மாணவ பிள்ளைதாச்சிகள்.. கள்ளன்
வி. பிச்சுமணி
மாணவ பிள்ளைதாச்சிகள்..கள்ளன் போலீஸ் !
01.!
மாணவ பிள்ளைதாச்சிகள்!
-----------------------------!
ஒவ்வொரு பேருந்து பயணத்திலும்!
ஒவ்வொரு தொடர்வண்டி பயணத்திலும்!
குந்த இடமில்லாமல்!
முதுகில் புத்தகத்தை சுமந்து!
நிற்கும் பிள்ளைதாச்சி மாணவர்கள் !
முதுகு பைகள் கர்ணகவசம்!
கழற்றி வைக்கப்படுவதில்லை!
குந்திகளின் மூக்கை அறுக்கும்!
பின்னாலிருப்பவரின் வயிற்றை அமுக்கும் !
மாணவர்களுக்கு பாதுகாப்பு கவசம்!
மற்றவர்களுக்கு பாடாய்படுத்தும் கவசம்!
கூட்டம் அதிகமாக இருந்தாலும்!
முதுகுபைகள் கும்மியடித்து கொண்டிருக்கும் !
இந்த கர்ணர்களை கண்டால்!
கெளவரர்களுக்கு கூட எரிச்சல் வரும்!
இறக்கி கையில் வைக்க சொன்னால்!
ராஜ்ஜியத்தை கேட்டாற்போல் முறைக்கும் !
முதுகுபைகள் எப்போது இறக்கி வைக்கப்படுமென!
தொடங்கி வைத்த படையப்பாவுக்கே தெரியாது !
!
02.!
கள்ளன் போலீஸ் !
------------------------- !
நிலவும் நானும்!
கள்ளன் போலீஸ் விளையாடினோம்!
நான் போலீசாக!
நிலவு மேகத்தில் மறைந்து கொள்ளும்!
நிலவு போலீசாக!
நான் வீட்டில் மறைந்து கொள்ளுவேன்!
இப்படி மாறி மாறி!
இரவெல்லாம் விளையாட்டு!
சூரியன் தன்னையும் விளையாட்டில்!
சேர்க்க சொல்லி சண்டையிட!
எங்கள் விளையாட்டை கலைத்தோம்!
மற்றொரு நாளில்!
விளையாடுகையில்!
நிலவு மேகத்தில் மறைந்து!
போக்கு காட்டியது!
அதை கண்டுபிடிக்கவே முடியவில்லை!
போதும் விளையாட்டு!
வெளியே வா என அழைக்க!
நிலவின் ஒளிசத்தம் மட்டும் கேட்டது!
நிலவு வடித்த கண்ணீர்!
எங்க ஊரு முழுவதும் மழையாக