எங்கள் குழந்தை மீதான வல்லுறவு - நிந்தவூர் ஷிப்லி

Photo by Sajad Nori on Unsplash

எங்கள் ரோஜா ஒன்று!
தீயிடப்பட்டு விட்டது...!
அந்தப்பிஞ்சு இன்னும் பிறக்கவேயில்லையே!
எப்படி சிதைந்து போனது...???!
அவளுக்கு முலைகளுமில்லை!
யோனியுமில்லை..!
ஏன் எல்லோரும் கற்பழிக்கப்பட்டுவிட்டாள்!
என்கிறார்கள்..?!
அந்தக்காமுகன்!
தனது சகோதரியின் நிர்வாணத்தையும்!
ஒளிந்திருந்து ரசித்திருப்பான்..!
அவள் தூங்கிக்கொண்டிருந்தபோது!
அவளது அந்தரங்களை தீண்டியுமிருப்பான்...!
ச்சீ கேடு கெட்டவன்..!
எனக்கு இன்னுமொரு சந்தேகம்..!
இவன் வீட்டுத்தெருநாயைக்கூட!
இவன் விட்டு வைத்திருக்க மாட்டான்...!
அன்னையின் மென் முத்தமே!
எங்கள் குழந்தைக்கு வலித்திருக்கும்..!
அப்படியிருக்க!
கதறக்கதற..!
எப்படித்தாங்கியிருக்கும்!
அந்தச்சின்னஞ்சிறு மொட்டு...!
களங்கமற்ற வெண்ணிலவு அவள்...!
விந்துக்கறைகள் அவளுடம்பில் !
என்கையில்!
என் கண்களில் நீர்வீழ்ச்சி...!
தேடிப்பிடியுங்கள் அவனை...!
மார்ச்சுவரியில் அடையாளம் காணப்பபடாத!
இறந்து போன பெண் சடலங்களை!
இரண்டு வாரம் கொடுத்து வெறி தீர்க்கச்சொல்லுங்கள்!
அதைக்கூட அவன் விட்டு வைக்கமாட்டான்..!
பிறகு அவன் ஆணுறுப்பை!
துப்பாக்கிகளால் சல்லடையாக்குங்கள்..!
இன்னும் கத்தி கோடரி!
குறுவாள் அரிவாள்!
எல்லாம் கொண்டு வெட்டித்தீருங்கள்...!
இரத்த வெள்ளத்தில் நீந்திக்கிடக்கும்!
அவன் ஆணுறுப்பை நாய்களுக்கும்!
தின்னக்கொடுக்காதீர்கள்...!
அவனைத்தண்டித்தாயிற்று!
என்று திருப்திப்படுகிறீர்களா...????!
சரி!
அப்படியாயின்!
எங்கள் ரோஜா... ????!
!
-நிந்தவூர் ஷிப்லி !
!
(2008.08.05 ம் திகதி இலங்கை அங்குறெஸ்ஸ எனும் சிங்கள கிராமம் ஒன்றில் 5 வயது நிரம்பிய குழந்தையை முச்சக்கர வண்டி சாரதி ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதை எதிர்த்து என்னால் முடிந்த கண்டனக்கவிதை....)
நிந்தவூர் ஷிப்லி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.