நேசத்தாவரம் - அன்பாதவன்

Photo by Jr Korpa on Unsplash

ஒரு வண்ணத்துப்பூச்சியாய் அமர்ந்து !
மலைப்பாம்பாய் இறுக்கும் நீ யார்? !
உரையாடல்களில் சிந்துகிற சொற்களை !
விதைநெல்லாய் சேகரித்து !
மனக்குதிரில் பத்திரப்படுத்தும் நீ யார்? !
வார்த்தை வலைகளுக்குள் சிக்குமாறு !
வசப்படுத்தி வைத்திருக்கும் !
மாயச்சொல்லுக்கு உரிமையான நீ யார்? !
ஆறு காலங்களிலும் !
நினைவுகளை ஆக்ரமிப்பு செய்து !
ஆனந்த ஆதிக்கம் செய்கிற நீ யார்? !
பழைய மரபுகளை புறந்தள்ளி !
புதிய இலக்கணத்தில் !
வழிநடத்தும் சுழற்காற்றே நீ யார்? !
பூவாய் மலர்ந்து கொடியாய் படர்ந்த !
நேசத்தாவரத்தின் நிற மறிய !
உன்னைக்குவித்துக் கண்கள் மூட !
உன்னுள் வருவேன் !
நான்
அன்பாதவன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.