தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வழியனுப்புதல்

றஹீமா-கல்முனை
அட்மிஷன்வந்தாச்சா??!
என்பதிலிருந்து துவங்கும்!
பரீட்சை பற்றிய!
வாப்பாவின்!
விசாரணை.....!!!!
தொலைக்காட்சியிலும்!
பத்திரிகையிலுமாய்.....!
வீணே!
உழன்று திரிகையில்....!
எதையாச்சும் படியேன்!!!
என்கிற!
கண்டிப்புகளில்!
ஆயிரம் ஆயிரம்!
அக்கறையிருக்கும்!!!
பேனா,பென்சில்!
ஆளடையாள அட்டை!
அட்மிசன்!
வரைக்குமாய்!
அத்தனையும் எடுக்கச்சொல்லி!
எந்நேரமும் எச்சரித்து....!
சிலநேரம் எரிச்சல் ஊட்டி...!
நேரத்தோடு தூங்கி!
நேரத்துக்கு எழச்சொல்லி!
பரீட்சைக்கு முதல் நாளே!
கண்டிப்பாய் உத்தரவிட்டு!
எதற்கும்!
ஒன்றுக்கு இரண்டு!
பேனாவை எடுத்துவை -என!
எச்சரித்தபிறகும்!
பரீட்சைக்கான!
அவசரத்துக்கு நடுவில்!
காலையில் எழுந்துதான்!
எழுந்துதான்!
பேனா வேணும் என்பேன்!!!!
கடிந்து....!
அவசரமாய்!
கடைக்கு விரைந்து....!
பேனா வாங்கி!
எழுதிப்பார்த்து....!
இடைவெளியில்!
கொண்டு சேர்த்து...!
வழியனுப்பிவிட.....!
இன்றைக்கு வாப்பா.........!
இல்லை!!!!!!!
உங்கள்!
வழியனுப்புதல் இல்லாத!
எனது முதல் பரீட்சை!!
எனக்கான!
எல்லாபரீட்சைகளும்!
இனி இப்படியேதான்!
தொடரப்போகிறது!
வாப்பா!!!!!
பல்கலைக்கழக!
இறுதிப்பரீட்சைக்கு!
வழியனுப்ப...!
இறுதியாய் பஸ் ஹோல்ட் வரை!
வந்தது..!
இப்போதும்!
நினைவில் உண்டு...!!!!
வேடிக்கையை பாருங்கள்!
பட்டதாரியானபிறகும்!
வேலைகொடுக்க பரீட்சை!
வைக்கிறார்கள்!
இப்போது இருந்திருந்தால்!
வேடிக்கையாய்!
சிரித்திரிப்பீர்கள்.....!
எல்லாம் எடுத்த பிறகும்!
பாதி திருப்தியோடுதான்!
பரீட்சை தொடரும்!
உங்கள் வார்த்தைகள்!
மோதுண்டு விழுகின்றன......!
சிரமங்களுக்கு நடுவில்!
படிக்கவைத்து!
பரீட்சைக்கும் வழியனுப்பிவிட்டு!
பெறுபேறுகள் வர முன்னமே!
வாழ்க்கை முடிந்துபோய்....!
எனது பெறுபேறு.....!
எனது பட்டமளிப்பு விழா..!
எனது வேலை....!
எனது வாழ்கை...!
என!
பின்னரான!
எந்த சந்தோசங்களையும்!
பகிர்ந்து கொள்ளாமல்...!
ஊர் உலகில்..!
நம்மைப்போல்!
எத்தனை!
வாப்பாவும் மகள்களுமோ

மனிதம் காப்போம்

அகரம் அமுதா
கவி: அகரம் அமுதா!
ஒருதாயின் வயிற்றுச் சேய்கள்!
ஒப்புரவா வாழ்ந்தி டாமல்!
இருகூராய் பிரிய நேர்ந்தால்!
இன்னலன்றோ வந்து சேரும்!!
மனிதனாய் பிறந்து விட்டு!
மனிதம்மேல் பற்றில் லாமல்!
தனியனாய் வாழ்ந்து வந்தால்!
தாழ்வன்றோ நேரக் கூடும்!!
“ஊர்க்காரன்” என்றே சொல்லி!
உதவாத வார்த்தை பேசி!
சீர்கெட்டுப் போவதாலே!
சிறிதும்நற் பயனும் உண்டோ?!
ஆரடா மனிதன் என்றால்!
மாரடா தட்ட வேண்டும்!
நேரடா எதிர்த்து நின்று !
நீசரை ஒடுக்க வேண்டும்!!
சேரடா மனிதா உன்றன்!
சிறுமதி விட்டோ ழித்தே!
பாரடா பாரில் நம்போல்!
பகைநாடும் இனமும் உண்டோ?!
தங்கைக்கே தீயை வைக்கும் !
தன்மையடா தோழா! நாளும்!
கங்கைபோல் வேர்வை சிந்தி!
கடிதுழைப் போரைச் சாடல்!
தோழரின் வேர்வை தன்னில்!
தோள்களை வளர்க்கும் தோழா!!
கோழைகள் அல்ல யாரும்!
குலைப்பதை நிறுத்திக் கொள்வாய்

மேன்மக்கள்

மார்கண்டேயன்
மலக்குழியில் இறங்கி!
மனமிறந்து!
மலம் அள்ளுபவரும்!
சாப்பாட்டில் கை வைக்க!
சாக்கடை அள்ள!
சமாதானம் செய்துகொண்டோரும்!
சுயகழிவகற்ற முடியாத!
நோய் சுற்றிய மனிதனை!
சுத்தம் செய்வோரும்!
பிணவாடையின்!
வீச்சங்களை விட்டொளித்த !
பிண்டமறுப்போனும்!
கலைக்கென்று சொல்லியே!
காமப் பசியாற்றும்!
கலைச் செல்விகளும்!
சொந்த வீட்டிலும்!
சுத்தமில்லா சுரணையற்றோர்!
நடக்கும் வீதிகளை சுத்தம் செய்வோரும் !
ஆயிரக்கணக்கானோர்!
அவசரத்தில் வீசும் அசிங்கங்களை!
அள்ளி எறிந்து அழகாக்குவோரும்!
தொலைத்த காமத்தால்!
வயிற்றில் தொடர்வதை!
வழித்து எடுத்து வழிசெய்வோரும்!
அவசரத்தில் பிறந்ததால்!
அனாதையாக்கப்பட்ட!
அன்பான குழந்தைகளும்!
குப்பையை கிளறி!
குடும்பம் நடத்தும்!
குடியானவர்களும்!
விலைபேசப்படும் உலகில்!
இன்னும் விதைத்துக் கொண்டிருக்கும்!
விவரம் கெட்ட விவசாயியும்!
யார் வாழ்ந்தாலும்!
வாழத் தெரியாத!
மேன்மை கெடாத இந்த!
மேன்மக்கள்!
இன்னும் எத்தனை ஆயிரமோ ?

பிளவுகள்

கவிதா. நோர்வே
இதோ எனது பூமி!
என் கால்களுக்கடியிலிருந்து!
நழுவுகிறது!
அரசியல் ஆணிகளாலும்!
பிளவுமனக் கடப்பாறைகளாளும்!
ஓங்கி அடித்தவண்ணம்!
ஆக்கிரமிக்கும் !
ஆடங்காத உயிரினங்கள் போல!
ஆறாதநடனம் புரிகின்றனர்!
எனது உலகு!
பல கூறுகளாக்கப்படுகிறது!
வெடிப்புகளின் நுனியிலிருந்து!
கோசங்கள் புறப்பட்டு!
புலரும் திசையெங்கும்!
பீங்கான் கோப்பைகள் போல!
சந்தமாய் உடைகிறது பூமி!
இவர்கள்!
தம்மை தேவர் என்றும்!
அவர்களை அசுரர் என்றும்!
அறிவிக்கின்றனர்!
அவர்கள்!
இவர்களை அரக்கர் எனவும்!
தம்மை வானவர் எனவும்!
அறிக்கையிடுகின்றனர்!
அப்படியே!
வெடிப்புகளிலும்!
விரியும் பாதளங்களிலும்!
வீழ்ந்து தொலைகின்றனர்!
பிளவுபடும் பூமியில்!
மனிதன் என்ற ஒன்றை!
யாருக்கும் நினைவில்லை...!
இப்போது எனது பூமி!
என் கால்களுக்கடியிலிருந்து!
நழுவுகிறது!
வெடிப்புகளின் விரிசல்களில்!
நான்!
முகவரியற்றுத் தொலைந்து போகுமுன்!
நாளை!
எம் பேரன் வருவான்!
மனிதம் என்ற சொல்லை!
எங்காவது புதைக்கவேண்டும்

வரவு

முத்து குமரன்
உன் உடல் என்னும் வனாந்தரத்தில்!
ஆதிவாசியாய் அலைந்து திரிகிறேன் நான்.!
வனம் தரும் அத்தனை சாத்ய சுகங்களையும்!
நுகர்ந்து புழங்கி!
கிறங்கிக் கிடந்தது என் பேராசை.!
கானகத்தில் எழுந்த!
உன் மனமென்னும் கோவில் பாழ்!
என்று நொந்து புலம்பினாய் நீ.!
இதோ அர்ச்சனைப் பூக்களோடு!
விழுதுகள்தோறும் ஊசலாடி!
விரைந்து வருகிறேன் நான்...!
-----------------------------------------------!
விலக்கம்!
உனக்கும் எனக்கும் இருந்த!
ஈர்ப்புகள் அத்தனையும்!
ஆவியாய்ப்போன பின்னும்!
மிஞ்சியது என்னிடம்!
குளிர் நடுக்கும் அனாதை நாய்க்குட்டியாய்!
அண்ணாந்து ஏங்கி என் கால் சுற்றும்!
நம் காதல்தான்.!
அதன் கழுத்தினை நெறித்து நான்!
கொல்வதற்குள் தயைசெய்து எனக்கொரு!
காரணம் சொல்லிவிடு-!
அதைக் கொல்லாமல்!
இருப்பதற்கு

தலைப்பில்லாத என் கவிதை

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
உயிரின் நிழலில்!
கசிந்து உருகும்!
காதல் விழிகள்!
எங்கு சென்றதுவோ..!
வழிகள் தோறும்!
காதல் கொடிகள்!
விரிந்து கிடக்கும்!
ஞாபக வெளியில்..!
இதயம் முழுக்க!
சுகந்தம் பரவும்!
இனிய நாட்கள்!
இனிமேல் வருமா?!
கைகள் கோர்த்து!
கடற்கரை மணலில்!
கவிதை படித்து!
நடந்த நாட்கள்..!
புல்வெளி தோறும்!
அமர்ந்த படியே..!
திட்டம் போட்டோம்!
வாழ்க்கை பற்றி...!
மழையில் நனைந்து!
இன்பம் நுகர்ந்தோம்.!
மாலைதோறும்!
சேர்ந்தே திரிந்தோம்..!
பட்டுப் பூச்சி!
போல நாமும்!
சுற்றித்திரிந்தோம்..!
சுகமாய் வாழ்ந்தோம்.!
யாரின் கண்கள்!
நம்மைச்சுட்டது!
காதல் கொடிகள்!
அறுந்து விட்டது.!
ஊரின் நினைவுகள்!
உரசும் போதுகளில்!
காதல் மனசும்!
கண்ணீர் விடும்..!
சோகம் நெஞ்சை!
துளைக்கும் எனினும்..!
தேம்பி அழத்தான்!
மனசு துடிக்கும்.!
காலக் கதவை!
திறந்து பார்த்தால்!
கண்ணீர் ததும்பும்.!
காதல் கதைகள்..!
எனதை உனதை!
நமதைப் போல

சேற்றுச்ச‌க‌தி.. சொல்லடி என்

சிபி பாபு
செல்லமே!
01.!
சேற்றுச்ச‌க‌தி...!
--------------------!
தின‌மும்!
இய‌ந்திர‌ வாழ்க்கையினூடே!
இய‌ந்திர‌மாகிப்போன‌!
ந‌ம‌க்கெல்லாம்!!
காலையில் பெய்யும் ம‌ழை!...!
அத‌னின் சேற்றுச்ச‌க‌தியால்...!
கால் ப‌தித்தோ!!
வாக‌ன‌ வேக‌த்தூற்ற‌லிலோ!!
ஒருவித‌ அருவ‌ருப்பு,அவ‌ம‌திப்பு...!
அதிருப்‍தியும்கூட‌...!
அதுவே‍‍‍‍‍‍‍‍‍ ப‌ழுதுபோன‌‍‍-த‌ன்‍‍‍‍‍!
நில‌த்தில் நீரிட்டு!!
‍‍‍‍‍‍‍‍‍கால்க‌ளை ஆழப்பதித்து!!
அத‌னிலே ஏரிட்டு!!
அத‌ற்க்கோர் ப‌யிருமிட்டு!‍-பின்!
க‌திர‌வ‌ன் பார்த்து!
வீடு திரும்புகையில்...!
விவ‌சாயியாய் அவ‌னுக்கோ!
அதுவே திருப்தி!.!
02.!
சொல்லடி என் செல்லமே...!
------------------------------- !
உன் கரங்கள் பற்றி!
என் கன்னங்களில் வைத்தும்!!
சில நேரங்களில்!
உன்கரங்கள்-என்!
கன்னங்களை பதம்பார்த்தும்!!
உன் மடிதனில்!
என் துயில்தனையும்!!
உன் தோல்தனில்!
என் கைப்போட்டு!
ஆல்பம் பார்த்தநாட்களும்!!
உன் பிஞ்சுப் பாதங்களை!
என் பாதங்கள் மீது வைத்து!
என் இருகரம் பற்றி!
நன்றாய் நான் நடக்க!
நடுவே உன்னிடம்!!!!
விழுந்துடப்போற பார்த்துடா,!
என்ற நாட்களும்!!
என்றோ சில சமயம்!
உன் கரங்கள் எனக்கு!
உணவூட்டிய நாட்களும்!!
உன்னிடம் பேசாததற்காய்!
நீ அழுத நாட்களும்!!
பிரியும்போது எப்படா வருவ,!
என்ற உன் வார்த்தையும்!!
உனை இழந்த எனக்கு!
மீண்டும் ஒருமுறை வருமா?...!
சொல்லடி என் செல்லமே...!
-சிபி.பாபு!
sathishbabu(CP.BABU)!
13,tuas avenue 6,!
singapore

என்ன‌வ‌ள்.. த‌ன்னைத்தானே.. பருந்து

ராம்ப்ரசாத், சென்னை
என்ன‌வ‌ள் ஒரு தேவ‌தை..த‌ன்னைத்தானே விர‌ட்டி.. !
பருந்து வாழ்க்கை!
01.!
என்ன‌வ‌ள் ஒரு தேவ‌தை !
--------------------------------!
பயணம் முடிந்ததும்!
நீ வீசிவிட்டுப்போன‌!
உன் பயணச்சீட்டு!
முன்பதிவு செய்தது!
என் வாழ்க்கைப்பயணத்தை... !
ஜாதகத்தில் நம்பிக்கை!
இல்லையா உனக்கு?!
உள்ளங்கை!
ரேகைகளை மருதாணியிட்டு!
மறைக்கிறாய்?...!
இதழ் ரேகைகளை!
உதட்டுச்சாயம் பூசி!
மறைக்கிறாய்?...!
உன்னைப்பார்க்கும்!
நேரம் என் இதயம்!
துடித்ததா?!
நினைவில்லை...!
இதயத்திலிருக்கும் நீ!
எப்படி நேரிலே தெரிகிறாய்!
என்ற யோசனையில்!
நிற்கையில் என்னிடம்!
நானே இல்லை...!
புவி ஈர்ப்புவிசை விதிக‌ள்!
பொய்த்துப் போவ‌து!
என் இத‌ய‌த்தில்தான்...!
அது விழுந்தால்!
உன்னிட‌ம் ம‌ட்டுமே!
விழுகிற‌து... !
நேர‌ம் போனால்!
வ‌ராது என்பார்க‌ள்...!
நீ வ‌ந்துவிட்டால்!
நேர‌ம் போவ‌தே!
தெரிவ‌தில்லை...!
நீ வ‌ரும்வ‌ரை!
நேர‌த்தைப்ப‌ற்றி!
என‌க்கு அக்க‌ரையில்லை...!
ஆகையால்!
அது போனால் என்ன‌?!
வ‌ந்தால் என்ன‌? !
!
02.!
த‌ன்னைத்தானே விர‌ட்டி.. !
----------------------------------!
மண்ணை ஆராய்ந்து!
பொன்னை விளைவிக்கும்!
வித்தை கற்ற!
பாடங்களை மறந்து!
வெறும் காகிதச்செடிகளை!
க‌ணிப்பொறிக‌ளில்!
நட்டு வைப்பதே!
புதுமை என்றாகிவிட்ட பிறகு!
காகித வண்ணங்களில் வேறுபாட்டையும்!
எண்ணங்களில் குறைபாட்டையும்!
தவிர்க்கமுடியவில்லை... !
முன்னேற்ற படிகள்தான்!
என்று குதூகலிக்கின்றனர்!
ஏறுவது குழிக்குள்தான்!
என்பதை அறியாமல்... !
விரைவாக விரையும்!
இரு ரயில்களில்!
முந்திச் செல்வது!
எது என்கிற முனைப்பில்!
கவனிப்பின்றி கடந்து போகும்!
சின்ன சின்ன சந்தோஷங்களைக்கூட‌!
நாளைக்கென்று ஒத்திப்போடுகின்றனர்!
இன்றைய பொழுது சேமிக்கவாம்... !
வெட்டியாய் பொழுதைக்!
கழிக்க வேண்டாமென்று!
வீட்டுக்கடன் வட்டிக்காய்!
கழிகிறது பொழுதுகள்... !
பத்துவருடங்கள் கழித்து!
கிடைக்கும் ப‌த்து ல‌க‌ர‌!
நிக‌ர‌ லாப‌மென்று பத்தாயிரம்!
க‌ண‌க்குக‌ள் போட்டு!
ப‌தினூரு கையோப்ப‌மிட்டு!
மிக‌க்க‌வ‌ன‌மாய் ஒரு ப‌ந்த‌ம்!
வாழ்நாள் நிர்ப‌ந்த‌மாய்...!
நில்லாம‌ல் ஓடும் ஓட்ட‌த்தில்!
த‌ன்னைத்தானே விர‌ட்டி!
ஓடும் விந்தை ம‌னித‌ர்க‌ள்!
இவ‌ர்க‌ள்... !
!
03.!
பருந்து வாழ்க்கை !
----------------------!
இட்ட முட்டைகளை!
மரப்பொந்தில்விட்டு!
இரை தேடி!
உயர பறக்குமாம் பருந்து...!
இத்தனை உயரம்!
பறப்பவன் தானொருவனே!
என் இறுமாந்து!
கொள்ளுமாம் தன்னை மறந்து...!
அப்போது,!
மரப்பொந்து முட்டைகளைப்!
பாம்பொன்று வந்து!
கவ்வி செல்லுமாம் அதுவே,!
அதன் பசிப்பிணிக்கு மருந்து...!
அப்படித்தான் கவ்வப்பட்டு!
காணாமல் போகிறது !
பணம் சமைப்போரின்!
சொந்த வாழ்க்கையும்

முளைத்தெழும்.. ஒப்படைத்தாயிற்று

கிண்ணியா பாயிஸா அலி
முளைத்தெழும் கவிதை.. ஒப்படைத்தாயிற்று!
01.!
முளைத்தெழும் கவிதை!
------------------------------!
பேரழகைச் சுமந்தபடி !
சூரியனை நோக்கிச் சீறுது பச்சையம்பு.!
நலம் விசாரிக்க வரும் காற்றோடு!
கைகுலுக்கியவாறே!
குளிர் விருந்தளித்து மகிழும் தளிரிலைகள்.!
மஞ்சள் பூவிதழின் மருங்குகளில் வந்தமரும் !
வண்டுகளின் ரீங்காரங்களுக்குள்!
கண்விழிக்கும் அரும்புகளில்தான்!
எத்தனை பரவசம்.!
பசிய மென்கொடிக்கயிறுகளில் !
தளம்பாது இறங்கி வருகிற வித்தைக்கார அணிலுக்காய் !
அடிமரத்தில் வாய்பிளக்கும் சாம்பல்பூனை.!
அட, முதல்மரத்தோடுதான் முளைத்திருக்கும்!
கவிதையும். !
02.!
ஒப்படைத்தாயிற்று!
--------------------------!
நெடுஞ்சாலையில் எதிரேகிய!
சாவடிகள் யாவையுமே!
பொறுமையும் சிரம்பணிதலுமாய்!
கடந்தாயிற்று!
பாரப்பொதியாய் கண்ணுக்குள் கனத்த!
உடமைகளை!
உரிய முகவரிகளுக்குள்;!
ஒப்படைத்தாயிற்று!
பணிகளுக்குள்ளும் இயலுமளவு!
சுற்றுநிரூபம் பேணியாயிற்று!
ஆக,!
சக்கரங்களின் தடம்புரளல் இன்றியே!
வண்டி நகர்ந்திட!
இழைகளுக்குள் மிக அடர்வாய்!
இறுகக்கோர்த்த உருமணிகள்!
வெண்மையை மட்டுமே!
மீதமாய் இருத்திவிட்டுத்!
தெறித்துருளும் !
இவ்வெல்லைப்புற நாட்களின் முடிவினிலே!
அவன் வாக்களித்த வாசமொன்றே!
நிதர்சனமானால்…..!
செவிட்டுப்பூமி புரிந்திடத் தவறிய!
அல்லது மறுத்த!
உன்னத அன்பின் ரகசியங்களையெல்லாம்!
பரிமாறியபடி!
சதா ஓடிக்கொண்டேயிருக்கும் அருவியோரம் !
துளிர்களால் நெய்த ஈரவானம்!
கூரையாய் கவிழ்ந்திருக்கும்!
குளிர் வனத்த்pல்!
நீள்கூந்தல் தோள்தூங்க!
மேலுமையிரு பொன்விரல்களை!
விரலிடுக்கும் புதிதாய் பிரசவிக்க!
இலைநுனியூடே இடரிவீழும்!
பனித்துளியின் ரீங்காரமொன்றே!
பின்னிசையாய் ஒலிக்கும்!
அம்முடிவிலி யுகங்களுக்குள்!
சுற்றிச்சுழலும் பத்திப்புகையாய்!
கனிவு மணப்பதும்!
நான் எப்போதுமே விரும்புகிறதுமான!
உன் தாலாட்டொன்றே கேட்டிருப்பேன்!
மறுபடியுமோர் தொட்டில்குழந்தையாகியே

எதிர்பார்ப்பு

ஸ்ரெபினி
02.!
எதிர்பார்ப்பு!
----------------!
வாழ்கின்ற!
வாழ்க்கைக்கும்!
வாழ நினைக்கின்ற!
வாழ்க்கைக்கும்!
இடையில் நீண்ட!
நிரப்பப்படாத!
இடைவெளிகள்!
பாலைவனத்தில்!
தண்ணீர் போல!
ஓடிக்கொண்டிருக்கிற!
மேகங்களில் மழை!
தேடிக்கொண்டிருக்கின்றன!
வாடிப்போன பயிர்கள்!
தூரத்தில்!
இலக்கற்று!
புறக்கின்றன பறவைகள்!
புதிதாக எதையோ தேடி!
கண்டங்கள் தாண்டியும்!
சலிப்பற்ற இறக்கைகள்!
கணனியின்!
மின் திரையில்!
தினமும் எதையோ!
தேடிக்கொண்டிருக்கும்!
விழிகளில்!
வழமைபோலவே சலிப்பு!
விடியலும்!
இருள்தலும்!
ஒரே மாதிரி நடந்து!
பழகிப்போன பாதங்களில்!
பழகிப்போனது வலியும்!
அனைத்துமே!
திரும்பத் திரும்ப!
நிகழ்ந்து கொண்டே!
இருந்தாலும்!
எதிர்பார்ப்பு மட்டும்!
எப்போதும் புதிதாய்!
ஏதோ ஒரு விடியலில்!
எல்லாமே!
மாறிப்போகும்!
என்பது போல!
- ஸ்ரெபனி