தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கீதையும் காதலும்... காதல்

ப.மதியழகன்
01.!
கீதையும்... காதலும்... !
-----------------------------!
மாலையிலே வீதிப் பாதையிலே!
மயிலென நடந்துவரும் வெண்மதியே!
உன்னை கோளநிலா அழைத்திடுமோ!
தன் காதல்தனை உதிர்த்திடுமோ!
உன் பால்வடியும் முகத்ததைப் பார்த்து!
வெண் சூரியன் தான் விலகி வழிவிடுமோ!
வில்லைப் போன்ற அந்த விழிகளைப் பார்த்து!
அந்த வானவில்லே மயங்கிடுமோ!
உன் எழிலான கூந்தலைப் பார்த்து!
அந்த மேகம் தனில் மழைவருமோ!
உன் இருவிழி பார்வை பார்த்து!
மின்னல் கண் சிவந்திடுமோ!
உன் எழில் கொஞ்சும் இடையைப் பார்க்க!
விண்மீன்கள் தரையில் இறங்கிடுமோ!
யாரும் தீண்டாத இந்த மெய்தனிலே!
கீதையின் புனிதம் அடங்கிடுமோ!
உன் கொஞ்சும் குரல் கேட்டு!
அந்த அலைகள் விண்ணைத் தொட்டிடுமோ!
உன் கனிவான் பார்லையில்!
அந்த புயலும் தென்றலாய் மாறிடுமோ!
உன் பாதச்சுவடு பட்டு!
இந்த மண்ணுலகம் சொக்கமாய் மாறிடுமோ!
உன் கைகள் என்னைத் தீண்டியதால்!
உன் உடலில் என்னுயிர் கரைந்திடுமோ!
உன் விழிகள் இரண்டு பார்த்துவிட்டால்!
அந்த எரிமலைகூட பனிப்பாறை ஆகிடுமோ!
உன் நெற்றிப்பொட்டை பார்க்கையிலே!
பூமியின் நிலவுதான் தேய்ந்திடுமோ !
!
02.!
காதல்!
----------!
சூரியன் பார்வையில் உருகும்!
பனி போன்றது காதல் !
முழு நிலவில் வீசும்!
தென்றல் போன்றது காதல் !
குருவின் மீது கொள்ளும்!
பணிவு போன்றது காதல் !
கடவுள் மீது கொள்ளும்!
பக்தி போன்றது காதல் !
கரை காணா கடலின்!
அலை போன்றது காதல் !
விளக்கு திரியிலுள்ள!
சுடர் போன்றது காதல் !
இருளில் மின்னும் மின்னலின்!
ஒளி போன்றது காதல் !
நீயும் நானும் பிறந்ததற்கு!
காரணமாயிருந்தது காதல்

மனத்தாபம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்!
தொலைந்துவிட்டது போல்!
முடக்கப்பட்ட அவனது!
முழங்கால்களிரண்டும் தோன்றும்.!
வலதுகைவிரல் மடிப்புகளால்!
வாரப்படாது கோதிவிடப்பட்ட!
முடிகளின் ஒருபகுதி - மாதர்!
முக்காடிட்டதுபோல் தோன்றும்.!
நுளம்புத் தொல்லை என்று!
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து!
நிமிர்ந்து கையில் அகப்பட்ட!
நாசினியை விசிறும் போதும்,!
பன்னிரண்டு மணிக்கு மேல்!
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்!
முழங்கால்களும் வலது கையும்!
முடிகளின் ஒரு பகுதியும்,!
அப்படித்தான் தோன்றும்!!
அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்!
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!!
தொடைகளுக்குள் அல்ல!
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்

ஏதாவது செய்யணும் ?

ராமசுப்ரமன்யன்
கடவுளாலும் காதலியாலும்!
கைவிடப்பட்ட பின்னும்!
போதையும் புகையுமே!
வாழ்க்கையாகிவிட்ட பின்னும்!
புதைக்கப்பட்ட ஒரு காதலும்!
எரிக்கப்பட்ட ஒரு இதயமுமே!
மிச்சமாயிருக்கும் போதும்!
நாட்டுக்கு ஏதாவது!
செய்யவேண்டுமென்ற துடிப்பெல்லாம்!
வீட்டுக்கு எதுவுமே!
செய்யமுடியவில்லை எனும்!
ஏக்கத்திலேயே வடிந்து விடுகிறது...!
கவிதை ஆக்கம்!
ராமசுப்பிரமணியன்.எஸ்

எது மூலதனம்?

வேதா. இலங்காதிலகம்
நம்பிக்கை மூலதனத்தில்!
தன்னம்பிக்கைச் சிங்காசனம்.!
சுயநம்பிக்கை நிர்மாணத்தில்!
சுகவாழ்வு ஆரோகணம்.!
மூலதனமற்ற எத்தனம்!
கோலப் பிழையாகும்.!
பாலைவனத்தில் பயிர்செய்ய!
வேலையற்றவனும் சிந்திக்கான்.!
ஆரோக்கிய உடலிற்கு!
உழைப்பு இலட்சணம்.!
உழைப்பின் மூலதனத்தில்!
உல்லாசம் வேதனம்.!
அங்கீகாரம், அரவணைப்பு!
தங்கமூலதனம் பாலருக்கு.!
பொங்கும் ஞானமிதால்!
பூங்காவன வளர்ச்சியாகும்.!
பஞ்சபூத நியமனத்தில்!
கொஞ்சும் இயற்கைத் தரிசனம்.!
மோகன மூலதனம், இது!
அமைதியூருக்கு விமானம்.!
நிர்வாகம் சிறக்க!
நிதி மூலதனம்,!
நிதிநிலை தடுமாறினாலோ!
நந்தவனமல்ல குடித்தனம்!!
அன்பின்மை பலவீனம்.!
அன்பு காலமுழுதும்!
சந்தனப் பற்றாகட்டும்.!
மனிதநேயம் உலக!
சமாதானத்திற்கு மூலதனம்.!
மண்மானம், இனமானம்!
பிரதான ஆதனம். இது!
அவமானமல்ல விழியுங்கள்

லாட்டரி

இமாம்.கவுஸ் மொய்தீன்
லாட்டரி!!
--------------!
தணியாத!
மோகம்! !
தீராத !
ஆசை!!
இலட்சாதிபதி!
ஆகிவிட...!
எவ்வளவோ!
வாங்கிக்!
குவித்தும்!
அதிர்ஷ்டமில்லை!!
அடிக்கின்றான்!
லாட்டரி!!!
சாலை மிருகங்கள்!!
---------------------------------!
பயண நேரத்தில்!
சாலை விதிகளை !
மீறுபவர்களைக்!
காணும் போதுதான்!
தெரிகிறது!
வாகன !
ஓட்டிகளிலும்!
எத்தனை!
மிருகங்கள்?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

காணவில்லை..ஆபிஸில்.. கதை

பிரதிபா
01.!
காணவில்லை!
-----------------!
உனக்கு!
எல்லாம் தெரியும்!
என்னை!
என் முதுகிலிருக்கும் மச்சத்தை!
இடது காதில் மறைவாக இருக்கும் தழும்பை!
பெருவிரலில் நைந்துப்போன நகக்கணுவை.!
அடர்ந்த இருளிலும்!
உன்னால் அடையாளம் காணமுடியும்!
என் பட்டுப்போன்ற மேனியின்!
ஒவ்வொரு வளைவுகளையும்.!
ஆனால் நீ அறிந்திருக்கவில்லை!
அந்த ஏழு கடல்களைத் தாண்டிய போது!
என் பெருமூச்சில் !
எரிந்துபோன ஆகாயத்தை.!
உன் அணைப்பில் புதைந்து!
இதழ் நனைத்த முத்தத்தில்!
சரிந்து விழுந்த நான்!
காணாமல் போனதை.!
02.!
ஆபிஸில் மதிய உணவு நேரம்!
--------------------------------!
அவன் நிறுத்தாமல்!
பேசிக்கொண்டே இருந்தான்.!
திறந்திருந்தது அவன் பெரிய டிபன் கேரியர்!
அறுசுவை உணவு வகைகள்!
அவியல், பொறியல்!
சட்னி, சாம்பார் சாதம், தயிர்ச்சாதம்,!
அப்பளம் தொட்டுக்கொள்ள ஊறுகாய்!
இத்துடன் !
தித்திக்கும் இனிப்பில்!
இரண்டொரு மாங்கனித் துண்டுகளின் மணம்.!
சாப்பிட்டுக்கொண்டே !
அவன் !
அவன் மனைவியைப் பற்றிக்!
குறைபட்டுக்கொள்கிறான்.!
அவள் - அறிவிலியாம்.!
சோம்பேறியாம்!
குண்டாம்!
பார்க்க சகிக்கலையாம்!
முட்டாளாம்!
நடனங்கள் கண்டதில்லையாம்!
சங்கீதக்கச்சேரி கேட்டதில்லையாம்!
ஏன்..!
மாசாலா டீ னா கூட!
என்னவென்று தெரியாதாம்!
அவளுடன் வாழும் வாழ்க்கை!
வெறுத்துவிட்டதாம்!
ஆனாலும் ஆனாலும்!
என்ன செய்வது!
குழந்தைகளுக்காக!
குடும்ப கவுரவத்திற்காக..!
என்றவன்..!
என்னைப் பார்த்து!
சொன்னான்..!
நான் புத்திசாலியாம்!
அறிவுஜீவியாம்!
ஆபிஸ் வேலை!
வீட்டு வேலை!
இரண்டிலும் கெட்டிக்காரியாம்!
சம்பாதிக்கிறேனாம்!
கவிதை கூட எழுதுகிறேனாம்!
என் கணவர் ரொம்பவே!
கொடுத்து வைத்தவராம்...!
நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்..!
அன்றுமாலை!
என் கணவருக்குப் பிடித்தமானதை!
சமைத்துக் கொண்டிருக்கும்போது!
அவர் ஆபிஸ் பையன் !
கழுவப்படாத டிபன் பாக்ஸை!
என்னிடன் நீட்டிவிட்டு!
சொல்லிச்சென்றான்!
'பாஸ் இன்று லேட்டாக வருவார் என்று'!
03.!
கதைச் சொல்லு!
-----------------!
கதைச் சொல்லு!
எனக்கொரு கதைச் சொல்லு.!
உன் கதையில்..!
ஏழு கடல்கள்!
இடியுடன் கூடிய புயல்!
தீ கக்கும் டிராகன்!
இவர்களுடன் இருக்கட்டும் !
அரக்கனைப் பரிகாசம் செய்யும்!
ஒரு சின்னப் பச்சைக்கிளி!
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.!
இருக்கட்டும்!
முடிவில்லாத சிக்கலான பாதை!
வெளிவரமுடியாமல்!
ஒவ்வொரு படியிலும்!
தடைக்கற்கள்!
பயப்படவில்லை.!
இந்த மாதிரிக் கதைகளை!
எனக்குத் தெரியும்.!
எல்லா கதைகளிலும்!
எப்போதும்!
கடைசியில்!
இனிமையாக வாழ்ந்ததாக !
சுபமாக முடியும் என்று.!
கதைச் சொல்லு!
எனக்கு.!
மூச்சுத் திணறும் அணைப்பில்!
வேப்பமரத்தடியில்!
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..!
கதைச் சொல்லு எனக்கு.!
உன் கதைக் கேட்டு!
அடிப்பட்ட மான் போல!
துடிதுடித்து அழவேண்டும்.!
கதை முடிவில்!
தொலைந்து போன குழந்தைகள்!
சந்தர்ப்பவசத்தால்!
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..!
கதைச் சொல்லு எனக்கு.!
ஒரே ஒரு ஊரில்!
ஓர் இளவரசியாம்!
அவளைக் காதலித்தானாம்!
துணிகளை வெளுக்கும் அவன்..!
இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..!
கதைச் சொல்லு எனக்கு.!
கதைச் சொல்லு.!
!
-பிரதிபா கன்னடக்கவிதைகள்!
prathibha nandakumar's poems.!
-----------------------------------------!
From Indian literature - sahitya akademi's bi-monthly journal, No 215, 2003. pg 56, 63, 67 !
!
மொழியாக்கம்: புதியமாதவி

மூங்கில் நினைவு... சட்டைப்பைக்குள் சங்கிலி

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
மூங்கில் நினைவு...சட்டைப்பைக்குள் சங்கிலி...!
1.மூங்கில் நினைவு.!
முட்கம்பி தாண்டி!
மூங்கில் மரம்தறித்து!
முழுசாய் முடிவதற்குள்!
முதுகில் மூங்கிலடி.!
வாரிச் சுருட்டி!
வேலி பாய்ந்து!
வீடு வந்தபோது!
விழுந்த அடிகள்!
மூங்கில் தாகினை!
முழுமை பெறச்செய்தன.!
முந்தநாள் மூத்தமகன்!
மூங்கில் வேண்டுமென்று!
முகத்தைப் பார்த்தபோது!
முதுகைத் தடவிக்கொண்டேன்.!
முப்பது வருடங்களாக!
முதுகைத்தான் தடவுகிறேன்!
மூங்கில் நினைவுமட்டும்!
முதுகைவிட்டு நீங்கவில்லை.!
!
2.சட்டைப்பைக்குள் சங்கிலி.!
!
பக்கத்து மாணவனின்!
பென்சிலைத் திருடி!
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்!
மறைத்து விட்டேன்.!
சட்டைக்குள் என்னவென!
சடுதியாய் விசாரணை!
~சங்கிலி| என்றேன்!
கிலிபிடித்து நின்றநான்.!
அன்று அதிபராயிருந்த!
என் அப்பாவின்!
ஐந்து விரல்களும்!
என் கன்னத்தில்.!
இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்!
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்!
கன்னத்தில் வடுவினையும் - ஏதோ!
எண்ணத்திற் தேடுகிறேன்.!
--எஸ். ஏ. ஹப்பார்

நான் வீழ்வேனென நினைத்தாயோ

ஜதி
ஓயாமற்பல கைகளெனை!
ஓங்கியோங்கி அடித்தவாறே!
இருக்கின்றன!
சமயம் பார்த்தெனையடிப்பதற்கெனக்!
காத்திருக்கின்றன!
ஓராயிரம் சோடிக் கைகள்!
உறுதியான வார்த்தைகள் சொல்கிறேன்!
இக்கைகளுடையோரின் காதுகளில்!
இவை உறைக்கட்டும்…!
எனையடிக்கும் !
ஒவ்வொரு கைக்கும்!
ஒரு வலி நிச்சயம்!!
அடித்துக்கொண்டேயிருங்கள்!
கைகளோயுமட்டும்!!
வலி உங்களிடமும்!
வலிமை என்னிடமும்!
ஏறிக்கொண்டேயிருக்கிறது!
மறவாதீர்கள்!!
எனை ஏளனப்பார்வை பார்க்கும்!
அதிருஷ்டதேவதை மைந்தர்களே…!
உங்கள் விழிகள் அவிந்துபோகும்!
பிரகாசத்துடன் நானொளிரும் நாட்கள்!
நெருங்கிக்கொண்டிருக்கின்றன!
எச்சரிக்கையோடிருங்கள்!
எதிர்காலகுருடர்களே!!
!
என் நெஞ்சத்திலெரியும் நெருப்பில்!
என் வெற்றிகளை !
நான் வார்த்தெடுக்கும் வெப்பத்தில் – !
எனை நேசிக்கமறுத்த மனங்கள்!
கருகிப்பொசுங்கும் துர்நாற்றம் –!
என் நாசிகளுக்கு மட்டும் நறுமணம்.!
- ஜதி

எதிர்பார்ப்பு

கல்முனையான்
அதிகாலையின் அலைகளுக்குள் சேவலின் சினுங்கல்!
சுட்டெரிக்கும் சூரியனின் தத்தளிக்கும் தங்கச் சாறல்கள்!
என் கட்டிலின் மூட்டைப் பூச்சிகளுக்கு என் இரத்த தானம்!
பக்கத்து வீட்டு வானொலியில் பொங்கும் பூம்புனல்...!
இவையெல்லாம் என் துாக்கத்தை கெடுக்கவில்லை!
ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட்ட விமானத்தின் இறக்கைகளுடன்!
என் காதுகளில் கிசுகிசு பேசும் நுளம்பாரின் முகாரி ராகம்!
அப்பாடா தாங்க முடியவில்லை எழுந்து விட்டேன் எதிர்பார்ப்புடன்!
எங்கள் முற்றத்து குழாயடியில்தான் என் முதல் எதிர்பார்ப்பு!
சொட்டுச்சொட்டாய் வருமா! இல்லை அருவியாய் வருமா! என்று!
இஞ்சிபோட்ட தேனீரின் சுவையில் ஏழு மலைகளை!
எட்டி உதைக்கும் ஓர் உற்சாகம் எனக்குள்ளே..!
மூன்று வருடத்தின் முன் முக்குழித்த என் மூக்குக் கண்ணாடி!
அதன் பெயருக்கேற்றால் போல் மூக்குக்கு கண்ணாடிதான் அது!
நேற்றைய பத்திரிகையின் பக்கங்களின் உள்ளே!
எதிர்பார்ப்புடன் சுழியோடும் போது பழையவைகளின் மறுபிறப்புக்கள்!
அடிக்கடி இருமிக்கொள்ளும் என் இதயத்தின் இடிபாடுகள்!
ஏதொ ஒரு எதிர்பார்ப்புடன் தன்னந்தனியே ஏங்கி நிற்கின்றது.!
வயோதிபர் மடத்தின் என்னை விட்டுச்சென்ற மகனுக்காகவா!
இல்லை என்னை அழைத்துச்செல்ல வரும் எமனுக்காகவா

அன்றைய காட்சி செண்டாக மனதில்

வேதா. இலங்காதிலகம்
…….!
--------------------------------------------!
பூவையிவளின் பூந்தளிர்க் காலம்!
கோவையில் முன்னைய பொன்னான காலம்.!
அகரம் முதல் வெண்பா பாடி!
அறிவு முளைவிட திருக்குறள் பாடிய!
நாவலர் கல்வியகத்தில் பாதம் பதித்தோம்.!
காவலர் இல்லையங்கு கட்டிட ஊழியர்கள்!
ஆவலான விழியில் புதுக் கட்டிடங்கள் பதிப்பு.!
நாவலர் சிலையங்கு புதிதாய் உதிப்பு.!
அந்தப் பாடசாலை, அருகு அழகு வயல்கள்!
பொந்து மாதிரி எனக்குப் பயமூட்டிய மதகு!
எந்தக் காட்சியும் அன்று போல இல்லை.!
குந்தாக, உச்சி வகிடாக நின்ற வரப்பு!
உடைந்து சொத்தியாக தன் சோபை இழப்பு.!
குத்துக் கல்லாய் ஒரு அபாய அறிவிப்பு,!
நித்தியமாய் நடுவயல் பற்றையுள் பிறப்பு.!
’’கண்ணி வெடிகள் கவனம்’’பலகைப் பாதுகாப்பு.!
எதிர்காலக் கனவில்; ஆசிரியை நடை நடந்த!
எழில் கொஞ்சும் இயற்கையில் நான் எனை மறந்த!
இசைவுக் காட்சி இன்றில்லையென்று அந்த!
இணையற்ற ஏமாற்றம் புகை மூட்டமானது.!
இதயத்துள் நுழைந்து இம்சைப்படுத்தியது,!
இரசாயன மாற்றங்களை உடலுக்குள் ஏற்றியது.!
வேண்டாத ஏமாற்ற வேதாளம் என்னுள்!
சீவனோபாயம் பண்ண சீண்டிப் பார்த்தது.!
நேற்றைய அழகுப் புதையல் காட்சிகள், !
கன்று மனதின் கரும்பான காட்சிகள்!
குன்றென மனதில் அமைத்த ஆட்சி,!
நன்றெனவே வாழட்டும் நலியாத மாட்சி.!
அன்றைய காட்சி அப்படியே அப்படியே!
செண்டாக மனதில் சுகந்தம் வீசட்டும்.!
இன்று கண்டவை இத்தோடு போகட்டும்.!
இனி ஒரு ஏமாற்றம் எனக்கு வேண்டாம். !
-வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ், டென்மார்க்.!
31-07-08.!
(2003ல் யாழ்ப்பாணம், கோப்பாய் சென்று வந்த பின்பு எழுதியது.)