சமத்துவம் - சு.மு.அகமது

Photo by engin akyurt on Unsplash

 
உணர்வுகள் பட்டுத் தெறிக்கிற போது
உறவுகள் படுத்துரைக்கும்

காதோர வெண்மை பற்றி கவலையில்லை
எனக்கு முன்பே
கிழடு தட்டிப்போன வரையறைகள்

பூக்களுக்கான எனது நேசம்
குருடாய் போன குதர்க்கியாய்

தூர தேசத்து பறவைகளின் சிறகுகள்
அலை பதிவியாகி
எங்கோ எனக்காய் காத்திருக்கும்
அறிவு ஜீவிக்கான நேர்க்காணலில்

விழித்தெழும் பால்யத்தில்
இன்றும்
ஆறடிக்கப்படாமல் தொடரும்
சா’தீய’ வன்கொடுமைகள்

சாத்தியப்படும்
என்றாவது ஒரு நாள்
சாக்குழியிலிருந்து கிளர்ந்தெழும்
சாதிகளற்ற சமத்துவம்.
 
சு.மு.அகமது

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.