வார்த்தைக்குள் அகப்படவில்லை - ஜே.ஜுனைட், இலங்கை

Photo by Steve Johnson on Unsplash

பூக்களுக்குள் !
வாசம் எங்கே !
தேடினேன் - !
காம்பு மட்டுமே !
மீதமாகியது கைகளில்..!!
வெற்றிகளின் !
ஓரம் வரை சென்றேன், !
பெரும் கிண்ணக்குழிகளாய் !
நின்றன…!
மழை நாட்களில் !
“நீர் முத்துக்களை”ப் பிடித்தேன்..,!
வாழ்வின் நிலையாமை !
புகட்டின…!
சாலைகள் தோறும் !
கற்களைப் பார்த்தேன், !
மனித இதயங்களின் !
மறு வடிவம் யாம் என்றன..!
கண்ணாடி தேசத்திற்குள் !
நுழைந்தேன், !
என் நிழலைத் தவிர !
மற்றெல்லா நிழல்களும் !
ஒளிந்து கொண்டன…. !
உண்மை கொண்டு !
உலகைநோக்கினேன், !
பார்வைக்கு முன்னாலுள்ளதெல்லாம் !
பூஜ்ஜியமாகின..!
பார்வை தாண்டி !
நோக்கும் போது !
பௌதிகஅதீதம் காட்சிதந்தது.., !
வார்த்தைக்குள் அகப்படவில்லை !
அது..!!!
ஜே.ஜுனைட், இலங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.