நான் ஒரு காமுகன் - நிந்தவூர் ஷிப்லி

Photo by Salman Hossain Saif on Unsplash

நான் ஒரு காமுகன்!
சுருக்கமாகச்சொன்னால்!
பெண் பித்தன்....!
அழகான என்றில்லை!
எல்லாப்பெண்களையும்!
தொட்டுப்பார்க்கும் வெறி!
எப்படியோ எனக்குள்!
வேரூன்றிக்கொண்டது.!
சிற்றின்பம் பற்றியே!
தொடர்ந்து!
சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்...!
கனவுகளில் நிர்வாணப்பெண்கள்!
அவர்களின் முகம் மட்டும்!
சரியாகத்தெரிவதில்லை!
விரசம்!
முத்தம்!
ஸ்பரிசம்!
மோகம்!
இவைகள்தான்!
எனக்குப்பிடித்த வார்தைகள்...!
யாரும் என்னை!
முறைத்துப்பார்க்க வேண்டாம்!
ஏன்!
மகா கெட்டவன்!
என்று முத்திரையும்!
குத்த வேண்டாம்!
ஏனெனில்!
இங்கே பலபேர்!
என்னை விட படுமோசம்!
அதை வெளிச்சொல்லும்!
தைரியம் எனக்கு மட்டுமே!
வாய்த்திருக்கிறது...!
நான் ஒரு காமுகன்!
சுருக்கமாகச்சொன்னால்!
பெண் பித்தன்....!
!
-நிந்தவூர் ஷிப்லி!
தென்கிழக்குப்பல்கலை!
இலங்கை!
!
பின்குறிப்பு :-!
இது பாலியல் சார் கவிதை அல்ல. சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பாலியல் வன்முறைகள்!
துஷ்பிரயோகங்கள் காதல் என்ற பெயரில் காம வெறியாட்டம் இவைகளை எதிர்ப்பதற்காக என்னை நானே அடகு!
வைத்து சிலரது மனச்சாட்சியை உலுக்கிப்பார்க்கும் சிறு முயற்சியே இது
நிந்தவூர் ஷிப்லி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.