ஒரு முறைமையின் உதறலில்
எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும்
சதைக்கூளங்களை
எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த
கயமை குடி கொள்ளும்
நேசப் பறவைகளின் கூடுகளில்
பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி
பாசமாய் பாரம் சுமக்கும்
சுமைகளை தாங்கிய பாறை மனது
கெக்கலித்து புரளும் நினைவில்
ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை
விண்ணைத் தாண்ட எத்தனிக்கும்
மழைத் தவளையின் சாகசத்தோடு
துளியென்பது
கூழ் பூசின கூட்டின் அடையாளமாய்
வீலென்று அலறும்
கனத்த மார்பில் அமுது சுமந்தபடி
நிழல் பிடிக்க முடியாதவன்
சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி வைப்பான்
அவனே மழையாகிவிட்டவனாய்

சு.மு.அகமது