தூசிகளாய் - விஷ்ணு

Photo by Didssph on Unsplash

நீ காதலை!
உணர்ச்சிகரமாக சொல்லிய!
அந்த இரவில்...!
உனக்காக!
நான் வடித்த கவிதை ..!
உனது இதய அறையில்!
எங்கோ ஒரு மூலையில்!
தூசிபோல...!
இனியும்!
சில வருடங்கள்!
அது தங்கி இருக்கலாம்!
யாருமே அறியாமல் ..!
பனிக்காலம்!
மழைக்காலம் என்பது போல்!
மறதிக்காலம்!
உன் மனதை!
மூடும் வரை ..!
அதன் பின் ..!
வேறொரு இரவு ..!
வேறொரு கவிதை என!
தூசி மீது தூசி படர்வது போல் ,..!
இப்படித்தான்!
இவ்வுலகில்!
மீண்டும் மீண்டும்!
காதல்களும்!
கவிதைகளும்!
தூசிகளாய் ....!
- விஷ்ணு
விஷ்ணு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.