கூர் கனவு - சு.மு.அகமது

Photo by Jr Korpa on Unsplash

எனதென்று இல்லாத பொழுதுகளில்
நீ  உதிக்கிறாய்
கருகி உதிரும் மாம்பூக்களின்
அழுகல் நெடியோடு

எனக்கான எல்லாமும் ஓர்
ஒற்றை சருகென அலைபாய்கையில்
குலை தாங்கிய ஈச்ச மரமாய்
கூர்முனை ஓலை ஒற்றுகிறாய்

அதில்
வடியும் நிறம் பூசி
வாகாய் வந்தமர்கிறது உன் முகத்தில்
வலியும் வலி படர்ந்த நினைவுகளும்
தனிக் குயிலின் விடியலோசையாய்
தத்தளிக்கும் மூழ்குதலில்
எண்ணெயின் திரிவிளக்காய்
சுடர் படர்த்தி நிஜமடைகிறாய்

நெஞ்சார்ந்த தோழமைக்காய்
புள்ளியில் மையங்கொண்டு சுழற்றி அடிக்கிறாய்

எங்கோ மறைந்து போகிறது
மினுக்கட்டான் பூச்சியின் பகற்கனவும்
வானத்து விண்மீனின் பகலும்
எனது அபிலாஷைகள் போல்
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.