தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உளமார நேசிக்கிறேன்

அய்யா.புவன்
மனசாட்சி தொட்டு சொல்கிறேன் என்று!
நெஞ்சைத்தொட்டு சொன்னாய்!அப்ப!
கூட புரிய வில்லை...!
நகமும் சதையுமாக இருந்ததாலோ!
எனை வெட்டி வீசினாயோ...!
பிரிவோம் என்றே தெரிந்த காதல்...உன் காதல்...!
அடி படாது ஆனால் மனசு வலிக்கும்...!
செத்து போவோம்... என்று தெரிந்தே வாழ்கிறோம்!
பிரிவோம் என்று தெரிந்தே காதல்!!
சேர துடிக்கும்... சேர முடியாத சூழ்நிலை...!
சேரவும் பிடிக்காமல்! பிரியவும் முடியாமல்...!
சிக்கி தவிக்கும் நிலை...!
இந்தக்காற்றில்... உன் சுவாசத்தை மட்டும்!
தேடிக்கொண்டிருக்கிறேன்...எனக்கு!
தெரிந்த அடையாளம்...இது மட்டும் தான்...!
ஒரு முறை சுவாசிக்க!!
இன்னும் காத்திருக்கிறேன்! நீ வருவாய் என்றல்ல...!
என்றைக்காவது வருவாய் என...!
-அய்யா புவன்

மனிதன் என்று

கவிதா. நோர்வே
எம் பெயரை நாம்!
கூவுவதில்லை!
அடையாளப்படுத்துவது வேறு!
அறைகூவல் விடுவது வேறு!
சொல்லிக் கொள்வதால்!
நீ நீயாக முடியுமா!
நான்தான் வானாக இயலுமா!
தாழ்வு மனம் புதைத்து!
வேர்கள் படர்த்தி!
விருட்சம் வளர்!
முங்கில் ஒடித்து!
பிரம்புகள் செய்தோம்!
இனி அதை எடுத்து!
துளை இட்டு!
இசைக்குழல் செய்வோம்!
கொடும் மரணமுற்ற மனிதர்கள்!
செதுக்கிய உயிலில்!
மனிதனாய் இருக்கச் சொல்லி!
மனு இருக்கிறதே!
படிக்கவில்லை?!
நாய்களும்!
நரிகளும்!
பூக்களும், !
புதர்களும் போல!
நாமும்!
உலகின் மனிதர்களாய்!
கூடி சமைப்போம்!
நாம் தமிழன் என்று!
இனியாவது!
அவனைச் சொல்லவிடு!!
முடியும்!!
நீ மனிதன் என்று!
பெயர் மாத்து!!
!
- கவிதா நோர்வே

வரம் வேண்டும்

எம்.பாலா
இலையின் பச்சை நிறத்தினிலே!
இறைவனைப் பார்க்கும் கண்வேண்டும்!
தொலைவில் தெரியும் மலையிலவர்!
இருப்பதை வுனர்ந்திட வும்வேண்டும்!
கலைகள் எல்லாம் தெய்வத்தால்!
வந்தவரப் பிரசாதம் எனில்!
சிலைகள் ஓவியம் கவிதையிலே!
உம்மைப் பார்த்திட வும்வேண்டும்!
காற்றில் இரண்டறக்கலந்து அவர்!
இருப்பதை உணர்ந்தால் தென்றலிலே!
தெய்வத்தின் அணைப்பை உணர்ந்திடணும்!
பரவச நிலையை எய்திடணும்!
மலரில் மணமாய் இருக்கின்றாரவர்!!
முகர்வதை தெய்வமென்று உணர்ந்திடணும்!
முகரும் நாசியும் தெய்வமென்றால்!
முழுதும் தெய்வமென்று உணர்ந்திடணும்!
அலையின் ஒலியில் ஆண்டவன்பாடும்!
தாலாட்டினை நாம் கேட்டிடணும்!
அலையை நடனம் செய்யவைத்திடும்!
சக்தியும் அவரென உணர்ந்திடணும்!
இசையின் வடியில் அவன்னிருப்பதை!
உணர்ந்தால் குயிலும் காகமுமே!
இசைக்கும் ஒலியிலும் பரமனைக்கண்டு!
வழிபாடு செய்யும் வரம்வேண்டும்!
எங்கும் எல்லாம் அவர்வடிவேஎனின்!
பேதமில்லா மனம் பெறவேண்டும்!
சொல்லர்க்கரிய குறையா இன்பம்!
எந்நேரமுமே எனக்கு வேண்டும்

அறிவுப்புதையலே.. மாற்றுத் திறன்

இரா.இரவி
அறிவுப்புதையலே..மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு..!
01.!
அறிவுப்புதையலே!
------------------------!
கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே!
முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே!
மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே!
படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே!
பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே!
செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே!
செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே!
செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே!
சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே!
பல்லாயிரம் மாணவர்களைச் சந்தித்த சாதனையாளரே!
பண்பை விதைத்து வரும் போதகரே!
ஆடம்பரம் விரும்பாத அடக்கத்தின் அடையாளமானவரே!
ஆரவாரம் இல்லாத அன்பின் இமயமானவரே!
போலி மரபுகளைப் புறக்கணித்த வரலாற்று நாயகரே!
போதி மரத்துப் புத்தனைப்போல ஆசை துறந்தவரே!
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து வென்றவரே!
தன்னம்பிக்கை வலிமையை தரணிக்குச் சொன்னவரே!
அக்னிச் சிறகுகள் விரித்து அளப்பரிய சிகரம் சென்றவரே!
அனûத்துக் குடிமக்களின் இதயத்தில் நின்றவரே!
உங்களைக் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தவில்லை!
உங்களால் குடியரசுத் தலைவர் பதவி கௌரவப்படுத்தப்பட்டது!
நேர்வழியின் சிகரத்திற்கு மகுடம் சூட்டுங்கள்!
நேர்மையின் சின்னத்திற்கு நோபல் பரிசு தாருங்கள்!!
02.!
மாற்றுத் திறன் படைத்தோரின் மனசு !
--------------------------------------------!
கலக்குவோம் கலக்குவோம் இந்த!
உலகத்தையே கலக்குவோம் நாங்கள்!
மாற்றுத்திறன் படைத்தோர் நாங்கள் உலகில்!
மட்டற்ற சாதனை படைத்திடுவோம் என்றும்!
கை கால் குறையின்றி நாளும்!
உழைக்காமல் உண்ணும் சோம்பேறிகள் உண்டு!
கை கால் குறையிருந்தும் என்றும்!
உழைக்காமல் உண்பதில்லை நாங்கள்!
பார் புகழ்ந்திட உழைப்போம் நாங்கள்!
பரிசுகள் பல வெல்வோம் நாங்கள்!
கவலைக்கு இடம் கொடுப்பதில்லை நாங்கள்!
கலை வளர்க்கவும் தவறுவதில்லை நாங்கள்!
ஆடுவோம் பாடுவோம் என்றும்!
ஆனந்தக் கூத்தாடுவோம் நாங்கள்!
கருணை கேட்கவில்லை நாங்கள்!
கனிவோடு நடத்திடுங்கள் நீங்கள்!
உடல்குறை குறையே அன்று!
உள்ளத்தின் குறையே பெரும் குறையாகும்!
குறையை குறையாக நினைப்பதில்லை நாங்கள்!
குறையையும் நிறையாக நினைப்பவர்கள் நாங்கள்!
பிறக்கும் போதும் குறை உண்டு!
பிறந்த பின்னும் குறை உண்டு!
கல்வியிலும் படைத்தோம் பல சாதனை!
விளையாட்டிலும் வென்றோம் கடந்தோம் சோதனை!
சகலகலா வல்லவர்கள் உண்டு எங்களில்!
நடனக் கலைஞர் மறைந்த குட்டியும், வாழும் சுதாசந்திரனும் எங்களினம்!
பார்வையின்றி பார் புகழ வாழ்கின்றார் பலர்!
பார்வை இருந்தும் பயனற்று வாழ்கின்றார் பலர்!
மண்ணுக்கும் தீயுக்கும் இரையாகும் விழிகளை!
மனிதனுக்கு வழங்கும் உள்ளம் பெறுங்கள்

எனக்கே எனக்கானதாக மட்டும்

எம்.ரிஷான் ஷெரீப்
உடைந்த வானத்தின் கீழ்!
நிலவு சலித்தனுப்பிய !
வெளிச்சத்தினூடு,!
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்!
உடையாத வெட்கத்தை !
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி!
முன் காலமொன்றில்!
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ!
தேவதையாக நான் நின்றிருந்தேன் !!
வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;!
என்னையும்,வெட்கத்தையும்!
மூடியிருந்த சிறகதனைக்!
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்!
காலம் முழுதும் !
உன் சிறகுகள் மட்டுமே !
போதுமெனைச் சுமக்கவென!
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !!
அன்றிலிருந்துதான்!
உனது வலிமை மேலோங்கிய!
வேட்டைக்கரங்கள்,!
எனது சுவாசங்களையும்!
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !!
எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்!
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,!
உனது அத்தனை அகோரங்களும்!
ஒன்றாய்ச் சேர்ந்து!
அன்றுதான் என் உதடுகளைத்!
தைக்க ஆரம்பித்தாய் !!
எழுதவேண்டுமென்ற பொழுதில்!
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,!
வரைவதற்கான வண்ணங்களைக் !
கலந்த விரல்களை !
வளைத்துச் சிதைத்தாய்,!
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே!
நானூமை என!
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !!
இனிக் காலங்கள்!
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !!
இந்த வெடிப்புற்று வரண்டு,!
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்!
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க !
ஆரம்பித்திருக்கும் பற்களால்!
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,!
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ!
சுட்டிக்காட்ட யாருமின்றி...!
ஒரு பக்கம் எனது கவிதைகள்,!
மறு பக்கம் எனது வண்ணங்கள்!
எனத் துணையாய்க் கொண்டு!
பாடிக்கொண்டிருக்கிறேன் ;!
!
ஆனாலும்,!
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !!
-எம்.ரிஷான் ஷெரீப்,!
மாவனல்லை,!
இலங்கை

புரிவதில்லை கவிதை

A. தியாகராஜன்
உன்னுடைய!
இந்த கவிதைக்கு!
என்ன அர்த்தம்!
ஒன்றும் புரியவில்லைஸ!
!
ஆச்பிரின்,!
கடித்துப் பாதியாகக்!
கிடக்கும்!
ஒரு ஆப்பிள் துண்டு!
காபியோ!
அல்லது டீயோ!
ஏதோ ஒன்றின்!
ஒரு காய்ந்து போன கோப்பை-!
ஒரு இளம் பெண்!
அரைகுறை ஆடையில்!
ஒரு மூலையில்!
சிவலிங்கம் சாய்ந்து கிடக்கிறது-!
நாற்காலி மீது!
ஜென் புத்தகம் பாதி!
திறந்த நிலையில்-!
தண்ணீர் கொட்டி!
அது கோடிட்டாற் போல!
இது போன்ற சில வார்த்தைகள்!
வேறொன்றும்!
இல்லை-!
கேட்டால்-!
புரியாது!
உனக்கு என்கிறாய்!
அது சரி!
இது ஒரு!
ஓவியமல்லவா!
எனக்கு!
கவிதை!
புரிவதில்லை தான்!
- A. தியாகராஜன்

ஒரே ஒரு முறை

காந்திமதி
ஆயிரம் முறை!
கனவில் வரும் கருவே!!
ஒரே ஒரு முறை!
என் வயிற்றில் வாயேன்!!
ஒவ்வொரு மாதம்!
தூரம் வரும்போதும்!
ஒடிந்து போகிறேன்.!
ஓரிரு நாட்கள்!
தள்ளிப்போனாலும் - நான்!
உண்டானதாகவே மகிழ்கிறேன்!
அம்மாவாக ஆசைப்பட்டே!
அலுத்துப் போகிறேன்.!
அவரை அப்பாவாக்கும்!
முயற்சியில்!
அடிக்கடி தோற்றுப்போகிறேன்!
ஆயிரம் முறை!
கனவில் வரும் கருவே!
ஒரே ஒரு முறை!
என் வயிற்றில் வாயேன்!
உனக்காக..,!
மாங்காய் கடிக்க!
ஆசையாய் இருக்கிறது!
வாந்தி எடுத்து!
மயங்கி விழ!
மனது துடிக்கிறது!
பிடித்ததை எல்லாம்!
பார்த்துப் பார்த்து!
ருசியாய்த்தின்ன!
நாக்கு தவம் கிடக்கிறது!
வீங்கிய வயிறைத்!
தூக்கி நடக்க!
விருப்பமாய் இருக்கிறது!
மாதம் ஒரு முறை!
மருத்துவமனை சென்று!
மலை போல்!
மருந்து மாத்திரை தின்று!
கண்ணாடி வளையல் அடுக்கிய!
ஒரு கையை!
வயிற்றில் ஏந்தி!
மறு கையால் இடுப்பைத் தாங்கி!
அதிராமல் அசைந்து பார்க்க!
பாதம் ஏங்குகிறது!
முக்கி முனகி!
கத்திக் கதறி!
கண்ணிர் விட்டழுது!
‘ஆ’ வென்று அலறி...!
பிரசவ வேதனையில்!
சுகப்பட!
அடிக்கடி அழுகிறது!
ஆழ்மனது!
உனக்காக..,!
இவ்வளவு ஏங்கும்!
எனக்காக.!
ஒரே ஒரு முறை

மாமிச உருவங்கள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
புலர்ந்த பின் பொழுதுகளுக்குப்பாலான சன்னல் கீற்றுகள் வழியே!
ஒளிக் கற்றைகளை வலுத்துத் திணித்த படியாய் சூரியன்!
சில உருவங்களை ஆய்ந்து கொண்டிருந்தது!
விரைந்த நேற்றையைவைகளைச் சாடியுமாயும்!
அன்றைய அடுத்த பொழுதுகளைப் பாடியுமாயும்!
சில உருவங்கள் சல்லாபமிட்டுக் கிடந்தன!
வெளுந்து மெலிந்த கோரைப் புல்லாய் சில உருவங்கள்!
தரைக்குச் சமானமாய் விரிந்து படர்ந்திருந்தன!
சுவற்றோரமாய் சம்மனமிட்டபடியான ஒரு உருவத்தின் பாலமர்ந்து!
அதன் ஆடையை உரியத் தொடங்கியிருந்தன சில உருவங்கள!
கீதையை உபாயாசித்த படியாயும்!
ஜெப மாலையை உருட்டிய படியாயும் சில உருவங்கள்!
கனத்த சில்லரை மூடைகளை அவிழ்க்கத தொடங்கியிருந்தன!
இரு மருங்கிலும் விரிந்த சிறகுகள் நிமிர்த்தி!
வெளியுலாவத் தயாராயிருந்த சில உருவங்கள!
முற்ற நடுவாய் மிடுக்காயமர்ந்து!
பெரிய தலை உருவமொன்று உத்தரவுகள் சொடுக்க!
பணியக் கிடப்பதாய் தலையாட்டிக் கிடந்தன!
சில சிறிய தலை உருவங்கள்!
நன்றாய் வயிருப்பிய சில கர்ப்பிணி உருவங்கள்!
இன்னும் சில உருவங்களை பொறிக்க காலம் காத்துக் கிடந்தன!
இன்னும் பழுத்துச் சூடேறிய சூரியக் கீற்றுகள் பட்டு!
தங்கள் நிழல்களைக் களைந்த படியாய்!
நிஜங்களாகத் தொடங்கின மாமிச உருவங்கள்

வாழ்த்துச் சொல்லாத பிறந்தநாள்

க.அருணபாரதி
இன்று!
உன் பிறந்தநாள்..!!
உன்னை சந்தித்த!
முதல் வருடத்திலிருந்து!
கடைசி வருடம் வரை!
தவறாமல் நள்ளிரவில்!
கைப்பேசியில் பேசி!
வாழ்த்துச் சொல்வேன்,!
உன்னிடம்..!!
வாழ்த்துக்களை!
வாங்கிக் கொண்டதற்கு!
பதிலாக வார்த்தையால்!
மட்டுமல்லாமல்!
புன்னகையாலும்!
நன்றி சொல்வாய்!
என்னிடம்..!!
இன்று நிலைமைகள்!
எல்லாம் தலைகீழாய்!
நிற்கின்றன...!
என்னைப் போல..!
உனது திருமண!
சடங்கோடு!
என் காதலின்!
இறுதிச் சடங்கும்!
சேர்ந்து நடந்தேறி!
பலமாதங்கள் ஆகிறது..!
எங்கு கைப்பேசியி்ல்!
இவ்வருடம் உன்னிடம்!
வாழ்த்து கூறிவிடுவேனோ!
என்றெண்ணி கைப்பேசியை!
செயல்படாமல்!
அணைத்துவிட்டாய்..!!
என்னுடைய வாழ்த்து!
மட்டுமல்லாமல்!
யாருமே உன்னிடம்!
வாழ்த்து சொல்ல!
முடியாதவாறு!
தடுத்துவிட்டதை எண்ணி!
வருத்தம் கொண்டது!
உள்மனது..!
கைப்பேசியில் சொல்ல!
நினைத்த வாழ்த்தை!
கரங்கள் உள்வாங்கி!
எழுத்தாணியால்!
எழுதியது!
கவிதையானது..!
காலவெள்ளத்தில்!
காணாமல் போக!
காதல் மேகமல்ல..!
காற்று..!
உள்ளிருந்து கொண்டே!
நம்மை இயக்கிக்!
கொண்டிருக்கும்,!
உயிர் பிரியும் வரை..!
கணவனுடன் வாழ்வது!
நீ தானே தவர!
கவிதைகளுக்கு!
பிறப்பிடமான!
என் காதலி அல்ல..!
-க.அருணபாரதி

முதலாய்க் கண்டேன்!

கோகுலன்
மனிதனும் மனிதன் சார்ந்த !
சப்தங்கள் எதுவுமற்ற !
ஒரு பின்முற்றத்தின் முன்னிரவில்தான்!
முதலாய்க் கண்டேன் அவனை!!
காய்ந்து தரைபார்க்கும் இதே!
தென்னைமரத்து மட்டையில்தான்!
தொங்கிக்கொண்டிருந்தது!
அவனது நீண்ட அங்கி!
நேற்றைய மழை முற்றத்தில் !
மண்புழுக்கள் வரைந்துபோன !
கோலத்தை விரல்களால் !
வர்ணம்பூசி ரசித்தான் வெகுநேரமாய்!
இன்று உதிர்ந்த பூக்களுக்கும்!
நாளை மலரும் மொட்டுகளுக்குமாய்!
பனைமரத்தின் சரசரக்கும் தாளத்துடன்!
கவிதை படித்தான் சிறிதுநேரம் !
தூக்கம் தழுவாது !
இமைகளைப் போர்த்திக்கொண்டிருந்த !
என் கண்களின் மேல்!
ஒரு அமைதிப்பொதியை!
தூக்கி வைத்திருந்த அவன்,!
உயரப்பறந்ததொரு விமானத்தின் சத்தம் !
தூரமாய்க்கேட்ட அந்த !
முதல் நொடியில் தான்!
அந்த நிலவின் பின்னால் !
ஓடிச்சென்று ஒளிந்துகொண்டான்!
செல்லும் அவசரத்தில் தவற விட்ட!
அவன் புன்னகைகள் மாத்திரம்தான்!
யகங்களாய் இறைந்துகிடக்கிறது!
என் பின்முற்றத்தில்!!