எழுதப்படுகின்ற புத்தகம் - வல்வை சுஜேன்

Photo by FLY:D on Unsplash

மானிட ஜீவனின் கூடு !
எழுதப் படுகின்ற ஒரு புத்தகம்!
ஒவ்வொரு கூட்டினதும் !
முகப்பு அட்டையினை!
தாய் தந்தையர் வரைகின்றனர் !
மர்ம நாவலோ மானிடக் காதலோ!
புறட்ச்சிப் புயலோ புதுக் கவியோ!
அவரவர் எழுதித் தந்த !
அத்தியாயங்களே !
தத்தித் தவழும் காலத்தில் !
முகவுரை எழுதும் மானிடன் !
பருவ காலத்தின் வர்ண மாயைக்குள்!
தான்னொரு பட்டாம் பூச்சி என்பதை!
மறந்து போவதுண்டு!
தேனிலும் இனியது காதல் என்பதும்!
தேய்ந்திட்ட உலா வாழ்வில்!
சாதல் என்பதும் !
இவன் கண்ட தத்துவம் !
அவரவர் எழுதும் பக்கங்களில்!
வாழ்க்கை புத்தகம் வரையப்படுகின்றன!
பிறப்போ இறப்போ !
இவன் எழுதுவதில்லை!
இறைவன் ஒருவனே !
இறுதி உரை எழுதி!
முற்றுப் புள்ளி வைக்கின்றான்
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.