போ?!
இரவி , இச் சுடர் இவையெலாம்!
ஓய்வாயிருத்தலுண்டோ? பின்!
நான் மட்டுமேன்?!
நீ எத்தனை முறை தான்!
உள்ளிருந்து!
எள்ளி நகைத்தாலும்!
மீண்டும் மீண்டும்!
முயன்று கொண்டேயிருப்பேன்.!
நீ!
போடும் புதிர்களுக்கு!
விளக்கம் காணுதற்கு!
முயன்று கொண்டேயிருப்பேன்.!
வேதாளங்களின் உள்ளிருந்து!
எள்ளி நகைத்தல் கண்டும்!
முயற்சியில்!
முற்றுந் தளராதவன் விக்கிரமாதித்தன்!
மட்டும்தானா?