ஆதவன் வரவை - வல்வை சுஜேன்

Photo by Maria Lupan on Unsplash

பிறப்புக்குள் பிறப்பை வைத்து!
இறப்பில்லா ஈகை வளர்த்து!
ஊருக்கொரு வாசம் இன்றி!
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே!
நீ வாழி!
பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்!
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்!
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க!
கதிரொளி கண்டோம் கானகத்தில் !
உன் வேழ்வி உபாச விரத நோண்பில்!
உலைக்களம் தணித்தோம் !
தமிழீழத்தில்!
புரட்ச்சிக் கனலின் ஊற்று நீ!
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ!
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ!
தமிழீழ மலர்ச்சியின் !
தேசியத் தந்தை நீ !
நீ வாழும் காலமே எமது பொற்காலம்!
நீ தந்த வாகைகளே தமிழரின் !
முடி ஆட்ச்சி காலம்!
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா!
போற்றுகிறேன் உன்னை!
உனக்கு இன்று அகவை ஐம்பத்தாறு!
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு!
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்!
வையகத்தில் தனக்கொரு நாடெனும்!
தமிழீழத்தில்.!
வல்வை சுஜேன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.