தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இணையம்

லலிதாசுந்தர்
கணிணிப்பெண் கண்ணசைக்க!
எலி வலைவிரிக்க!
எழுத்துக்கள் விளையாடும்!
டென்னிஸ் அரங்கம்!
உலகிற்குள் வீடு - நிலைமாறி!
வீட்டிற்குள் உலகை கொண்டுவர!
போடப்படும் வலைபின்னல்!
வாழ்த்துகளையும் தகவல்களையும்!
மட்டுமல்ல!
இருமனங்களையும் பரிமாறிக்கொள்ள!
தூதுவிடப்படும்!
நவீனகால புறா - இந்த இணையம்!
- லலிதாசுந்தர்

கால்கள் முளைத்த கவிதை

மன்னார் எம். ஷிபான்
எப்பொழுதாவது கவிதைகள்!
சிறகுகள் தரிப்பதுண்டு.!
கால்கள் முளைத்துக்!
கண்டதுண்டா நீங்கள்..?!!
நான் கண்டேன்...!
கால்கள் முளைத்த!
என் கவிதையை.!
எழுதி முடித்து!
சிறிது காலத்தில்!
எழுந்து நடந்தது.!
வீடு முழுக்க!
வேகவேகமாய்ச்!
சுற்றிவந்தது.!
அடுக்களைக்குள்!
அடிக்கடி நுளைந்தது.!
தட்டு முட்டுக்கள்!
தரையில் சிதறின.!
சாப்பிடும் வேளைகளில்!
எல்லோர் உணவையுமது!
எச்சிற்படுத்திற்று.!
கணினியிலும் அது!
கைவரிசை காட்டியது.!
இதுவரை காணாததெல்லாம்!
திரையில் தோன்றின.!
என் எழுதுமேசையின்!
விரிப்பை அது!
இழுத்தெறிந்தது.!
உடைந்த மைப்போத்தலால்!
உடல் முழுக்கக்!
கோலம் போட்டது.!
கை கால்களை உதறி!
கத்திப் புரண்டது.!
என் எச்சரிக்கைகள்!
எடுபடவில்லை.!
அதட்டல், மிரட்டல்களுக்கது!
அசைந்து கொடுக்கவில்லை.!
கடைசியாக அது!
களைத்துப்போனது.!
மடிமீது வந்தமர்ந்து!
கண்ணயர்ந்த்து.!
என்ன செய்வது...?!!
இல்லறத்தில் இருவர்!
இணைந்தெழுதும் கவிதைகள்!
இப்படித்தான்.!
எப்போதுமே நமை!
செல்லமாக!
சினப்படுத்தும்

மாதா வெளியேற.. அறையை விட்டுப்

தீபச்செல்வன்
01.!
மாதா வெளியேற மறுத்தாள்!
-------------------------------!
சனங்கள் மாதாவையும்!
குழந்தை யேசுவையும்!
கூட்டிச் சென்றிருக்கலாம்.!
யேசுவின் குருதியால்!
எழுதப்பட்ட பைபிள்களை!
கிளைமோரில் சிதறிய!
மாணவர்களின்!
குருதி பிறண்ட!
வெள்ளைச் சீருடைகளில்!
ஆயர்கள்!
கட்டி எடுத்துப்போனார்கள்.!
வத்திக்கான் எங்கேயிருக்கிறது.!
பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்!
வெளியில் போன அருட்சகோதரிகள்!
குருதி பிறண்ட!
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.!
மடு மாதாவின் தேவாலயம்மீது!
எண்ணிக்கையற்ற!
எறிகனைகள் நுழைந்தன!
குழந்தை யேசுவின் அழுகை!
வீறிட்டு கேட்க!
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.!
சிலுவை பொறிக்கப்பட்ட!
எறிகனைகளும்!
பிறை பொறிக்கப்பட்ட்!
எறிகனைகளும்!
சூலம் பொறிக்பப்பட்ட!
எறிகனைகளும்!
புத்தரின் மூடிய கண்களில்!
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்!
படையினரிடமிருந்து!
வந்து விழுந்து கொண்டிருந்தன.!
வளாகத்தை விட்டு!
வெளியை விமானம் உழுதடித்தபோது!
சனங்கள் மாதாவை குழந்தையோடு!
தனியே விட்டுச் சென்றனர்.!
பாப்பரசர் வத்திக்கானில்!
பைபிளை திறந்தபோது!
குருதி ஒழுகியது!
அமெரிக்காவின் முன்னால்!
குருதி காயாத!
சிலுவையோடு நின்றார் யேசு.!
மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற!
பிள்ளைகளையும்!
சவப்பெட்டியில் கண்டோம்!
வண்ணத்துப்பூச்சி திரிகிற!
பற்றைகளில்!
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்!
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி!
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.!
பாப்பரசர் மன்றாடவில்லை!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.!
சனங்களோடிருந்த மாதாவுக்கும்!
குழந்தைக்கும் எதிராக!
அரசுகள் யுத்தத்தை புரிந்தன!
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்!
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.!
இனி இங்கிருக்கமுடியாது!
என்று!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்!
மாதா மறுத்தாள்!
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.!
சனங்கள் விட்டுப்போன!
மாதாவையும் குழந்தையையும்!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
கட்டாயப்படுத்தி!
நேற்றோடு கூட்டிச்சென்றனர்!
மடு தேவாலய வளாகத்தை விட்டு..!
----------------------------------------------------------------------------!
03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர். மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள். சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று!
மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.!
----------------------------------------------------------------------------------!
!
02.!
அறையை விட்டுப் போன பல்லி!
------------------------------------------------!
அறையில் வாலருந்த!
ஒற்றைப் பல்லி!
அசையாது கிடக்கிறது!
வாலைத் தொலைத்த!
பல்லியின் மீது!
விளக்கு உடைந்து விழுகிறது!
இரண்டு பல்லிகள்!
ஒருநாள் புணர்ந்தபடி!
நமது படுக்கைகளின் மீது!
விழுந்தோடின!
நீயும் நானும்!
பல்லிகள் புணர்வதையும்!
நெருங்கி நகர்வதையும்!
அதன் சுவர் வெளிகளையும்!
பார்த்துக்கொண்டிருந்தோம்!
நமது காதலிகளுடனான!
புணர்தலின் நெருக்கத்தை!
அதனிடத்தில் கற்றுக்கொண்டோம்!
கண்களின் மோகத்தையும்!
வாயின் தாகத்தையம்!
நீ ரசித்துக்கொண்டிருந்தாய்!
இரண்டு தோழமை பல்லிகளாகி!
அதன் நெருக்கத்தை!
பார்த்துக்கொண்டிருந்தோம்!
பல்லிகளின் நெருக்கம்!
நிறைந்த அறையில்!
இப்பொழுது!
துரோகம் நிரம்பியிருக்கிறது!
மூடியிருந்த அறை!
உடைந்துவிட!
நான் வெளியேறுகிறேன்!
உனது பொருட்கள் நிரம்பிய அறையில்!
எனது கனவு மிதிபடுகிறது!
பாதிக்கனவில்!
பாதிதூக்கத்தில்!
நிலவு விரட்டப்பட்ட!
இராத்திரியில்!
அந்த பல்லிகளையும் என்னையும்!
நீ துரத்தியிருக்கிறாய்!
எனது கட்டிலையும்!
பாதி சாப்பிட்ட தேனீரையும்!
தூக்கி வெளியில் போட்டிருக்கிறாய்!
பொருட்கள் இல்லாமல்!
வெளித்திருக்கிற!
எனது அறையில்!
கதவுகள் திறந்திருக்க!
நான் விழுந்திருக்கிறேன்!
கூடவே வந்திருக்கிறது!
வாலருந்த ஒற்றைப் பல்லியும்.!
!
-தீபச்செல்வன்

காதலில் தோற்றவன்

சின்னு (சிவப்பிரகாசம்)
அன்று இஞ்சியும் இனித்ததடி!
இன்று இளநீர் கசக்குதடி!
நிலை கெட்ட பொழுதுகள்!
தரம் கெட்ட செயல்களில்!
தொலைத்த நாட்கள்!
மனதில் வடுக்களாய் !!
பெண்ணே உந்தன் பேரழகு!
மனதில் ரணங்களாய் !!
எத்துணை முறைகளடி!
உனை அனைத்து பார்த்திருப்பேன்!
மனதுக்குள் !!
லட்சியம் இன்றி!
அர்ச்சனை செய்தேன்!
பேரழகாய் உனை ஆராதித்தேன்!
முத்தழகு சித்திரம் என்றேன்!
முடிவைத்த உன் அழகை!
கட்டழகு கோபுரம் என்றேன்!
கண்ணே உந்தன் முன்னழகை!
வளங்கொண்ட நிலம் என்றேன்!
பெண்ணே உந்தன் பின்னழகை!
நீ விலகியது விளங்காமல்!
காமம் நீங்கி காதலித்தேன்!
கற்பனையில் வாழ்ந்து!
சிந்திக்க மறந்தேன்!
குடிப்பது குலத் தொழிலாய்!
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்!
புகைப்பது புது பழக்கம்!
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்!
!
நண்பர்கள் தொலைத்து!
நாணயம் இழந்தேன்!
கண்ணிமை அசைவுக்கு!
யாகங்கள் செய்தேன்!
நெருப்பு சாம்பலாகி!
விடியலில் குப்பையானேன்!
விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்!
உண்மை சொன்னால்!
இருந்தும் இறந்துவிட்டேன்!
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

அருண்மொழி தேவன்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்!
என் முப்பாட்டன் முன்டாசு கவிஞன்!
நம்பிக்கையுடன் பாடினான்..!
!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
!
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்!
நான் பாடுகிறேன் நம்பிக்கையோடு..!
!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
வல்லரசாய் நாமின்று ஆகிவிட் டோமென்று!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
-இ.அருண்மொழிதேவன்

இரவு மழை

சரோஷா
அத்தனை பாதச்சுவடுகளையும்!
தாண்டி, பளிச்செனத்தெரியும்!
குழந்தையின் பாதச்சுவடுகளைப்!
பார்த்து ரசிக்கச்செய்ததற்காக!
நேற்றுப்பெய்த இரவு மழையே!
உனக்கு நன்றி !!
உனக்கான கண்ணாடி!
உனக்கான கண்ணாடியில்!
கல்லெறிந்தாய்!
உடைந்த ஒவ்வொரு துண்டும்!
உன்முகம் காட்டும் !
என்பதை மறந்து!!
சிவப்பதிகாரம்!
எத்தனை பொற்கொல்லர் !
உயிர்கள் !
ஒற்றைச்சிலம்பிற்கு!!
!
-சரோஷா

சித்து.. பார்த்தவர்கள் யாருமில்லை

ந.மயூரரூபன்
01.!
சித்து!
------------!
அசையும் காற்றிலுடைந்து பரவும்!
நீருந்தியெழும் பறவையின் சாரலாய்!
என்னுலவு கணங்களின்!
வனத்தாளுடைந்து கொள்கிறது.!
சிறுபறவைகளின் குலாவுகுரல்!
நுழைந்தென்னுள் வழிகிறது!
என்னுள் பெருகுமுன்னால்!
என்னுதிரா வண்ணம்!
சுடரேறி விண்ணளைகிறது.!
வண்ணவான் படைக்கவெனை!
உந்துமுன்னால் இறைகிறதென்னுள்!
இம்மை பெருக்கும் சித்து.!
!
02.!
பார்த்தவர்கள் யாருமில்லை!
-----------------------------------------!
வாய்ப்புப் பார்த்திருக்கும் தெருவில்!
எனது காலடிகளைத்தேடி!
ஓர் நினைப்பு!
இறங்கியலைகிறது!
என்னைத் தவிர்த்து.!
விழிகள் மயங்கும்!
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்!
நினைவைக் களைந்து!
திகைத்திருக்கும் எனக்குள்!
நுழைந்து சுருண்டுகொள்கிறது!
என் நினைவு தின்ற அத்தெரு.!
நான் நடந்தலையும் வெளியில்!
மெதுவாய்த் தெரு!
சரிந்திறங்கியதை!
கண்டவர்கள் யாருமில்லை....!
வெளியெங்கும்!
பழமையின் வீச்சமாய்!
என் கனவுகள் மட்டும்!
படிந்திருப்பதைக் கண்டதாய்ப்!
பேசிக்கொண்டார்கள் எல்லோரும்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்

இரா.இரவி
தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு!
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று!
மற்றவர்களுக்கு உயிர்தான் மேல்!
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்!
தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்!
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்!
தமிழைப் பழிப்பவர்களை நாங்கள்!
தாயே தடுத்தாலும் விடமாட்டோம்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி!
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி!
அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி!
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி!
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி!
பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி!
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி!
பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி!
தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி!
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை!
தமிழின் மகுடமான திருக்குறளுக்கு!
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்

ஆளுமை

சு.திரிவேணி, கொடுமுடி
வாழ்ந்த பிறகும் !
பிடிபடாத வாழ்க்கை போல !
தோற்றமும் மாற்றத்தின் காரணமும் !
புலனாகாத காற்றே! !
எங்கும் நிறைந்த !
நீயும் கடவுள்தான்! !
உயிர் வாழ்தலும் வீழ்தலும் !
உன் கையில்தான்! !
மென்மையாய் வன்மையாய் !
உன் திறன் உணரச் செய்வாய் நீ! !
எளியோராயினும் ஏழையர் !
குடிலில் இயல்பாய்ப் போய் வருவாய் !
பிரதிப்பலனும் பேதமும் அறியாய்! !
வாழ்விக்கும் கர்வம் இன்றி - !
புகழும் தேடாது- !
பாகுபாடில்லாத இயற்கையே... !
வெறுப்புடன் கதவடைப்போர் !
மீதும் விருப்பம் கொண்டு !
உள் நுழைந்து சென்று பார்ப்பாய். !
உன் தேவையில்லாப் !
பொருளையும் கூடத் !
தொட்டுச் சென்று !
அன்பைச் சொல்வாய் நீ! !
ஆட்சி செய்யாத !
அதிகாரம் காட்டாத !
ஆளுமையே... !
தலை வணங்கிக் கேட்கிறோம்... !
கற்றுக் கொடு இந்தத் தகைமையை

தூளி.. தருணம்.. அழுகை

ப.மதியழகன்
01.!
தூளி !
-----------!
வளர்ந்ததும் தொலைந்திடும்!
குழந்தைமை பற்றி!
யாருக்கும் அக்கறையில்லை!
பிஞ்சு நெஞ்சத்தில்!
நஞ்சை விதைக்காத!
மானிடர்கள் எவருமில்லை!
பயமுறுத்த வேண்டும்!
என்பதற்காகவாவது!
சொல்லி இருப்போம்!
பேய்க் கதைகளை!
குடுகுடுப்பைக்காரனை!
பூச்சாண்டி எனக்காட்டி!
அச்சுறுத்தி!
சாப்பிட வைப்போம்!
எவ்வளவு!
கவனத்தோடிருந்தாலும்!
தவறுதலாகவாவது!
விஷத்தை விதைக்க!
வேண்டிவரலாம்!
கவனமாகக் கையாள வேண்டிய!
கண்ணாடிப் பாத்திரம் போன்றது!
பால்யம். !
02.!
தருணம் !
------------------!
பரிதியைக் காணோம்!
வானில் பரிதியைக்!
காணோம்!
வனத்தில் திசைதெரியாமல்!
தொலைந்ததா!
கள்வர்கள் கைகளில்!
அகப்பட்டுக் கொண்டதா!
எரிந்து எரிந்து!
சாம்பலாய்ப் போனதா!
ராட்சச பாறைகள் மோதி!
தூள் தூளாய் ஆனதா!
மக்களின் செயல்களைக்!
காணப் பிடிக்காமல்!
மலைகளின் இடையே!
ஒளிந்து கொண்டதா!
நிலவிடம் பந்தயம் கட்டித்!
தோற்றதா!
இருளைக் கிழித்து ஒளியைப்!
பரப்பும் வேலையில்!
அலுப்பு தட்டிவிட்டதா!
இயற்கைக்குப் பயந்து!
நடக்க முடியாதென!
மானிட இனத்தை!
முழுமையாக கைவிட்டு!
விட்டதா. !
03.!
அழுகை !
----------------!
நீர் நிலையில்!
மீனைக் கொத்திச் செல்லும்!
மீன் கொத்திப் பறவையின்!
பிம்பம் நீரில் விழும்!
மீனைப் பிரிந்த!
துக்கம் தாங்காமல்!
நீர் கேவியழும்!
துளித்துளியாய் மழை!
குடை மீது விழும்!
உன்னையும் கொஞ்சம்!
நனைக்கவா என்று!
கேட்டபடியே!
மழை விடைபெறும்!
காலை வருடிச் செல்லும்!
அலைகள்!
கண்டுபிடித்துவிடும்!
காதலியுடன் வந்திருப்பதை!
விட்டில் பூச்சி!
சுடரில் மோதி இறந்தது!
நெருப்பின் கைகள்!
நாலா பக்கமும் நீண்டது!
பரிதி மறைந்ததும்!
இருள் சூழ்ந்தது!
இரவின் ஆகிருதி!
விகாரமாய் இருந்தது