பைத்தியமாய் - விஷ்ணு

Photo by FLY:D on Unsplash

*என் கனவு....*!
என் இரவுகளை!
நீ சிறை பிடித்ததால்!
என் கனவுகள்!
களவாடப்பட்டு விட்டன !!!...!
விடுதலைக்கு!
இன்றும் என்விழிகள்!
சாட்சி கூண்டில் ...!
*என் ஆசைகள் ...*!
அழகாய் இருக்கிறதடி!
உன் வாசல் கோலங்கள்...!
புள்ளிகளாய் நீயும்!
என் ஆசைகளை!
வைப்பதாலோ !!!...!
நசுங்கித்தான் போனதடி!
அதுவும்!
உன் வீட்டு நாய்குட்டி!
முதல் பால்காரன் வரை!
பாதங்கள் பட்டு !!!..!
*என் நினைவுகள் ....*!
மறந்துவிடு!
எனச்சொல்லி!
நீ எறிந்த கல்லில்!
உடைந்து விட்டது ...!
கண்ணாடியாய் !!!...!
ஓராயிரம்!
உன் பிம்பங்கள்!
உடைந்த துண்டுகளில்!
உட்கார்ந்து கொண்டு!
இன்றும்!
கீறுகின்றன...!
என் இதயத்தை !!!...!
*என் சிரிப்பு ...*!
அதை எடுத்து நீயும்!
வீதியில் எறிந்ததால்!
எனை பார்த்தாலே!
அள்ளி தருகிறார்கள்!
அனைவரும் எனக்கு...!
என்ன செய்ய ...!
நானும் தெரிகிறேனே!
பைத்தியமாய் !!!...!
அவர்களுக்கும் ...!
!
அன்புடன்!
விஷ்ணு
விஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.