மழையாகிவிட்ட தவளையின் சாகசம் - சு.மு.அகமது

Photo by Jr Korpa on Unsplash

ஒரு முறைமையின் உதறலில்
எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும்
சதைக்கூளங்களை

எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த
கயமை குடி கொள்ளும்
நேசப் பறவைகளின் கூடுகளில்

பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி
பாசமாய் பாரம் சுமக்கும்
சுமைகளை தாங்கிய பாறை மனது

கெக்கலித்து புரளும் நினைவில்
ஊசலாடியபடி நெஞ்சக்கிடக்கை
விண்ணைத் தாண்ட எத்தனிக்கும்
மழைத் தவளையின்  சாகசத்தோடு

துளியென்பது
கூழ் பூசின கூட்டின் அடையாளமாய்
வீலென்று அலறும்
கனத்த மார்பில் அமுது சுமந்தபடி

நிழல் பிடிக்க முடியாதவன்
சுரக்காத ஊற்றுக்காய் கண்ணி வைப்பான்
அவனே மழையாகிவிட்டவனாய்
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.