இறந்தும் வாழ்வர் - இமாம்.கவுஸ் மொய்தீன்

Photo by Tengyart on Unsplash

இறந்தும் வாழ்வர்!!!
---------------!
வெற்றிக்களிப்பில் !
இலங்கை இராணுவம்!!
வீழ்ந்து விட்டனராம் !
தமிழீழ வீரர்கள்!!
சு.ப.தமிழ்ச் செல்வன்!
உட்பட அறுவரைக்!
கொன்றுவிட்ட !
இறுமாப்பு!!
விடுதலைப் போர்!
துவங்கிய காலம் முதல்!
இன்றுவரையிலும்!
எத்தனை ஆயிரம் !
தமிழர்கள் மாய்ந்தார்கள்!!
ஓய்ந்துவிட்டதா !
விடுதலைப் போர்!!
தமிழீழம்!!
காலத்தின் கட்டாயம்!!
தமிழ்ப் போராளிகளை!
இலங்கை அரசு !
இன்று கொல்லலாம்!
தெய்வம் !
நின்று கொல்லும் நாள்!
வெகுதொலைவில் இல்லை!!
தமிழ்ச் செல்வன்!
புதைக்கப் ப்டவில்லை!!
விதைக்கப் பட்டிருக்கிறார்.!
ஒர் தமிழ்ச் செல்வனைக் !
கொன்று ஓராயிரம் !
தமிழ்ச் செல்வர்களுக்கு !
வித்திட்டிருக்கிறது!!
சமாதானத்துக்குச் சாவுமணி!
அடித்திருக்கிறது !
இலங்கை அரசு!!
தமிழீழம்!
வீரர்களைப் பிரசவிக்கின்றது!!
அவர்களைத் !
தீவிரவாதிகளாக்குகிறது!
இலங்கை அரசு!!
எவரெவர் எதையெதை!
விதைக்கின்றார்களோ!
அதையதையே!
அறுவடை செய்வர்!!
சிங்களவர்கள்!
தமிழர்களுக் கெதிராய்!
அநீதியும் அக்கிரமங்களும்!
விதைத்திருக்கின்றனர்!!
அவர்கள் என்ன!
பெறுவார்கள்!
காலம் பதில் சொல்லும்!!
அநீதி அழியும்!!
அறம் வெல்லும்!!
நீதி நிலைக்கும் நீடிக்கும்!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்
இமாம்.கவுஸ் மொய்தீன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.