தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அம்மா, முணுமுணுப்பு

தீபம் கோபி , சிங்கப்பூர்
அம்மா !
ஒருவரிக் கவிதையாய்... !
உச்சரிக்கும்போது !
உயிரோட்டமாய்... !
அன்பு,பாசம்,கருணை !
அனைத்தும் அடக்கமாய்... !
ஜனித்த உயிரெல்லாம் !
ஒலிக்கும் முதல் சொல்லாய்... !
வாழும் வார்த்தை எதுவென !
எனக்குள் வினா விதைத்து !
விடை தேட... !
என் இதயக் கூட்டுக்குள் !
உதயமானது.... !
அம்மா என! !
- தீபம் கோபி , சிங்கப்பூர் - !

!
முணுமுணுப்பு !
வரவுகள் கரைந்து !
செலவுகள் சேர்ந்து !
வருமானம் தொலைவது !
வாடிக்கையானாலும், !
மாத இறுதியில்... !
மனது மட்டும் மறவாமல் !
முணுமுணுக்கும்.... !
அடுத்த மாதம் முதல்.. !
சேமிக்க வேண்டுமென...! !
-தீபம் கோபி, சிங்கப்பூர்

கண்ணடிப் பூக்கள்

சஞ்சீவி சிவகுமார்
இது இலையுதிர் காலமல்ல!
மலருதிர் காலம்!
மணம் வீசும்!
புஸ்ப மரணங்கள்.!
காற்று தன்மீது!
இச்சை தீர்த்துக் கொண்டதால்!
பூக்கள் தற்கொலை!
புரிந்து கொண்டனவா?!
ஏன்...?!
காற்று!
தற்கொலை செய்யவில்லை.!
ஓ...!
களங்கப்பட்டது!
பூக்கள் தானோ!!
கற்பு!
கண்ணாடித்தனம்!
என்று!
கற்பிக்கப்பட்டது!
பெண்ணுக்குத்தானே!!
இந்தக் கற்பிதத்தைக்!
காப்பாற்றிக் கொள்ள!
தன்னை ஒடுக்கி!
மனதை மறைக்கும்!
முயலல்கள் தான்!
பெண்மையோ!!
இதுவும்!
சாதித் தாழ்த்தல்களின்!
வேலைப்பகர்வு போலா?!
குனிந்து நட;!
மெல்லச் சிரி;!
பணிந்து போ;!
அடக்கமாயிரு;!
அது போதாது!
மாற்றான்(ண்) தொட்டால்!
மரணித்துக் கொள்.!
உன்!
வாழ்வின் இலட்சியமே!
இந்தக் கண்ணாடிக் கற்பிதத்தைக்!
காப்பாற்றிக் கொள்வதுதான்!
வேறில்லை.!
நீ!
மங்கையான போது!
மஞ்சள் பூசியதே!
உணர்வுகளை!
மரத்துப்போக வைக்கத்தான்!
வெறில்லை.!
பெண் பிறந்தால்!
கொல்லையிலே!
அலரி ஒன்று!
நடுங்கள்.!
அவள் பருவமடையும் போது!
அதுவும் பருவமடையட்டும்!
மலர் பறித்துக் கொள்ளமட்டுமல்ல!
அவளின்!
உயிர் பறித்துக் கொள்ளவும்!
உதவலாம்

கண் மூடும் வேளை

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
கட்டி வைத்த கூந்தலது!
முந்தி வந்து விழுந்தந்த!
சாந்துப் பொட்டிட்ட!
சாந்தமான நெற்றியின்!
எழிலை எடுத்துக்கூற!
முத்து முத்தாக!
வியர்வை மொட்டுக்கள்!
விளிம்பிலே அரும்பி நிற்க!
வியாபாரமான வாழ்க்கையை!
விடாமுயற்சியுடன் வாழ்ந்திட!
வனிதையவள் போராட்டம்.!
உதிக்கவில்லை பாவம்!
உதயத்து தாரகை!
பணமுள்ள குடும்பத்தில்!
பாவம் அவளைச் சுற்றி!
மனமெங்கும் இருள் கொண்ட!
மந்தைக் கூட்டமொன்று!
மக்கள் எனும் பெயருடன்!
மயக்கத்துடன் நடக்கின்றது!
ஆகாயத்து வெண்ணிலவை!
அழகிற்கு உதாரணமாய்!
ஆயிரம் கவிபாடும்!
அத்தனை கவிஞராலும்!
அளிக்க முடியவில்லை!
ஆரணங்கு அவளுக்கு!
அரைவயிறை நிறைக்க!
ஆகாரம் என்ன விந்தை !!
அடுக்கு மொழி பேசி!
அரசியல் மேடைகளை!
அலங்கரிக்கும் தலைவர்கள்!
அடுத்த தேர்தலில் தாம்!
கொடுக்கும் வாக்குறுதிகளை!
தேடிப் பாவம் நிதமும் போராட்டம்!
இளம் பெண்ணவளுக்கு!
இது!
கண்மூடும் வேளை!
நாளைய பொழுது!
நன்றாய் விடியுமோ!
நங்கையின் நெஞ்சில் ஏக்கம்...!
கண்மூடி நடக்கும்!
கருணை நெஞ்சங்களே !!
கண்மூடும் வேளை இதுவல்ல!
கன்னிகளின் வாழ்வை!
கரைசேர்க்க நீங்கள்!
கண்திறக்கும் வேளையே

இன்று வேறு நாள்

இப்னு ஹம்துன்
நேற்றைப்போலில்லை!!
கணப்பொழுதில் நீண்டுவிட்டது!
வெயிலின் கொடு நாவு!
வெளியெங்கும்!
பரவியிருக்கும் வெறுமை!
முகத்திலறையும் பூதம்!!
இரத்தம் வெளிறி!
உறைந்துக் கிடக்கின்றன!
இரவு பகல்கள்!
பொருள் பிரிக்க..!
சக்தி இழக்கிறது வாழ்க்கை!!
காலடித்தடங்களில்!
ஞாபகத்துணுக்குகள்!
சிந்தியபடி மனம்.!
நீ ஊருக்குப் போயிருக்கிறாய்!!

நீரின் மட்டம் உயர்கிறது

துவாரகன்
முடிவுறாத பயணங்களின் மீதியில்!
நீரின் மட்டம் உயர்கிறது!
மலைகளையும் காடுகளையும் ஓடைகளையும் தாண்டி!
குதித்தோடி வீட்டுக்குள் வருகிறது வெள்ளம்!
நீரின் மட்டம் இன்னமும் குறைந்தபாடில்லை!
உயர்ந்து கொண்டேயிருக்கிறது.!
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்!
அடைமழை இணைந்த நாளொன்றில்தான்!
நான் என் மாமாவை இழந்தேன்!
இருட்டியபடி கொட்டிக்கொண்டிருக்கும்!
நாளொன்றில்தான்!
என் பால்ய நண்பனையும் இழந்தேன்!
இந்த நாட்களில்தான்!
குந்தியிருந்த எங்கள் குடிசைகளும்!
வெள்ளத்துடன் அள்ளுண்டு போயின.!
இந்த நாட்களும் என் இறந்த காலங்களைப் போல்!
நிரம்பி வழிகின்றன.!
இன்னும் இன்னும் நீரின் மட்டம்!
உயர்ந்து கொண்டே செல்கிறது!
இன்னும் இன்னும் தலையின் பாரம்!
கூடிக்கொண்டே இருக்கிறது!
ஓன்றின்மேல் ஒன்றாய்!
சிறிதும் பெரிதுமாய்!
ஒழுங்கின்றிய அடுக்குகளாய்!
நிரம்பி வழிகின்றன!
ஒன்றாய்ச் சேர்ந்த துயரங்கள்!
ஒரு சாவீட்டில் நிறைந்து வழியும்!
துக்க அமைதியைப் போல்!
இருட்டியபடி!
மார்கழிமாத அடைமழை கொண்டிக் கொண்டேயிருக்கிறது.!
யாரும் வெளியே செல்லமுடியாதபடி!!
!
-துவாரகன்

தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்கள்

துவாரகன்
தூசிபடிந்த சாய்மனைக் கதிரை நாட்களாக !
நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.!
கொளுத்தும் வெய்யிலில் !
கொட்டித் தள்ளும் இலைகளின் உதிர்ப்பில் !
பேய்க் காற்றுத் தாண்டவத்தில் !
எல்லாமே அள்ளுண்டபடி. !
சிவப்பு கறுப்பு பொட்டிட்ட!
ஒரு தனியன் வண்ணத்துப்பூச்சி!
செழிப்பிழந்து போன!
நித்திய கல்யாணிப் பூக்களில் !
நம்பிக்கையுடன் !
தேடித் தேடித் தேனெடுக்கும் நாதிகூட…!
நம் வாழ்க்கையிலிருந்து !
மெல்ல மெல்லக் கைநழுவிப் போகிறது. !
அதற்கிருக்கும் திராணிகூட !
இல்லாமற் போய்விடுமா?!
வீதிகளும், வெளிகளும்,!
வெறுமையாகிப் போன !
நம் கதைகளையே !
மீண்டும் மீண்டும் சுமக்கின்றன.!
வரிசை கட்டிக் கொள்வதும்!
நேரம் கடத்தும் காத்திருப்பும்!
நரம்புகளும் எலும்புகளும் வெளித்தெரியும் !
காற்றுப் பைகளாக்குகின்றன.!
சொரசொரத்துப் போன கடதாசிப் பூக்களில் !
இருக்கும் ஈர்ப்புக் கூட !
இந்த நடைப்பிணங்களில் இல்லை. !
பழுப்பேறிப்போன சோம்பேறி இருட்டில்!
மூன்று நாளாக உதறிப் போடாத !
அழுக்குப் படிந்த போர்வையுடன் !
நேரத்திற்கு நேரம் கம்மிக் கொண்டு!
மண் நிரப்பிய சிரட்டையில் !
எச்சில் துப்பிக் கொண்டிருக்கும் !
இந்தத் தரித்திரத்தை !
யாரிடம்தான் கேட்டுப் பெற்றுக் கொண்டோம்?!
அழுக்கு மூட்டையாய் !
அம்மிக் கொண்டு நீண்டு கிடக்கும் !
தூசி படிந்துபோன சாய்மனைக் கதிரையாக !
நகர்ந்து கொண்டிருக்கின்றன நாட்கள்.!
காத்திருப்புக்களின் நடுவே !
பழுத்துப்போன இலைகளாக !
உதிர்ந்து கொண்டிருக்கிறது வாழ்வு.!
-- துவாரகன்

உன்னில் உறைந்து போனேன்

நாவாந்துறைடானியல் ஜீவன்
நாவாந்துறைடானியல் ஜீவா - !
!
ஊசிக் குளிர் !
வந்தென்னை !
உரசித் தாக்க !
உறை நிலைப் படலமாய் !
நீ எந்தன் !
நெஞ்சில்.. !
வாழ்வு !
வறுமையின் !
கரு முகிலாய் !
உன் திருவுருவம் !
மனத்திரையில் !
தோன்றும் வேளை !
வெண்ணிலவாய் மாறும் !
இடுப்புடைய !
இடர்வந்து !
நொகுமெந்தன் !
மெய்யில் !
என் நிழல் பார்க்க !
எனக்கேது நேரம் !
இன்னும் !
எனக்குள் !
உன் வாசைன... !
நீயும் நானும் !
வெயில் சாய !
வீதியில் நடந்தோம். !
கவிதையில் !
பகிடி பண்ண !
காற்றோடு உன் சிரிப்புதிர !
எச்சி முறிகள் !
என் முகத்திற்கு !
சொந்தமாகும. !
இன்புற இடம் தேடி !
பண்ணைப் பக்கம் !
போகாமலே !
பக்கத்து வீடே !
நமக்கு பாலூட்டும் !
நிலவாகும் !
குளிர் காற்றும் !
கொழுத்தும் வெய்யிலும் !
கவி சொல்லும் !
கனத்த மழையும் !
நம் மகிழ்விற்காய் !
வசப்படுத்தினோம் !
வெள்ளம் வர முன் !
வள்ளம் கரை சேரும் !
வீடு வந்ததும் !
உன் தெருவுக்கு !
ஓடி வருவேன் !
காற்றில் !
கடிப்புதற !
சாதாளையோடு !
சுங்கான் மீன் கிடந்து !
சுள் என்று குத்த !
உன் புன்னகையை !
ஒரு கணம் கண்டால் !
விண்ணென்ற நோவெல்லாம் !
விரல்களிருந்து !
விடுதலையாகும் !
!
அன்றொரு நாள் !
பின்னிரவும் !
பேசாமல் !
புலர்ந்துபோனது. !
உன் வரவிற்காக !
என் உயிர்த்தீ !
உருக்குலைந்து !
காத்துக்கிடந்தது. !
தொடும் து£ரம் !
நின்ற நீ !
இன்று !
நெடும் தூரம் !
சென்று விட்டாய் !
நீ நினைத்தாலே !
உன் வேலிச்சிறகு !
விரிந்து கொடுக்க !
காதல் உட்புகுந்து !
உள் சதைவரை பாயும் !
நானோ !
ஒரு அமைதியின் !
வருகைக்காகளூ !
வெண் பனித் தூறலில் !
காத்துக்கிடக்கிறேன் !
ஆயினும் !
உன் உதடு தந்த !
ஈரம் !
இன்னும் உயிர் ப்புடன்

முகங்கள்

இரா.பழனி குமார்
கருவினில் உருவாகி உயிராக!
உதித்திடும் உண்மை முகம் !!
பள்ளியில் பயின்றிட பாதம்!
பதித்திடும் பால்ய முகம் !!
கல்லூரிக் காலத்தை களிப்புடனே!
கடந்திடும் இளமை முகம் !!
கனவுகள் நிறைந்த நெஞ்சோடு!
மணக்கோலம் காணும் முகம் !!
மக்கட்பேறு பெறுவதால் பேரின்பம்!
பெற்றிடும் பெருமைமிகு முகம் !!
வளர்த்திட்ட செல்வங்கள் வளமாக!
வாழ்ந்திட வழிகாட்டும் முகம் !!
ஓய்வுறும் வயதானால் வாடியமுகமோடு!
ஓய்வுபெறும் ஓய்வறியா முகம் !!
பெற்றவைப் பெற்றதை கொஞ்சி!
மகிழ்ந்திட்டு மலர்ந்திடும் முகம் !!
கடந்தகால நினைவுடனே காலத்தைக்!
கழித்திடும் களைப்படைந்த முகம் !!
முடியும் வாழ்வினை வரவேற்கக்!
காத்திருக்கும் களையிழந்த முகம் !!
உயிரற்ற உடலாக உறவும்ஊரும்!
வழியனுப்பும் இறுதி முகம் !!
மறைவிற்குப் பின்னாலே உற்றராரும்!
மற்றோரும் மறந்திடும் முகம்

கத்துகிறது என் கவிதை

நவஜோதி ஜோகரட்னம்
துக்கம்!
தொண்டையைத் துளைத்து!
மண்டையோட்டைப் பிளக்கிறது!
குளிரும் கறுப்பும் உருண்டு என்!
கட்டிலில் குவிகிறது!
நடுக்கம் உடலில் கசிய!
பல்லிகள் இல்லாத!
என் வீட்டுச் சுவர்கள்!
பல்லிளித்துச் சிரிக்கின்றது…!
என் விரல்கள்!
கூம்பிய மொட்டுகளாகி!
மனதோடு உணர்வு புணர்ந்து!
என் இதயத்தின் வால்வுகளை!
நன்றாகச் சுருங்கிவிட்டது!
வேதனையால்!
மயக்கமும் வெப்பமும் அதிகரித்து!
என்!
எலுப்புகளும் களைத்துவிட்டது!
தீப்பொறியாய் மின்னி மடிந்த!
என் தேசத்தின் மக்கள்…!
அந்த வன்னி மக்களின்!
பெருங்குரல்வளைகள்!
என்னை இறுக்கிப் பிழிந்து!
உலர்ந்த பொருளாக்கிவிட்டது!
பொய்யுக்குள் உலவுகிறது!
ஒரு சுதந்திரம்!
அழுதழுது!
கவிதை எழுதும் இரவே!
எனக்கு இனி வராதே!!
கத்துகிறது என் கவிதை!
என் தாயே!!
எடுத்துப் படி!
கருகிய உடல்களை வெண்மையாக்கி!
கவிழ்த்து மூடிய அந்த!
வன்னி தேசத்தின் மணற்பரப்பை… !
7.6.2009

நிசப்தம்

பாண்டித்துரை
கவிஆக்கம்: பாண்டித்துரை!
ம் என்ற!
முனகலுடன்!
அப்பா என!
கொட்டாவி விட்டு!
டிக் டிக் டிக் டிக்!
கடிகார பெண்டுலகம்!
உளறல் பேச்சுக்களாய்!
உறங்கும் உருவங்கள்!
குறட்டைச் சத்தமாய்!
தலையை சொரிந்து கொண்டு!
பூனைகளின்!
நடமாட்டத்துடன்!
இரவுகளின் நிசப்தம்!
மூடிய இமைகளுக்குள்!
விழித்தபின் பேசும்!
கனவுகளாய்!!
!
கவிஆக்கம்: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497