ஆளுமை - சு.திரிவேணி, கொடுமுடி

Photo by Marek Piwnicki on Unsplash

வாழ்ந்த பிறகும் !
பிடிபடாத வாழ்க்கை போல !
தோற்றமும் மாற்றத்தின் காரணமும் !
புலனாகாத காற்றே! !
எங்கும் நிறைந்த !
நீயும் கடவுள்தான்! !
உயிர் வாழ்தலும் வீழ்தலும் !
உன் கையில்தான்! !
மென்மையாய் வன்மையாய் !
உன் திறன் உணரச் செய்வாய் நீ! !
எளியோராயினும் ஏழையர் !
குடிலில் இயல்பாய்ப் போய் வருவாய் !
பிரதிப்பலனும் பேதமும் அறியாய்! !
வாழ்விக்கும் கர்வம் இன்றி - !
புகழும் தேடாது- !
பாகுபாடில்லாத இயற்கையே... !
வெறுப்புடன் கதவடைப்போர் !
மீதும் விருப்பம் கொண்டு !
உள் நுழைந்து சென்று பார்ப்பாய். !
உன் தேவையில்லாப் !
பொருளையும் கூடத் !
தொட்டுச் சென்று !
அன்பைச் சொல்வாய் நீ! !
ஆட்சி செய்யாத !
அதிகாரம் காட்டாத !
ஆளுமையே... !
தலை வணங்கிக் கேட்கிறோம்... !
கற்றுக் கொடு இந்தத் தகைமையை
சு.திரிவேணி, கொடுமுடி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.