தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
கவிஞர் ஈழநிலா !
பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!!
படுபாவிகளி களினாலே அழியுதடா சாமி!!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’! !
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து’ காமி!!
நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி’யென் றடைப்பார்!
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!!
கண்ணிவெடி ‘கிளைமோரில்’ கால்பறந்து சாவோம்!!
கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!!
பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!!
புல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்!
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!!
எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்’ உரித்தான்!!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!!
ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்

திக்கெட்டும் ஒலிக்கட்டும் தமிழன்னையின் திருப்புகழ்

ப.மதியழகன்
அந்நிய மொழியின் ஆக்கிரமிப்புகளையும்!
ஆங்கில மொழி நிகழ்த்திய!
ஆழிப்பேரலைத் தாக்குதலால் உண்டான!
நிலைகுலைந்த தன்மையையும்!
அஞ்சாமல் எதிர்கொண்டு!
மலைபோன்ற நெஞ்சுறுதியுடனும்!
எல்லையிலாப் பொறுமையுடனும்!
பேரிடி, பெருமழை வெள்ளம் தாங்கி!
வைராக்கியம் கொண்டவளாய்!
நிமிர்ந்து நின்றாள் எங்கள் தமிழன்னை !
‘பேரிலக்கியச் சபைகளி்ல்!
தலை கவிழ்ந்து நிற்கும் நிலையை!
தமிழ்ச்சான்றோர் தருவதில்லை!
எக்காலத்திலும் தமக்கு!
வரகவிகள் தமிழ்வயலில்!
விளையாமல் போக!
தமிழ்மொழியொன்றும் தரிசு!
நிலமல்ல இது உறுதி’- என !
பெருமிதம் பொங்கச் சொல்லி!
சிரசில் மணிமகுடமும்,!
கழுத்ததில் மணிமாலையும் சூடி!
கம்பீர தோற்றம் கொண்டவளாய்!
பாரெங்கும் ரதத்தினிலே பவனி வந்தாள்!
எங்கள் தமிழன்னை !
பிரளத்தில் நகரம்தான்!
கடலுக்குள் மூழ்கும்!
தமிழ்க்கடலின் எழுச்சியினால்!
ஏழு கண்டங்களும்!
அதனிடத்தில் சிறைபட்டுப் போகும் !
கம்பன் இயற்றிய ‘கவி’ மாலையும்!
பாரதி பாடிய ‘பா’ மாலையும்!
வள்ளுவன் வடித்த ‘குறள்’ மாலையும்!
இயம்பிடுமே உலகுக்கு!
இயற்றமிழின் சிறப்பு!
இன்னதென்று!
சர்க்கரைப் பாகும், தேனும்!
அதனதன் இயல்பினில் ஒன்றாகுமா?!
சர்க்கரை உடலுக்கு கேடு!
தேன் உயிர்காக்கும் அருமருந்து!
தமிழ்த்தேனை அள்ளிப் பருகிடுவோம்!
அதன் இனிமையால் நல்வளம் பெருகி!
இல்லறம் சிறக்க!
இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம்! !

ஞாயிற்றுக்கிழமை

சூர்யா கண்ணன்
இருக்கிற பாத்திரம்!
எல்லாத்துலயும் தண்ணீர்!
புடுச்சு வெக்கிற கவலை!
அம்மாவுக்கு..,!
இரண்டு நாளுல !
முடுஞ்சுபோகும் மருந்து!
இந்தமுறை யாரிட்ட கேக்க?!
யோசன அப்பாவுக்கு..,!
யாருக்கு என்னவானா!
எனக்கென்னன்னு!
அக்கா குழந்தை!
பால் டம்ளரை தட்டிவிட,!
துடைக்க உதறின!
அப்பாவின் துண்டு!
மருந்து புட்டியை சாய்க்க,!
குடத்தோட வந்த அம்மா!
விழப்போன குழந்தையை பிடிக்க,!
பால், மருந்து, தண்ணீர்!
கலவை!!
கவலை!!
யாருக்கு என்னவானா!
எம்மயிறுக்கு என்னன்னு!
அவசரமாய் வெளிக்கிளம்பினேன்!
இன்று ஞாயிற்றுக்கிழமை!
‘மப்’ அடிக்கணும்.!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்

பிரியமானவளே.. காதல்

கலாநிதி தனபாலன்
01.!
பிரியமானவளே!
பிரியமானவளே நீ எல்லாவற்றிலும்!
உயர்ந்து உள்ளத்திற்குள்ளே!
ஊடுருவி உவகையோடிரு!
மாறாய் மனதை மறைத்து!
உண்மையை உதறித்தள்ளிவிட்டு!
உடைந்த உள்ளத்தோடோடி!
உன்னவனையும் உடைத்துவிடாதே!
உள்ளே உவகையோடிரு!
!
02.!
காதல் !
காதல் !
உணர்வின் ஒரு பெயரல்ல !
மானுடத்தின் மறுபெயர் !
காதல் !
உலகில் ஆழமானது !
அழகானது அந்த ஒற்றைச்சொல்! !
காதல் !
மனமெல்லாம் மழையாகப்பொழிந்து !
மல்லிகையாய் மலருகின்ற அந்த !
மெல்லினிய உணர்வு !
காதல் !
கொடுத்து வாங்குவதல்ல !
அழகாய் பரிமாறிக்கொள்வது !
காதல் !
பரிமாறும் பாச உணர்வு !
பரிமாறும் பாச உணர்வை !
அவர் சொல்லிவிட்டார் !
இவர் சொல்லிவிட்டாரென்று !
இழந்து விடுவதற்கில்லை !
காதல் !
இது ஒன்றுதான் !
இதயத்தால் முழுமையாய் !
வெளிப்படுத்தக்கூடிய !
ஒரு உயிரின் உன்னத உணர்வு !
!
-கலாநிதி தனபாலன்

அன்பு

மதிரஞ்சனி
கவி: மதிரஞ்சனி!
மனது இரும்போடு உறவு வைக்கும்போது!
அன்பு இறந்து விடுகிறது!
உன்னை ஞாபகப்படுத்த வேண்டுமா?!
உன் மனசோடு நீ பேசு அது!
சிறகில்லாத பறவை என்றால்!
திசைமாறிப் போவாய்.!
சிறகு கொடு தேவையான மட்டும்!
விரித்து பற மனதை!
கிழித்துப் போடும் சக்தி!
திருப்தி இல்லை தான் - அதை!
இயக்குகின்ற சக்தியும் திருப்தி இல்லை தான்!
திருப்தியை மனசு திருப்பிக்!
கொள்ளும் போது நீ!
தித்திக்கிறாயா!...!
கவி: மதிரஞ்சனி

என்னை விட்டு பிரிந்து நீ

ரா.கிரிஷ்
பூக்கும் மலர்களில் எல்லாம் !
நீ புன்னகையாய் இருக்கிறாய்! !
வீசும் காற்றில் எல்லாம் !
நீ வாசமாய் இருக்கிறாய்! !
கார்கால வானத்தில் !
நீ வானவில்லாய் தெரிகிறாய்! !
பனி விழும் காலம் வந்தால் !
நீ பனித்துளியாய் மிளிர்கிறாய்! !
அஸ்தமன சூரியனின் ஒளியாய் !
நீ என்னை கவர்கிறாய்! !
என்னை விட்டு பிரிந்தும் !
நீ - என்னில் வாழ்கிறாய். !
ரா.கிரிஷ்

வீடு

வேதா. இலங்காதிலகம்
கூடி நாங்கள் வாழும் வீடு !
மாடி வீடு எங்கள் வீடு !
ஆடி ஓடி ஏறும் வீடு !
நான்கு மாடி வீடு இது. !
அப்பா அம்மா தங்கையுடன் !
அழகாய் கூடும் வீடு இது !
அன்பு பாசம் கூட்டி வைத்து !
ஆசை பெருக்கும் வீடு இது. !
வாடகை வீடு - நான் வசிப்பது !
வளமாய் நன்கு நான் படித்து !
வசதி பெருக்கிப் பணம் சேர்த்து !
வாங்குவேன் ஒரு புது வீடு

நான் வெளியேறுகையில்

இஸுரு சாமர சோமவீர
நான் வெளியேறுகையில்!
என்னைத் தொடர்ந்து!
புன்னகைத்தபடி!
வருவதில்லை நீ வாசல்வரை!
முன்பு போல!
கட்டிலிலே சாய்ந்து!
என்னையும் தாண்டி!
கதவினூடாகப் பார்த்திருக்கிறாய்!
தொலைதூரத்தை!
அமைதியாக!
பறக்கிறது பட்டம்!
மிகத் தொலைவான உயரத்தில்!
நூலிருக்கும் வரை!
தெரியும் உனக்கும்!
என்னை விடவும் நன்றாக

எல்லாமே இயல்பாயுள்ளன

துவாரகன்
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
இன்று இருப்பதும் !
நாளை இருப்பதைத் தீர்மானிப்பதும் !
மிக எளிதாயிருக்கிறது.!
சாப்பிடுவது !
நடந்து செல்வது !
ஆட்களைப் பார்க்கும்போது!
எந்தச் சலனமுமில்லாது !
ஒரு விளையாட்டுப் பொம்மைபோல் !
பார்த்துக் கொண்டேயிருப்பது !
எல்லோரும் சிரித்து ஓய்ந்தபின் !
ஒப்புக்காக !
சிறு உதட்டுப் புன்னகையை !
காட்டிவிட்டுப் போவது!
எல்லாமே இயல்பாயுள்ளன. !
ஒரு கூரான கத்தியோ !
ஒரு நீளக் கயிற்றுத் துண்டோ!
ஒரு கிணறோ !
எனது தெரிவுக்கு மிகப் பொருத்தமானது.!
இறைச்சிக்காக கழுத்து இறுக்கப்பட்டு!
கதியாலில் தொங்கவிடப்பட்ட!
ஒரு கோழியின் !
செட்டையடிப்பின் பின்னான !
அமைதியும்… !
கூடவே கிடைத்துவிடும். !
எல்லாமே மிக இயல்பாய் உள்ளன.!
நான் எதை வேண்டுமானாலும் !
தெரிவுசெய்யலாம்.!
தெரிவு மட்டும் எனதாய் உள்ளது.!
!
-துவாரகன்

திறக்கும் உடல்..மௌனம்.. முதல் காதல்

ப . ஜெயபால்
திறக்கும் உடல்!
01.!
---------------------!
என் உடலை!
படிக்கும் பொழுது!
நிசியில்!
கனவு எழுதும் விடை!
கடவுளாக, மானிடனாக, பிணமாக!
சில பக்கங்களை நிரப்பிக்கொள்ள!
சில பக்கங்கள்!
ஆடை இழந்தும்!
சில பக்கங்கள்!
புணர்ச்சிக்குள்ளாகியும்!
சில பக்கங்கள்!
ஓட முடியாமல்!
களைப்படைந்தும் போகின்றன!
மரத்தினைச் சுற்றித்திறியும் !
பித்தனாகவும்!
நடைபாதையில் தர்க்கமிட்டுத்திறியும்!
தத்துவனாகவும்!
சில காட்சிகள் அகப்படுகின்றன!
சம்மந்தமற்ற!
சில பக்கங்கள்!
இடைச்செருகலாகிப்போக!
பேய்களின் வயற்றுப்பசிக்கு!
இரையாகிப்போன!
சில பக்கங்களையும் காணமுடிந்தது!
ஒவ்வொரு நாள் இரவும்!
படிக்கப்படும் கடைசிப்பக்கம்!
முடிவற்று நிற்கிறது..!
களைப்படைந்து கண்கள்!
விழிக்கும் தருணங்களில்!
உடல் மூடிக்கொள்கிறது..!
மறுநாள் திறக்கப்படும் உடல்!
என்னவாக இருக்கும்...!
02.!
மௌனம்!
-----------------!
இந்த நிமிடம்!
அவன் மௌனித்ததற்கு...!
அவனை விட்டுச் சென்ற!
காதலை நினைத்திருக்கலாம்!
நீண்ட நாட்களுக்கு முன் கூறிய!
ஒரு பொய்யை நினைகூட்டியிருக்கலாம்!
பிரிந்து வந்த வீட்டை!
நினைவுப்படுத்தியிருக்கலாம்!
பழைய நண்பரை..!
கோபத்தை..!
பாவத்தை..!
பழிச் சொல்லை..!
சபலத்தை..!
வலியை..!
வேதனையை..!
ஏன் வெறுமனேகூட!
மௌனித்திருக்கலாம்..!
அவன் மௌனம்!
ஏதோ ஒன்றினால்!
இப்பொழுது நிரம்பிக்கொண்டிருகின்றது...!
!
03.!
முதல் காதல்!
-----------------!
உதிரும் மலர்!
உதிரும் பனித்துளி!
உதிரும் சிரிப்பு!
உதிரும் பேச்சு!
உதிரும் வெட்கம்!
உதிரும் பார்வை!
உதிரும் மௌனம்!
இவைகளில் முளைத்துவிடுகிறது!
காதல்