முகவரி தொலைத்த
வெறுக்குட வாழ்க்கை
பதித்த தடத்தில்
படியாத மிச்சம்
கழனியின் எச்சமாய்
ஊற்றென பீறிட்டெழும்
வலியில் வழிந்தோடும்
உயிர்த்துளியென நம்பிக்கை
வியர்வை வற்றிப்போன
துர்வாசக் கமறலில் தொற்றிக்கொள்ளும்
வெறுப்பின் மிச்சம்
நாம் தொலைத்த
சுருங்கிப் போன இரைப்பைகள்...
நிரப்பக் காத்திருக்கும்
ஏகாதிபத்தியத்தின் ஏடுகளில்
நமக்கான பருக்கைகள்
நிர்பந்த நிவாரணியாய்

சு.மு.அகமது