தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கனவுகள் மெய்ப்படவேண்டும்

சத்தி சக்திதாசன்
நெஞ்சத்திலே துஞ்சாமலே!
நிதமும் தோகை விரித்தாடும்!
கனவுகள் ஆயிரமுண்டு தோழா!
காலம் மாறி அவை கைகூடிட .....!
கண்களிலே விரியும் பூக்கள்!
கண்ணீர்ப் பூக்களாய் தினமும்!
காற்றைப் புசித்து வாழுவோரின்!
காலம் மாறி புன்னகை பூத்திட ....!
தமிழ் நெஞ்சில் கொண்டு பாவம்!
தாளாத வறுமையுடன் போராடும்!
தீராத தாகம் கொண்டோர் வாழ்வில்!
தீராத ஏக்கங்கள் யாவுமே தீர்ந்திட .....!
அறிவென்னும் விளக்கை பற்றவைக்க!
அடையாமல் வசதி என்னும் திரியை!
ஆறாகப் பாயும் ஆவலைத் தீர்க்க!
அல்லாடும் சிறார்கள் வாழ்வு சிறந்திட ....!
நேற்றைய செல்வம் கொடுத்த நிழலில்!
இன்றைய வாழ்வைக் கழித்துக் கொண்டு!
நாளை இல்லாதோரைப் பார்த்துக் கொண்டே!
நடப்போர் இதயம் மாறி உள்ளம் விரிவடைந்திட.....!
உழைத்து உழைத்துச் சிவந்த கைகளை!
உயர்த்திப் பிடிக்க வலுவின்றிப் பாவம்!
உருக்குலைந்த உருவங்களின் வாழ்வு!
உயர்வடைந்து உள்ளத்தில் உவகை பூத்திட ....!
பேதங்களற்ற பூரண சமுதாயம் ஒன்றில்!
பிணிகளற்ற மக்கள் இணைந்து ஒன்றாகிப்!
பாசமலர்களால் இணைந்த பூமாலையாய்!
பூமி மாறும் காலம் தோழனே! வந்திட ...!
கனவு மெய்ப்பட வேண்டும் என்று!
கரங்களைக் கூப்பி நான் எம்மைக்!
காத்திடும் பொதுவான இறை நோக்கி!
கண்ணை மூடிக் கனவுலகில் நீந்திட...!
-சக்தி சக்திதாசன்

வாழ்வு

ஜீவன்
2. !
வாழ்வு !
!
வீசும் காற்றின் !
சுகம் தொலைந்து !
போயிற்று !
மெல்லிய !
பூவின் சுகந்தம் !
நினைவிலின்றிப் !
போகிறது !
ஓர் !
இனிய இசையை !
கேட்கமறுத்து !
மறுநாள் !
வேலைக்கென்றானது !
இன்றைய தூக்கம் !
பார்த்துப்புன்னகைக்கும் !
சிறு குழந்தையின் !
கையசைப்பை !
தழுவமறுத்து !
செல்லுகிறது !
காலம் !
அலாரம் வைத்து !
புணர்ந்தாயிற்று !
இன்னுமென்ன ? !
நேரத்தில் தொலைத்து !
பெரும் நகரத்து !
இயந்திரச்சகதிக்குள் !
சிக்கி !
குடல் தெறிக்க !
ஓடும் வேகத்தில் !
தேய்கிறது !
மிச்சமிருக்கும் !
வாழ்வு

மாவீரங்களைப் பாடுங்கள்

இளவரசன்
கார்த்திகைப் பூக்கள் மலர்ந்த பூமி !
மெல்ல மெல்ல உங்கள் காலடிகளை !
இங்கே வையுங்கள் !
கார்த்திகைப் பூக்கள் இங்கே !
கண்ணயர்ந்து உறங்குகின்றனர். !
காடு, மேடு களனிகளில் !
காலநேரம் பாராது !
கண்ணயர்ந்து தூங்காது !
கண்ணி வெடி வயல் கடந்து !
தமிழ் நிலம் காத்தவர் !
எம் மண் மானமதை மீட்டவர் !
கண்ணயர்ந்து உறங்குகின்றனர் !
மலர்தனை நிறைத்து !
இரு கை குவித்து !
கண்மணிகள் கல்லறையில் னவுங்கள் !
உடல் வலி, நோய் துன்பம் !
எண்ணியே பாராது !
களம்தனில் பகைதனை எரித்து !
நிலம்தனை மீட்ட மறவர் !
இதமாய் இங்கே னங்க !
மலரது னவி !
மாவீரங்களைப் பாடுங்கள் !
!
கனடாவிலிருந்து இளவரசன்

மறைந்தவள் அவள் நிறைந்தவள்

வே .பத்மாவதி
முதன்முதலில் பார்த்தபோது மகிழ்ச்சி !
மனம்முடிந்த பின்புஏதோ கிளர்ச்சி!
கைபிடித்த கல்யாணநாள் -பின்!
காதலில் பலநாள் மோதலில் சிலநாள்!
அடுக்களையில் அன்றொரு நாள் -நீ!
அறியாமல் அவசரம் கொண்ட நாள்!
அலறினாய் தீ கொஞ்சம் பட்டதால்!
அதிர்ந்தேன் உன் கை சற்றே சுட்டதால்!
அதனால் உன்னை நானும் எரிக்காமல்!
அலுங்காமல் உன்னுடல் குலுங்காமல்!
அனுப்பி வைக்கிறேன் மனம் பொறுக்காமல்!
முதல் நாள் கிடைத்த ஊதிய உயர்வு!
மூக்குத்தி வாங்கலாம் என்ற உன் கனவு!
மூடிவைத்தானா எமன் அவன் வரவு!
முடிந்தே போனதே எந்தன் நினைவு!
மின்சார மயானத்திற்க்கே அந்த செலவு!
சேலை வாங்கச் சென்றால் சீறுவேன்!
சிக்கனம் கொள் என்றே சினமுறுவேன்!
சிரித்தாலும் சிலநேரம் முறைப்பேன்!
சேலை வாங்கி வந்து விட்டேன்!
பிடிக்கிறது என்றே சொல்வாயா!
சொல்லாமல் சொர்க்கம் சென்றதற்கு!
மன்னிப்புக் கொள்வாயா!
ஒருவேளை நான் மடிந்திருந்தால்!
ஒவ்வொன்றாய் வளையல் உடைத்திருப்பாய்!
கட்டிய தாலி தனை கழட்டி இருப்பாய்!
பூவும் பொட்டும் இழந்திருப்பாய்!
இவ்வுலக வாழ்வையே துறந்திருப்பாய்!
வாழ்விலும் சாவிலும் உடன் இருப்பேன்!
வார்த்தை சொல்லியே வலம் வந்தேன்!
உன்னை பிரிக்கத் திட்டம் இட்டான்!
உடன்கட்டை தடுக்க சட்டம் இட்டான்!
உன்னுடன் வந்தால் உயர்ந்தவன் பட்டம் இடுவான்!
வந்த நாட்கள் முடிந்தது வாழ்வில்!
வரும் நாட்கள் கலந்திருப்போம் சாவில்

சோல்ஜர் சொறிநாய்

மன்னார் அமுதன்
சொறிநாயைப் பிடித்து!
“சோல்ஜர்” எனப் பெயர் வைத்து!
கறியோடு சோறும் !
வெறியேற அபினும்!
குழைத்துண்ணக் கொடுத்து!
வடக்கே போ என்றான்!
வேட்டைக்கு!
காவாலி சோல்ஜர்!
கடைசித் தெருதாண்டி!
முக்கி முணகி!
மோப்பம் பிடித்தபடி!
கால்தூக்கி !
எல்லை வரைகின்றான்!
என் வீட்டுச் சுவரில்!
அடித்து விரட்ட !
ஆளில்லா வீடொன்றில்!
நாநீட்ட!
தாகம் தணித்தவளின்!
கைநக்கி !
கோரைப்பல் தெரியச் !
சிரித்தான்!
வேட்டை நாயில்லா!
வீடொன்றாய்ப் பார்த்து!
கோழி இரண்டையும் -தென்னங்!
குலை நான்கையும்!
தேசியச் சொத்தாக்கினான்!
சிதறுண்ட கால்கொண்ட!
சிறுபுலியின் கதவுடைத்து!
பெண்மையை அரசுடைமையாக்கினான்!
காலம் பொறுமையாய்!
காத்திருக்கிறது!
காலம் வருவதற்காய்!

மொழிதலால் வெளியிடாத

ஜதி
மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்!
---------------------------------------------------!
பேசும் வார்த்தைகளெல்லாம் !
பேசவேண்டிய வார்த்தைகளுக்குத்!
தூது வருகின்றனவோ!
என்கிற ஐயத்தைத் !
தூண்டிய வண்ணமே உள்ளன!
யாதொரு பேதமுமின்றி!
யாவரின் மனங்களிலும்!
எண்ணிலடங்காமல்!
குவிந்து கிடக்கின்றன!
மொழிதலால் வெளியிடாத வார்த்தைகள்!
கண்ணீராகவோ!
புன்னகையாகவோ!
கேள்விகளாகவோ!
பதில்களாகவோ!
உரைக்கப்படவேண்டிய இவ்வார்த்தைகள்...!
மௌனங்களாகவோ!
தயக்கங்களாகவோ!
மாற்று வார்த்தைகளாகவோ!
மறைக்கப்படுகின்றன!
பதுக்கப்பட்ட நிலையிலானதொரு!
கண்ணிவெடியின் கலக்கத்தை!
மொழியாதவரிடமும் கேட்காதவரிடமும் !
நித்தமும் உண்டுபண்ணியபடியே!
உள்ளன இவ்வார்த்தைகள் ஒவ்வொன்றும்!
இருப்பினும்...!
இவ்வார்த்தைகளைச் சேகரிப்பதே!
இவ்வாழ்வின் கடமையென்றும்!
இவற்றை வெளியிடாமலிருப்பதே!
இவ்வாழ்வின் தன்மைகளைப் பாதுகாப்பதாயும் !
மறுக்காமல் ஏகமனதுடன் நம்பப்படுகின்றன!
யார் கண்டார்கள்??!
இவ்வார்த்தைகள் யாவும்!
ஒருநாள் மொழியப்படுமெனின்!
அடுத்த நாள்முதல் நாமெல்லாம்!
ஊமைகளாகிவிடுவோமோ என்னவோ...!
-ஜதி!
[22-04-2008]

மொழி... எது கவிதை?

கவிதா. நோர்வே
1.மொழி... எது கவிதை?!
--------------------------!
நான்கு மொழிகள் எனக்கும்!
அதே நான்கு மொழிகள் உனக்கும்!
நாக்கின் நுனிவரை தெரியும்!
மொழிகளைக் கற்றுக்கொள்வதில்!
நாங்கள் வல்லவர்கள்.!
எந்த கேள்வியென்றாலும்!
ஊகிக்குமுதல் பதில்தர!
வல்லவர்கள்!!
சில வேளைகளில் கேட்காத!
கேள்விக்கும் காரமாய் பதில் கொடுக்கவும்!
உனது மொழி விளங்கவில்லை!
என்றபோது!
உனது மொழியை பரிகசித்ததாய்!
நீ நினைத்தாய்.!
உனது மொழிகளுக்கு நான்!
வேறு அர்த்தங்களை தீட்டிக்கொண்டேன்.!
எனது மொழிக்கு நீ!
செவி கொடுப்பதையே மறந்தாய்.. !
நான் உன்னுடன் மொழிவதையே துறந்தேன்.!
ஒருவரது கேள்வியை!
மற்றவர் வெல்வதும்.!
பதிலற்ற கேள்விகளை!
கேட்பதில் சுகம் பெறுவதும்.!
கேள்விகளுக்கு பதில் தெரிந்தும்!
அலட்டயமாய் ஊமைமொழி பேசுவதும்!
வாழ்க்கை பரீட்ச்சையில்!
சித்தியெய்திய கர்வம் தர!
நாங்கள் மொழி ஆளுமை பெற்றவர்கள்.!
என்று எமக்குள் நாமே விளம்பரப்படுத்திக் கொண்டோம்.!
இன்னும்!
சைகை மொழி!
மௌனமொழி!
என்று தெரியும்தான்..!
காற்றின் மொழி!
கவிதை மொழி!
இயற்கை மொழி!
மட்டுமல்ல!
நாம் உணராமல் போனது..!
காதல் மொழியும் தான்!
கற்றிருந்தால்!
புரிந்திருக்குமோ?!
எனது மொழி!
உனக்கும்.!
உனது மொழி !
எனக்கும்…!
2.எது கவிதை?!
விழியின் மொழி!
உயிருக்குள்!
மொழிபெயர்ந்தது!
கவிதை.!
காகித உடலில்!
காதல் மை கொண்டு !
எழுதுவதும் கவிதை.!
இப்படியெல்லாம்!
கவிதை எழுத!
வேண்டுமெனக்கு!
ஒரு பேனவும் காகிதமும்.!
நீ மட்டும்!
எப்படி உன் உதட்டில்? !
எத்தனை புத்தகம்,!
எத்தனை வலைப்பின்னல்!
கவிதைகளுக்கென்று.!
எப்படி இருந்தாலும்!
எனக்கு பிடித்ததேனோ!
உனது விழிதான்.!
கவிதைக்கு!
மொழி தேவையென்று!
எவன் சொன்னான்.!
அடி முட்டாள்.!
உன் விழி பாராத!
கவிஞன்.!
நான் படிக்காத கவிதைகூட!
இதோ...!
உந்தன் மௌனத்தில்.!
நீ அழைத்ததும்!
தொலைபேசிகூட !
கவிதை பேசும் அதிசயம்!
யாரும் அறியவில்லை.!
கண்ணா என்றழைப்பில்!
காணமல் போகும் என்னுலுகை!
கண்டுபிடித்தெதற்கு!
வீணாக...!
நெஞ்சுக்குள் அலைமோதும்!
உன் நினைவுகள், கனவுகள்,!
எல்லாம் கவிதைகளாகிப்;போன!
நிலையில்!
குழம்பித்தான் போனேன் நான்.!
எது கவிதையென்று தெரியவில்லை.!
இது காதலாக இருக்குமோ?!
இதற்கு மட்டிலுமேனும்!
மௌனம் கலைத்து!
ஒரு கவிதை சொல்லேன்!
காத்திருக்கிறேன்.!
!
-கவிதா நோர்வே

ஆசை அடக்கி

நாகினி
அலைபாயும் மனக்குதிரையை!
அடக்காமல் அதன்மேல் ஏறி!
அலைந்து திரிந்து கண்ணில்பட்டதெல்லாம் நுகர்ந்து!
அதீத இன்பம் கண்டு!
ஆயுள் முழுதும் சுதந்திரமாய்!
ஆனந்த உலா வர!
ஆவல் கொண்டு நிதம்!
ஆர்பரிக்கும் ஆசைதனை தட்டிவிட்டு!
இன்னல் எதிர் நோக்காது!
இன்பம் துய்ப்பதை நோக்காக்கி வன்ம!
இருள்தனை பெருக்கி!
இயன்றவரை ஆசை தீர்க்க காம!
ஈர்ப்பாகி மனிதம் மறந்த!
ஈனத்தனம் புரிந்திட இருபாலுக்கும்!
ஈங்கில்லை வேலையென புவி!
ஈர்ப்பு விசையில் பாதாளத்தில் வீழ்ந்து!
உறங்கிட நாள் குறிக்கும்!
உன்னத கால(ன்) தேவன்!
உடலோடு மனிதம் செத்த ஈனனாய்!
உயிரை பறித்து உள்வாங்கு தலோடு!
ஊழ்வினை பயனாய்!
ஊறும் ஏழ்பிறவிக்கும் தலைமுறைக்கும்!
ஊக்கமிலா மானிடனாய் உன்னத சந்ததியும்!
ஊதாரியாய் இகழும் இழி பிறவி சாபம்!
ஊட்டிடுவான்...மனசாட்சி நீதி தேவன்!
எண்ணம் உணர்ந்து அடக்கத்தில்!
எளிமை அணிந்து அதீத அறிவில்!
எட்டு திக்கும் விரிந்து பறந்தாலும்!
எட்டித் தாவும் ஆசைக்குதிரையை அடக்கி!
ஏற்றமிகு ஒழுக்கக்குதிரைமேல் பயணிக்க!
ஏற்றுக்கொள்ளும் இருபால் மனிதர்!
ஐயமின்றி ஈட்டுவர் வெற்றிக்கனி

கிராமத்து வாழ்க்கை

முருகன் சுப்பராயன்
ஆடு மாடு மேச்சி !
உளுந்து பயறு புளி!
காய வச்சி !
அம்மி குடக்கல் உரல்!
பயன் படுத்தி!
அப்பளம் வடவம் போட்டு!
கம்பு கேழ்வரகு !
பழைய சாதம் ஊறுக்காய்!
சாப்பிட்டு!
வாசல் பெருக்கி !
அடுப்பு மொழுவி !
வெத்தலை போட்டு !
பழகியவளுக்கு !
மிக்சி கிரைண்டர் குக்கர் !
ஃபிஸா பெப்சி !
அஞ்சு நாளைக்கு !
தேவையானத சமச்சி !
ஃபிரிட்ஜ்-க்குள் வச்சு!
டிவி பாத்துட்டே !
புழுக்கமான ஃபேன் காத்துல !
சாப்பிட்டு தூங்கி !
தூங்கி சாப்பிட்டு !
இந்த வேகமான !
நகர நரக!
வாழ்க்கை!
பிடிக்காமல்.....!
கிராமத்துக்கு !
பஸ் ஏத்திவிடுரா மொவனே!
என்கிறாள்!
அம்மாக்காரி.!
- முருகன் சுப்பராயன்

நான்

கல்யாணி
உயர்ந்தவன், உன்னதமானவன்!
தனித்துவமானவன்!
நான் ஆண்!
ஆண் என்பதால்!
ஆற்றல் உள்ளவன்!
அனைத்தும் அறிபவன்!
குற்றம் செய்ய முடியாதவன்!
குற்றம் இருந்தாலும்!
மன்னிக்கப்படவேண்டியவன்!
ஏனெனில்!
நான் ஆண் குறியை உடையவன்!
எனது ஆண்குறி!
எப்போதும் எங்குவேண்டுமானாலும்!
யாரைக் கண்டாலும்!
விறைக்கக் கூடியது!
சகோதரியோ மகளோ!
யாரும் விதிவிலக்கல்ல!
எனது ஆண்குறி விறைக்கக்கூடியது!
அது இயற்கை!
பண்பாடு!
எனக்கு நடிப்பிற்குரியது!
நான் வேடம் போடக்கூடியவன்!
சமுதாயத்திற்காக!
இந்த விறைப்பை வளப்படுத்த!
நீலப் படங்கள் உண்டு!
புத்தகங்கள் உண்டு!
அதனால் இது வளப்படுத்த வேண்டியது!
நீ யார்?!
வெறும் பெண்!
இந்த விறைப்பைத் தீர்க்கப்!
படைக்கப்பட்டவள்!
நான்!
உயர்வானவன்!
உன்னதமானவன்!
போற்றப்படவேண்டியவன்!
நான் ஆண்!
கட்டுப்பாடுகள் அற்றவன்!
சந்தோசமானவன்!
எனது ஆண்குறி!
விறைக்கக்கூடியது!
-கல்யாணி!
பெண் இதழ் (மட்டக்களப்பு,இலங்கை)