காதலில் தோற்றவன் - சின்னு (சிவப்பிரகாசம்)

Photo by Paweł Czerwiński on Unsplash

அன்று இஞ்சியும் இனித்ததடி!
இன்று இளநீர் கசக்குதடி!
நிலை கெட்ட பொழுதுகள்!
தரம் கெட்ட செயல்களில்!
தொலைத்த நாட்கள்!
மனதில் வடுக்களாய் !!
பெண்ணே உந்தன் பேரழகு!
மனதில் ரணங்களாய் !!
எத்துணை முறைகளடி!
உனை அனைத்து பார்த்திருப்பேன்!
மனதுக்குள் !!
லட்சியம் இன்றி!
அர்ச்சனை செய்தேன்!
பேரழகாய் உனை ஆராதித்தேன்!
முத்தழகு சித்திரம் என்றேன்!
முடிவைத்த உன் அழகை!
கட்டழகு கோபுரம் என்றேன்!
கண்ணே உந்தன் முன்னழகை!
வளங்கொண்ட நிலம் என்றேன்!
பெண்ணே உந்தன் பின்னழகை!
நீ விலகியது விளங்காமல்!
காமம் நீங்கி காதலித்தேன்!
கற்பனையில் வாழ்ந்து!
சிந்திக்க மறந்தேன்!
குடிப்பது குலத் தொழிலாய்!
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்!
புகைப்பது புது பழக்கம்!
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்!
!
நண்பர்கள் தொலைத்து!
நாணயம் இழந்தேன்!
கண்ணிமை அசைவுக்கு!
யாகங்கள் செய்தேன்!
நெருப்பு சாம்பலாகி!
விடியலில் குப்பையானேன்!
விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்!
உண்மை சொன்னால்!
இருந்தும் இறந்துவிட்டேன்!
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்
சின்னு (சிவப்பிரகாசம்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.