தமிழென்னும் தேனாற்றில் - சத்தி சக்திதாசன்

Photo by engin akyurt on Unsplash

மனமென்னும் வீணைதனில் இசைக்குதிந்த தமிழ் ராகம்!
மழலைப் பருவத்திலே விளைந்ததிந்த தமிழ் மோகம்!
நினைவென்னும் ஆழ்கடலில் மிதக்குதிந்த கவிதா யாகம்!
நிற்காமல் பொழியும் எண்ணமென்னும் மொழி மேகம்!
விழிமூடும் வேளயிலும் கனவாக மிதக்குமெந்தன் தாய்மொழியே!
வழியெங்கும் தோரணங்களாய் கவிதைப் பூக்கள் அலங்கரிக்கும்!
!
எனை வரவேற்க காத்திருக்கும் தமிழ்மொழியின் இனிய சந்தங்கள்!
என்றும் எனை வாழ வைக்கும் இனிய கவிதை வரிகள்!
காலமெனும் கப்பலில் காததூரம் கடந்து விட்டேன் நண்பா!
காணும் காட்சியெங்கும் கற்பனைப் பூக்களாய் மலர்கின்றதே!
!
மீதியுள்ள வாழ்நாளில் விரல்களின் வளைவினால் விளையட்டும் எழுத்துக்கள்!
மனிதனிவன் மனதினிற்கு நல்கவிதை தானெ என்றும் நிம்மதி!
மீண்டுமொரு பிறப்புண்டு என்றேதன் இறை சொல்வானெனில்!
மறுபடியும் மிதக்கவிடு தமிழ் தேனாற்றில் என்றே நான்!
!
மனமுருகி வேண்டிடுவேன் ; அன்னை தமிழே அருளிடுவாய்!
மழையாக பொழியட்டும் அப்போதும் தமிழ்க் கவிதைகள் !
!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.