உதித்தல் - சு.மு.அகமது

Photo by Steve Johnson on Unsplash

இருளின் ஒரு பதத்தையாவது
வெளிச்சத்தில் படித்திடல் வேண்டும்

வசீகரிக்கும் அதன் குரூர அழகில்
வயப்படாமல் இருக்க
கற்றுக்கொள்ளல் வேண்டும்

கருமை தான் இருளென்றால்
வாழ்வின் வெறுமையும் கருமைதான்

என்னை அறிமுகப்படுத்திய
இருளின் முகவரி தொலைத்து
வெளிச்சப்புழுதியில் உழன்று இருள்கிறேன்

இருள் கதவின் இடுக்கு வழி
கசியும் இருளில்
என் தேகம் மிளிரக் காண்கிறேன்

பூரணமாய் நான் இருளும் போது
வேர் படர்த்தி மண் கவிந்து
நான் அமிழ்கிறேன்
இருள் இருளாயும்
நான் இருளாயும்
இருளாகி இருள் நோக்கி உதிக்கிறேன்
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.