சேற்றுச்ச‌க‌தி.. சொல்லடி என் - சிபி பாபு

Photo by Tengyart on Unsplash

செல்லமே!
01.!
சேற்றுச்ச‌க‌தி...!
--------------------!
தின‌மும்!
இய‌ந்திர‌ வாழ்க்கையினூடே!
இய‌ந்திர‌மாகிப்போன‌!
ந‌ம‌க்கெல்லாம்!!
காலையில் பெய்யும் ம‌ழை!...!
அத‌னின் சேற்றுச்ச‌க‌தியால்...!
கால் ப‌தித்தோ!!
வாக‌ன‌ வேக‌த்தூற்ற‌லிலோ!!
ஒருவித‌ அருவ‌ருப்பு,அவ‌ம‌திப்பு...!
அதிருப்‍தியும்கூட‌...!
அதுவே‍‍‍‍‍‍‍‍‍ ப‌ழுதுபோன‌‍‍-த‌ன்‍‍‍‍‍!
நில‌த்தில் நீரிட்டு!!
‍‍‍‍‍‍‍‍‍கால்க‌ளை ஆழப்பதித்து!!
அத‌னிலே ஏரிட்டு!!
அத‌ற்க்கோர் ப‌யிருமிட்டு!‍-பின்!
க‌திர‌வ‌ன் பார்த்து!
வீடு திரும்புகையில்...!
விவ‌சாயியாய் அவ‌னுக்கோ!
அதுவே திருப்தி!.!
02.!
சொல்லடி என் செல்லமே...!
------------------------------- !
உன் கரங்கள் பற்றி!
என் கன்னங்களில் வைத்தும்!!
சில நேரங்களில்!
உன்கரங்கள்-என்!
கன்னங்களை பதம்பார்த்தும்!!
உன் மடிதனில்!
என் துயில்தனையும்!!
உன் தோல்தனில்!
என் கைப்போட்டு!
ஆல்பம் பார்த்தநாட்களும்!!
உன் பிஞ்சுப் பாதங்களை!
என் பாதங்கள் மீது வைத்து!
என் இருகரம் பற்றி!
நன்றாய் நான் நடக்க!
நடுவே உன்னிடம்!!!!
விழுந்துடப்போற பார்த்துடா,!
என்ற நாட்களும்!!
என்றோ சில சமயம்!
உன் கரங்கள் எனக்கு!
உணவூட்டிய நாட்களும்!!
உன்னிடம் பேசாததற்காய்!
நீ அழுத நாட்களும்!!
பிரியும்போது எப்படா வருவ,!
என்ற உன் வார்த்தையும்!!
உனை இழந்த எனக்கு!
மீண்டும் ஒருமுறை வருமா?...!
சொல்லடி என் செல்லமே...!
-சிபி.பாபு!
sathishbabu(CP.BABU)!
13,tuas avenue 6,!
singapore
சிபி பாபு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.