உன்னை தொடும் சையிலே!
வெளியில் பெய்கிறது மழை!!
மழையின் சைக்கு மனமிறங்காமல்!
வீட்டுக்குள்ளே நீ!!
தொட்டே தீருவேன் என்று!
விடாமல் பெய்கிறது மழை!!
தொடவிட மாட்டேன் என்று!
வீம்பில் இருக்கிறாய் நீ!!
உனக்கும் மழைக்குமான போட்டியில்!
நஷ்டம் என்னவோ நாட்டுக்குதான்!!
போனால் போகட்டும் !
கொஞ்சம் நனையேன்!!
பாவம் மழைக்கு!
பைத்தியம் பிடிக்கப் போகிறது!!
கடலில் உள்ள புயலால்!
மழை என்கிறார்கள்!
விவரம் அறியா விஞ்ஞானிகள்!!
எனக்குத் தானே தெறியும்!
மழை.!
கடல் புயலால் அல்ல!!
இந்த அழகு!
கன்னிப் புயலால் என்று!!
-ரா.சொர்ண குமார்,!
சென்னை

ரா. சொர்ண குமார்