தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பாசமுள்ள சொந்தங்களுக்கு

அ. ஜெயபால்
உறவின் வலிமை !
உங்கள் பிரிவில் தான் !
அர்த்தப்படுகிறது !
புற உலக சம்பந்தங்களில் !
தொடர்புண்ட சூழலில் !
அக உறவு நிலைகளில் !
அமைதிகாணும் எந்தன் ஆழ்மனம், !
இன்று ஏனோ !
நிம்மதியிழக்கிறது, !
நீள்துயரம் கொள்கிறது. !
இரத்தபாசம் என்று சொல்வார்கள் !
அப்படி ஏதும் தெரியவில்லை !
உங்களுக்கும் எனக்கும், !
ஆனாலும் !
இரத்ததில், சதையில் !
பிரித்துப் பார்க்க முடியாது !
இரண்டுமாய் !
அதாவது இரத்தமும் சதையுமாய் !
இருக்கிறோம் !
என்பதை உறுதிப்படுத்துகிறது!
நம்முள் ஏற்பட்ட !
நமக்கான கோபம் !
தவறு என்னிடம்தான் !
அதில் ஏதும் குழப்பமில்லை!
வெளிவந்த வார்த்தை !
வலி தரக் கூடியவைதான் !
என்பதை !
வலியோடு உணர வைத்தீர் !
சந்திக்க !
வாய்ப்புகள் அற்ற சூழலிலும், !
தொலைபேசி அழைப்புகள் !
நினைக்கும்போது !
முடியாது என்ற போதும்,!
எதேச்சையாக பார்க்கிறபோதும் !
அல்லது அதற்கான சூழல் ஏற்படுகிறபோதும் !
முகம் கொடுத்து பேச முடியாத, !
ஒரு பார்வை கூட !
பார்க்க முடியாத சூழலில் !
உறவின் வலிமை அதன் !
உறுதிப்பாட்டுடன் செயல்படுகிறது !
இந்த கணத்தில் !
உங்களை எண்ணிப் பார்க்கிறபோது, !
கண்களின் கடை ஓரங்களில் !
வழிந்தோடும் !
கண்ணீர்த் துளிகளையன்றி !
வேறொன்றும் !
துணையாய்த் தெரிவதில்லை

நல்லதொரு சினேகம்

கனிகை
அதே வானம், நிலவு,நட்சத்திரம்!
வாழ்வும் அவ்வாறே இயல்பாக!
மாற்றங்களின்றி மௌனமாகப் பயணிக்கும்!
உறவுகள் வரும் போகும் உரையாடும்!
கலகலக்கும்!
எட்டி நின்றே தூற்றிப் புறம் சொல்லி அகலும்!
மகிழ்வின் தருணங்களில் சிரித்ததுண்டு!
முரண்பாடுகளின் முடிவில் சினந்ததுண்டு!
உணர்வுகளின் ஆர்ப்பரிப்பில் சிலிர்த்ததுண்டு!
ஆனாலும்,!
ஒரு கையசைவு!
பார்த்தனுக்கு வாய்த்ததொரு சாரதியாக!
ராமனுக்கு அமைந்ததொரு குகனாக!
அதியமான் களித்ததொரு அவ்வையாக!
வள்ளுவன் சொன்ன நட்பாக!
எதுவோ நானறியேன்.!
இருந்தும்!
நல்லதொரு சினேகம்!
லயமாக அழகாக இனிதாக எனதாக...!
கனிகை

என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்

நிந்தவூர் ஷிப்லி
இலையுதிர் காலம் முடிந்து!
இப்போது இங்கே!
கிளையுதிர்காலம்...!
தினமும் இயற்கை மரணத்தை விட!
செயற்கை மரணம் மலிந்து போன!
மண் இது...!
சுவாசப்பைகளும்!
இருதயத்துடிப்பும்!
பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை!
குலுக்கிக்கொண்டிருக்கின்றன!
சில ராட்சசக்கைகள்..!
எம்மண்ணுமே இங்கே!
செம்மண்தான்!
குருதித்துகள்கள்!
கலந்து போனதால்...!
குழந்தைகள்!
தாலாட்டு!
தொட்டில்!
மூன்றும் தலைகீழாகி இப்போது!
சடலங்கள்!
ஒப்பாரி!
பாடை!
எங்கள் ரணங்களை!
உங்களுக்கெல்லாம் புரிய வைக்க!
எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...?!
ஆயுதங்களும்!
ஆயுதங்களும் மோதுகின்றன..!
அப்பாவிகளை இடைநடுவில் நிறுத்திக்கொண்டு...!
அவர்கள் கூற்றுப்படி இது!
சமாதானத்துக்கான போராட்டமாம்..!
இவர்கள் கூற்றுப்படி இது!
வன்முறைக்கெதிரான போராட்டமாம்...!
எங்கள் கூற்றை யார் கேட்கிறார்கள்...?!
எனது தேசத்தின் வரலாறு!
சிதறி விழும்!
மனித உயிர்களின்!
குருதியினால் தத்ரூபமாக வரையப்பட்டுக்கொண்டிருக்கிறது..!
எப்போதோ ஓர் நாளில்!
இங்கு சமாதானம்!
மலரத்தான் போகிறது.!
எல்லோரும் இறந்து போன பின்......!
கிளையுதிர்காலம் முடிந்து!
இன்னும் சில நாட்களில்!
தோன்றக்கூடும் வேரறுகாலம்....!
அப்போது!
எலும்புக்கூடுகளும்!
மண்டையோடுகளுமே!
எஞ்சியிருக்கும்....!
-நிந்தவூர் ஷிப்லி

கைவிடப்பட்டவள்

நிந்தவூர் ஷிப்லி
எல்லோராலும்!
எல்லாவற்றாலும்!
கைவிடப்பட்டவளை!
நேற்று மாலை!
சந்தித்த போதுதான்!
வாழ்க்கையின்!
சில இருண்ட பக்கங்களை கண்டு கொண்டேன்..!
கவிதைகள் பற்றிய அவளது!
கேள்விகளின் வழியே தொடங்கிய!
எங்கள் சம்பாஷணை அவள்!
கனவுகள் பற்றிய வேள்விகள்!
வரை தொடர்ந்தன..!
முல்லைத்தீவில் பிறந்தவள்..!
ஒரு பின்னிரவில் செல் விழுந்த சம்பவத்தில்!
உறவுகளை இழந்தவள்..!
தன்னை விட பலமடங்கு வயதொத்த ஒருவனால் (அ) பலரால்!
மிக நீண்ட நேரம் கற்.............ழிக்கப்பட்டவள்..!
வாழ்க்கையின் அர்தத்தை பத்தாவது வயதில் தொலைத்தவள்..!
போராட்டங்களால் தன்னை தானே சிதைத்தவள்..!
கவிதைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த என்னை!
பைத்தியக்காரன் என்று கூட நினைத்திருப்பாள்..!
வாழ்க்கையின் கனதியான கணங்களை கடந்து வந்தவளுக்கு!
கவிதைகளின் அவசியம் அநாவசியமாகவே தோன்றியிருக்கும்..!
உன் வாழ்க்கை பற்றி ஒரு கவிதை எழுத வேண்டும் என்றேன்..!
சிரித்தாள் சிரித்தாள் சிரித்தாள்.. சத்தமாக சிரித்தாள்..!
உன் கவிதைகளால் எனது இழப்புக்களை மீட்டு தர ஒண்ணுமா?!
என்ற அவளது கேள்வி என்னை சிலுவையில் அறைந்தது..!
பெற்றோரை!
உறவினரை!
சகோதரரை!
கற்பை!
காதலை!
ஊரை!
நிம்மதியை!
வாழ்வை!
இன்னும்!
எல்லாவற்றையும்!
இழந்த ஒருத்தியைநீங்கள் எப்போதேனும் சந்தித்தால்!
மட்டுமே அதனதன் வலிகளையும் ரணங்களையும்!
உணர்வீர்கள்..!
அவளது இழப்புக்களை வார்த்தையாக்க முடியாமல்!
முதன் முறை கவிதையிடம் தோற்றுப்போகிறேன் நான்..!
இதற்கு மேல் எழுத கண்ணீரைத்தவிர!
என்னிடம் வேறு மொழிகள் இல்லை

காத்திருப்பு

தென்றல்.இரா.சம்பத்
காலம் கடந்துகொண்டே!
இருக்கிறது.........!
இதோ நீ வருவதற்கான!
சில மணித்துளியின்!
இடைவெளியில் நானிருக்கிறேன்!
நம் பழைய காலங்களை!
மனதோடு புரளவிட்டு.........!
எவ்வளவோமுறை!
தாண்டக்கூடாத எல்லைக்கோட்டை!
சாதாரணமாய் கடந்திருக்கிறோம்!
கடந்து வந்த!
நிமிடங்களை நினைக்கும்போது!
சின்னதாய் சிறகு கூட!
முளைத்துவிட்டது எனக்கு!
அவ்வளவு சந்தோஷம்...!
நாம் மட்டுமே உணரும்!
அந்த சல்லாப நாட்கள்!
அடிமனதோடு அப்பிக்கிடக்கும்!
சந்தோஷ நிமிடங்கள்!
நாம் இனிக் கடக்கும்!
எல்லாக் காலங்களையும்!
நனைத்திருக்க வேண்டும்!
அந்த நிமிடங்களிலிருந்து!
நமை விடுவித்துக்கொண்டு!
காலம் கடத்த முடியுமா!
நினைக்கும்போதே கனக்கிறதே....!
நீர்வீழ்ச்சி!
நிமிடங்களின் நிகழ்வுதான்....!
நம் நிகழ்வுகளும் அதுமாதிரிதான்!
எல்லாம் ஒரு நிமிடத்திலேயே!
நிகழ்ந்து-ஆனால்!
எப்போதும் நம்மை!
நனைத்தபடியே இருக்கிறது!
இருக்கவும் வேண்டும்...!!
சகியே.....!
என் சுகமே.........!
சீக்கிரம் வா...!
வார்த்தைகள் நின்றுவிட்டது!
உன் வரவுக்காக.....!!
- தென்றல்.இரா.சம்பத்

நாளை உலகின் முடிவு

கீதா ரங்கராஜன்
தொலைக்காட்சியில் !
நாளை உலகம் அழியப் போவதாக அறிவித்தனர்!
எங்கும் அமைதி !
யாரும் பரபரக்கவில்லை!
எவர்க்கும் நாளைப் பற்றிய சிந்தையில்லை!
பசி பிணி கடன் பற்றிய நினைவில்லை!
பிறப்பு இறப்பு பற்றிய பயமில்லை!
காமம் க்ரோதம் எதுவும் தலைத்தூக்கவில்லை!
பொது கூட்டங்கள் இல்லை !
பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இல்லை !
உண்ணாவிரத போராட்டஙகளும் இல்லை!
கூச்சல் இல்லை குழப்பம் இல்லை!
பணம் ஏற்படுத்திய வேற்றுமையில்லை!
நிறமில்லை பேதமில்லை !
பகலில்லை இரவில்லை !
யாருக்கும் அடையாளங்களில்லை!
அனைவரும் அமைதியாக உறங்கினர்!
நாளைப் பற்ற்ய உணர்வின்றி.....!
- கீதா ரங்கராஜன்

இயற்கை

முகம்மட் நிப்ராஸ், பேராதனை
அந்தி மறையும் ஆனந்த வேளை...!
ஆகயச் சூரியன் ஆழ்கடல் மீது செங்கதிர்களால் ஸ்பரிசம் செய்ய...!
கடற்கரை தனில் நானும் தனிமையில்...!
இறைவன் தந்த அருட்கொடையாம் இயற்கையை!
(இ)ரசித்தவனாக இருக்கும் வேளை...!
கரையை மோதும் கடல் அலைகளின் ஓசை என் காதோரம் ஏதோ சொல்ல முற்படுவது போல் தோன்ற...!
என்னுள் உதித்தன சில வரிகள்...!
தருகிறேன் கவிதை துளிகளாய்... !
ஐம் பெரும் பூதங்கள்...!
அறிவோம் நாம் யாவரும்...!
ஐந்தென அவற்றை பிரிக்கக் காரணம்?!
(ஐம்) பொறிகளும், புலன்களும் மானிடராம் நமக்குண்டு என்பதாலா?!
“நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ”!
எங்கே இன்னுமொன்று?!
அது அழிந்து கொண்டு வருவதனாலா!
அன்றே நம் முன்னோர் அதை கண்டு கொள்ளவில்லை? !
அதுதான் “தாவரம்”!
இயற்கை என்றாலோ நம் கண் முன் நிற்பவை...!
பச்சை பசேல் என பளிச்சிடும் தாவரங்கள் தானே.. !
!
குளிர்ச்சியான ஆற்றங்கரையோரத்திலே...!
இதமான தென்றல் காற்று வீச...!
மரச் சோலையின்கீழ் சேலை விரித்து இளைப்பாறி...!
அந்தி வானை ரசிக்க யாருக்குத்தான் ஆசையில்லை?... !
தாவரங்கள் இன்றி இயற்கை ஒரு போதும் இயற்கையாக இருக்காது.!
இயற்கைக்கு அழகு சேர்ப்பதே தாவரங்கள் தானே... !
வறண்ட பாலை மண்ணை பார்த்து “அழகிய இயற்கை நிலம்” என்று கூறுவது அரிது...!
நடுக்கடலிலே...!
சுற்றும் முற்றும் நீர் சூழ்ந்திருக்க...!
இயற்கையை நாம் ரசிப்பதரிது...!
உலர்ந்த காற்று உஷ்ணமாய் உடம்பில் படும் போது...!
காற்றை ரசிப்பதரிது...!
பகல் பொழுதிலே.. சுட்டெரிக்கும் சூரியன் சுடரொளி வீசும் போது...!
வானத்தின் அழகை ரசிப்பதரிது...!
தீ என்றாலே சற்று தூரநின்றுதான் பார்க்கும் நாம் அதை இயற்கை என ஒப்புக்கொண்டதும் அரிது...!
ஐம் பூதங்களில் அப்படி என்னதான் விஷேசம்... அவற்றின் பேரில் பூதம் சேர்ந்திருக்க?...!
சற்று சிந்திக்க....!
இவை இல்லாதவிடத்து, எதுவுமே வாழ முடியாது என்பது தெளிவு...!
இவை மிகைக்குமிடத்து எல்லாமே “அழிவு” என்பதும் அறிவு...!
இது அனுபவம் தந்த முடிவு...!
“இயற்கை அனர்த்தங்கள்” ஐம் பூதங்களின் சீற்றமே என்பார்கள்...!
இயற்கையின் அழுகைதான் அனர்த்தமாய் வெடிக்கிறது என்பதை அறியாதோர்... !
பூமி பொறுமையிழந்தால் “நில நடுக்கம்”!
நீர் பொங்கி எழுந்தால் “சுனாமி” மற்றும் “வெள்ளம்”!
காற்றின் அத்துமீறல் “சூறாவளி”!
ஆகாயத்தின் குமறல் “இடிமுழக்கம்”!
அழிவுகளின் பயங்கரம் தீயால் வருவதுதான்... எச்சங்களைக்கூட விட்டுவைக்காது...!
இவை நாம் காலா காலமாய் கண்டுவந்த உண்மைகள். !
இன்றைய கால கட்டத்தில்....!
இயற்கை அழிவுகளின் இன்னுமொரு பரிணாமத்தை நாம் சிந்தித்ததுண்டா?!
இயற்கைக்கு சவாலாகவும்...!
இயற்கையே சவாலாகவும் மாறும் கொடுமை...!
“தாவரங்களின் அழிப்பு” !
மெய்ஞானம் வென்ற விஞ்ஞானம் கூறும் உண்மைகளுள் ஒன்றுதான் “உலக வெப்பமாதல்” (GLOBAL WARMING)!
இதற்குப் பிரதான காரணம் “காடழிப்பு”!
அழிவது காடு மட்டுமல்ல... முழு உலகும்தான்...!
கொடிய விலங்குகள் என நாம் வகுத்த எந்த மிருகமாவது இயற்கையை அழித்ததாக அறிந்ததுண்டா?!
ஆறறிவுடைய நாம் மிருகத்தை விடவும் கொடியவர்களோ?!
காட்டை அழித்து...!
நாட்டை பிடித்து...!
வானைப் பிழந்து...!
தீயால் எரித்து...!
காற்றில் கலந்து...!
நீரிலும் நிலத்திலும் வானிலும் கபடங்கள் செய்யும் கயவர்கள் கூட்டமா இந்த மானிடப் பிறவி??!
நம்மை மகிழ்விக்கும் இயற்கையை மகிழ்விக்க நாம் என்ன செய்திருக்கிறோம்??!
மனிதர்கள் வணங்கிட இயற்கையில் பல தெய்வங்கள் உண்டெனக் கூறும் நாம்...!
நம்மை வணங்கிட இயற்கையிடம் நல்லபடி நடக்க வேண்டாமா?? !
இது கவிதைக்கு ஒரு முடிவாக இருந்தாலும், நம் சிந்தனைக்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்

சவரம்

சூர்யா கண்ணன்
வெகுநாட்கள் கழித்து!
முகச்சவரம் செய்து கொண்டபோது!
நுரையோடு முடி சேர்த்து!
சில பொய்களும் விழுந்தன கீழே!..!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்!
1, நஞ்சப்ப ராவ் கட்டிடம்,!
பெட்போர்டு, குன்னூர் -1!
நீலகிரி மாவட்டம்

இறந்தும் வாழ்வர்

இமாம்.கவுஸ் மொய்தீன்
இறந்தும் வாழ்வர்!!!
---------------!
வெற்றிக்களிப்பில் !
இலங்கை இராணுவம்!!
வீழ்ந்து விட்டனராம் !
தமிழீழ வீரர்கள்!!
சு.ப.தமிழ்ச் செல்வன்!
உட்பட அறுவரைக்!
கொன்றுவிட்ட !
இறுமாப்பு!!
விடுதலைப் போர்!
துவங்கிய காலம் முதல்!
இன்றுவரையிலும்!
எத்தனை ஆயிரம் !
தமிழர்கள் மாய்ந்தார்கள்!!
ஓய்ந்துவிட்டதா !
விடுதலைப் போர்!!
தமிழீழம்!!
காலத்தின் கட்டாயம்!!
தமிழ்ப் போராளிகளை!
இலங்கை அரசு !
இன்று கொல்லலாம்!
தெய்வம் !
நின்று கொல்லும் நாள்!
வெகுதொலைவில் இல்லை!!
தமிழ்ச் செல்வன்!
புதைக்கப் ப்டவில்லை!!
விதைக்கப் பட்டிருக்கிறார்.!
ஒர் தமிழ்ச் செல்வனைக் !
கொன்று ஓராயிரம் !
தமிழ்ச் செல்வர்களுக்கு !
வித்திட்டிருக்கிறது!!
சமாதானத்துக்குச் சாவுமணி!
அடித்திருக்கிறது !
இலங்கை அரசு!!
தமிழீழம்!
வீரர்களைப் பிரசவிக்கின்றது!!
அவர்களைத் !
தீவிரவாதிகளாக்குகிறது!
இலங்கை அரசு!!
எவரெவர் எதையெதை!
விதைக்கின்றார்களோ!
அதையதையே!
அறுவடை செய்வர்!!
சிங்களவர்கள்!
தமிழர்களுக் கெதிராய்!
அநீதியும் அக்கிரமங்களும்!
விதைத்திருக்கின்றனர்!!
அவர்கள் என்ன!
பெறுவார்கள்!
காலம் பதில் சொல்லும்!!
அநீதி அழியும்!!
அறம் வெல்லும்!!
நீதி நிலைக்கும் நீடிக்கும்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

உள்முகம்

அன்பாதவன்
என்னுள் என்னைத்தேடி !
தொடங்கினேன் ஒரு பயணம் !
இவ்வளவு இலகுவான முயற்சியாய் !
இல்லையது !
பாதைகள் முழுக்க இடைஞ்சல்களும் !
தடங்கல்களும் !
விலக்கித் தொடர்வது பெரும்பாடாக !
கண்டேன் விசித்திரங்களை !
விபரீதங்களுங்கூட !
அறியா உலகங்களுள் நுழைந்த போதில் !
காத்திருந்தன ஆச்சர்யங்கள்; அருவருப்பில் !
ஆத்திரமூட்டின சில !
ச்சே! இதுவும் நானா !
படிமக் கோப்ரங்கள் இடிந்து சிதைந்து !
கசப்பின் கசகசப்பினூடாக !
எப்போதாவது வீழ்ந்து சந்தோஷத் தேந்துளி !
இருள் சூழ்ந்த புதுத் தடத்தில் !
தொடர்வதென் பெருவழி உள்முகமாய் !
சலிப்பில் !
திரும்பிவர யத்தனிக்கையில் !
என்னைத் தெரிந்த நானின் இருப்பு !
எழுந்ததொரு பெருங்கேள்வியாய் !
என் முன். !
- அன்பாதவன்