உணர்வுகள் பட்டுத் தெறிக்கிற போது
உறவுகள் படுத்துரைக்கும்
காதோர வெண்மை பற்றி கவலையில்லை
எனக்கு முன்பே
கிழடு தட்டிப்போன வரையறைகள்
பூக்களுக்கான எனது நேசம்
குருடாய் போன குதர்க்கியாய்
தூர தேசத்து பறவைகளின் சிறகுகள்
அலை பதிவியாகி
எங்கோ எனக்காய் காத்திருக்கும்
அறிவு ஜீவிக்கான நேர்க்காணலில்
விழித்தெழும் பால்யத்தில்
இன்றும்
ஆறடிக்கப்படாமல் தொடரும்
சா’தீய’ வன்கொடுமைகள்
சாத்தியப்படும்
என்றாவது ஒரு நாள்
சாக்குழியிலிருந்து கிளர்ந்தெழும்
சாதிகளற்ற சமத்துவம்.

சு.மு.அகமது