மரணமும் - வித்யாசாகர்

Photo by Visax on Unsplash

தடியூனி நடக்கும் கனவு அது
இடையே மரணம் வந்து வந்து
காலிடறிச் சிரிக்கிறது..

காதுகளில் அழுபவர்கள்
ஆயிரமாயிரம் பேர் - சற்று
காதுபொத்திக் கேட்கிறேன்; என்
மகள் அழுகிறாள்,

எட்டி உதைத்தேன் அந்தக் கனவை
ஐயோ என்று
எமன் கத்திய சப்தம்;

எவனானால் என்ன
என் மகளினி அழமாட்டாள்...
 
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.