எதையும் இதயம் - சத்தி சக்திதாசன்

Photo by FLY:D on Unsplash

சத்தி சக்திதாசன் !
!
சுற்றிப் பார்த்தேன் முட்புதர்கள் !
எட்டிப் பார்த்தேன் ஏணிப்படிகள் !
தாவிப் பார்த்தேன் நீண்ட சுவர்கள் !
எதையும் இதயம் ? !
விழிகளை மூடினேன் கனவும் மறந்தது !
பேனவை மூடினேன் இதயம் கனத்தது !
கைகளை மூடினேன் வெறுமை நிறைந்தது !
எதையும் இதயம் ? !
மாலை வந்தது மலர்கள் துவண்டன !
காலை வந்தது கனவுகள் கலைந்தன !
நேரம் வந்தது நாடியன ஓடின !
எதையும் இதயம் ? !
காலம் மறைத்தது கற்பனைத் தேரை !
கண்கள் மறைத்தன கனவின் சுகத்தை !
நெஞ்சம் மறைத்தது நேற்றைய வளங்களை !
எதையும் இதயம் ? !
இனிமேல் வேண்டாம் பொருந்தாத வாழ்க்கை !
இனாமாயும் வேண்டாம் எட்டா ஆசைகள் !
கைகளில் வேண்டாம் கனத்த விலங்குகள் !
எதையும் இதயம் ?
சத்தி சக்திதாசன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.