கலையும் கனவு - சு.மு.அகமது

Photo by Jr Korpa on Unsplash

ஓர்
நாட்காட்டியின் மாற்றம் மட்டுமே
புது வருடத்தின் பிரகடனமாகிறது

கரைந்து போன நினைவுகள்
கனத்துப் போனது போல்
மீண்டும் விம்மிப்புடைத்து
கலையத்துவங்குகிறது
மரணத்தின் புது துவக்கம்

மறு மரணம் வரை பயணிக்க
ஒரு நாட்காட்டி தேவைப்படுகிறது

வாழ்க்கை
கரையும் கற்பூரமாய்
நாட்களை குதறும்  தன் கூரிய பற்களால்

கடைசியில்
மிஞ்சி நிற்பது-எதிர்பார்ப்பு
கலைந்து போன கனவாய்
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.