எல்லோர் முதுகிலும்
தூக்கமுடியா கனத்துடன்
கண்களுக்குத் தெரியா பை!
பை நிறைய
பல வடிவத்தில்
பல வண்ணத்தில்
அவரவர் முகங்களின்
போலி முகங்கள்!
நேரத்திற்குத்தக்க
ஆளிற்குத்தக்க
முகங்களை மாற்றிக் கொண்டு
அகங்களில் அழுக்கேற்றியபடி
விரைகின்றனர் எல்லோரும்!
எப்போதும் எல்லோருக்குள்ளும்
ஒருமித்த ஒரே வருத்தம்தான்
உண்மைமுகம் உள்ளோர் இல்லை என

கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி