பிறப்புக்குள் பிறப்பை வைத்து!
இறப்பில்லா ஈகை வளர்த்து!
ஊருக்கொரு வாசம் இன்றி!
உலகத் தமிழனுக்காய் உதித்தவனே!
நீ வாழி!
பரந்த உலகிற்கு விண்ணில் உதையவன்!
வருந்தும் தமிழர்க்கு நீயே சூரியன்!
உன் விழிகளிரண்டும் சிவக்கச் சிவக்க!
கதிரொளி கண்டோம் கானகத்தில் !
உன் வேழ்வி உபாச விரத நோண்பில்!
உலைக்களம் தணித்தோம் !
தமிழீழத்தில்!
புரட்ச்சிக் கனலின் ஊற்று நீ!
புதிய வார்ப்புகளின் சிறப்பி நீ!
எழுச்சி மலையின் உயர்ச்சி நீ!
தமிழீழ மலர்ச்சியின் !
தேசியத் தந்தை நீ !
நீ வாழும் காலமே எமது பொற்காலம்!
நீ தந்த வாகைகளே தமிழரின் !
முடி ஆட்ச்சி காலம்!
பிரபஞ்ச ஒளியே பிரபாகரா!
போற்றுகிறேன் உன்னை!
உனக்கு இன்று அகவை ஐம்பத்தாறு!
சுதந்திரச் சுடர் நீ நிரந்தர ஒளிகொடு!
வாகைகள் சூடி வாழ்வான் தமிழன்!
வையகத்தில் தனக்கொரு நாடெனும்!
தமிழீழத்தில்.!

வல்வை சுஜேன்