தொடர்ந்து வரும் முதல் சந்திப்பு - விஷ்ணு

Photo by engin akyurt on Unsplash

நான்!
அன்றும்!
வழக்கம்போல்!
பேருந்து நிறுத்தத்தில் ...!
பட படக்கும்!
விழிகளோடு!
சிறகடித்து வருகிறாய் ..!
நெருங்கி வர வர!
எனை நோக்கி ...!
மெல்லிய புன்னகை !!!...!
அந்த புன்னகையில்!
சிறிதாக சுருங்கிய!
இந்த பிரபஞ்சம் ...!
இன்றும் சிறிதாகவே ...!
விமோசனமே இன்றி!
விரியாமல் ...!
மீண்டும் மீண்டும்!
சொன்னதையே!
சொல்லிக்கொண்டிருந்தால்!
எதையும்!
எதுவுமாக்கலாம் ...!
தொடர்ந்த!
நம் சந்திப்புகளில் ..!
சொல்லி சொல்லி!
என்னில் நீ!
எதை ..எதுவாக்கினாய் ???..!
இன்றும் எனக்கு!
புரியாத புதிராய் ...!
காலங்கள்!
பல கடந்தும் ...!
மனதில் தினம் சந்திக்கிறேன் ..!
அதே காலை...!
அதே நிறுத்தம் ...!
அனைத்தும்!
அப்படியே ..!
ஆனால் நீ மட்டும்!
முந்தைய!
நாட்களை விட!
அதி அழகாய் ...அன்பாய் ..!
சொன்னதையே!
சொல்லிக்கொண்டு ...!
!
-விஷ்ணு
விஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.