நன்றி கூறுவேன் - ஜே.ஜுனைட், இலங்கை

Photo by Jr Korpa on Unsplash

வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் !
எதுவும் இல்லாமல் போனது… !
இன்னொன்றை !
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் !
மரமாக வந்து கதை பேசியது…!
இலைகளையும் பூக்களையும் !
உனக்குள் !
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. !
மண்ணைப் போட்டு மூடினாலும் !
உன்னை !
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…!
மறுபடியும் வித்தொன்றை !
சிதைத்தொருக்கால் பார்த்தேன்… !
மாய வரம் ஏதேனும் !
அங்குள்ளதுவா தேடினேன் -!
“வித்திலைகள்” மட்டும் தான் !
எனைப் பார்த்து முறைத்தன…., !
மற்றதெல்லாம் எனை விட்டு !
என் கண்ணை மறைத்தன… !
பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., !
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!!
விருட்சம் அதன் தலைவிதியை !
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் -!
ஒன்றும் புரியவில்லை…,!
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் -!
கன்றாய் எழுந்தது !
மரமாய் விரிந்தது !
பூக்கள் சிரித்தன !
பூச்சிகள் வளைத்தன !
கனிகள் விளைந்தன.. !
என் கண்கள் வியந்தன..!
வித்திற்கு நன்றி சொல்ல !
தேடிப் பார்த்தேன் - !
காணவில்லை… !
விந்தை தான்..!, !
இறைவனுக்கே நன்றி சொல்வேன்
ஜே.ஜுனைட், இலங்கை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.