குரங்கு மனம் - ரகுவரன்

குரங்கு மனம் - Tamil Poem (தமிழ் கவிதை) by ரகுவரன்

Photo by Jr Korpa on Unsplash

விட்டுச் சென்ற காலம்
வீணாகிப் போனது!
விடியாத பொழுதெல்லாம்
பிழையென்று வசை தீர்த்தன!

இரவுப்படுக்கையிலே
நித்திரையை தேடினேன்......
மீண்டுமொரு விடியலிலே
மாண்டன உறக்கமெல்லாம்!

நொந்து போன மனம்
சிந்தித்து சொன்னது
இனியொரு விதி செய்வேன்!

அலைந்த மனம் குழைந்து நிற்க
பூட்டிய கண்களில்
தொலைந்தன காட்சிகள்!

இன்னொரு பகல்!
இன்னொரு குளியல்!
இன்றொரு வேலையென்று
சென்றன பொழுதுகள்....

அஸ்தமனத்தில் உதித்த
வீரச்சிந்தனைகள்
அடுத்த நாள் உதயத்தில்
அஸ்தமித்து போயின....
பழையபடி வேதாளம்,
முருங்கை மரம்......?
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.