தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நாகரிகம் ஏனோ இன்னும்?

எதிக்கா
காலம் கடந்து உயிர் மூச்செறிந்து !
வானம் பொசுங்கியது !
வைகுண்டம் முதல் வங்கம் வரை !
பேரதிர்வு !
புத்தி பேதலித்துப் போன !
மனிதக்கூட்டம் !
சுத்திச் சுத்தித் தலையாட்டியே !
வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள் !
கடந்து விட்டன !
வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும் !
அழிக்கப்பட்டு !
சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ !
இதனால் மீதியில் தொலைந்துபோனது !
இயற்கையும் மனிதத்தலைகளும் தான் !
காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை !
மீண்டும் மேடையேறியது !
தெளிவற்ற கருத்துக்கள் !
முடிவுகள் !
மனித வம்சத்தையே புதைக்க !
ஊன்றுகோலாகியது இப்போதான் !
போர்க்கால மேகங்கள் மெல்ல !
விலகுமென இருக்க !
போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்? !
பகட்டான வாழ்க்கை !
பாதகர் யாரும் உய்யவே வேண்டாம் !
உங்கள் வாயசைப்புக்கள் !
இன்னும் இன்னும் எத்தனையோ !
பாதகர்களை உரமிட்டுச் செல்லும் !
பேதமின்றி சமத்துவம் தொலைந்து !
போன பின்னும் !
நாகரிகம் ஏனோ இன்னும்? !
!
எதிக்கா

ஆட்டு மந்தைகள்!

பிரான்சிஸ் சைமன்
ஒரு வருடத்திற்கு முன்பு..!
மலையடிவாரத்தில்!
ஆட்டு மந்தைகளைப்போல்!
உன்னை வளைத்துப் பிடித்து!
ஜல அபிஷேகம் செய்து!
பின்னர் காவல்நாய்களிடம்!
ஒப்படைத்தன!
செம்மறி ஆடைத் தரித்த!
நரிகள்!
சீறி எழுந்தன!
ஆட்டு மந்தைகள்!
போகமாட்டோம்!… போகமாட்டோம்!!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று !
உறுதி மொழி கொண்டன!
ஒரு வருடத்திற்கு பின்பு…………!
பகல் கொள்ளை நரிகளின்!
உறைவிடமான !
அந்த “மலையடிவாரத்தில்!
மீண்டும் சங்கமத்தின!
ஆட்டு மந்தைகள் !
செய்தியை படித்தேன்!
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்!
எனக்கு தரிசனம்!!!!
அடுத்த வருடமாவது!
ஆட்டு மந்தைகளுக்கு!
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று!
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த!
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.!

நள்ளிரவின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
நடுத்தெருவில் விளையாடும்!
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்!
இரவொன்றின் பாடலை!
நான் கேட்டேன் !
மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய!
எந்தப் பதற்றமுமின்றி!
துள்ளுமவற்றைத் தாங்கிக்!
கூட விளையாடுகிறது!
சலனமற்ற தெரு !
யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு!
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி!
நடக்கத் தொடங்குகையில்!
திசைக்கொன்றாகத் தெறித்தோடி!
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன!
மூன்று குட்டிகளும் !
நான் நடக்கிறேன்!
தெரு சபிக்கிறது!
நிசி தன் பாடலை!
வெறுப்போடு நிறுத்துகிறது !
இந்தத் தனிமையும்!
இருளும் தெருவும்!
வன்மம் தேக்கி வைத்து!
எப்பொழுதேனுமென்னை!
வீழ்த்திவிடக் கூடும்!

புலராதோ நாளை ? கவிதை எழுத காத்திருக்கிறேன்

சத்தி சக்திதாசன்
நிலவில் களங்கமாமே !!
நேற்றொருவன் என் காதோடு!
சொன்ன கதை கேட்டுக் கொஞ்சம்!
சோபை இழந்தேன்.!
கவிதை பாடும் மனிதனல்லவா நான் ?!
கருத்துக்கே ஒளி கொடுக்கும் என்!
நிலவுக்கே களங்கம் என்றால்!
நிம்மதி அடையுமா என் நெஞ்சம் ?!
கைவிரல்கள் அசைய மறுத்ததால்!
கவிதைச் சுனை ஊற மறுத்ததால்!
கண்களை மூடிக் கொஞ்சம் தூக்கத்தோடு!
போராடிக் கொண்டிருந்தேன்!
சயனத்தின் சங்கீதம் இசைத்ததால்!
சத்தமின்றி என்னை!
நித்திரை அணைத்துக் கொண்டது!
கனவிலொரு ஒளியாக காற்றிலேறி!
கண்முன்னே புன்னகைத்தாள் என் தாய் !!
தமிழ்த்தாய் ......!
நித்தமும் கவிபாடி களித்திருந்தாய்!
நித்திரையில் கூட உன் கைகள்!
மனத்திரையில் வரைவது கவிதை வரிகள் தானே ...!
ஏன் மைந்தா உனக்குக் கலக்கம் ?!
எவர் சொன்னார் உனக்கு எதனை ?!
தாய்மைக்கே உரித்தான கனிவோடு!
தலை நிமிர்த்தி எனை நிறுத்தி!
தாங்கிக் கொண்டாள்.....!
புரிந்து கொண்டேன் மகனே!
காய்ந்து போன உன் கவிதைச்சுனையின்!
காரணத்தை நானும்!
நிலவில் களங்கள் என்று சொன்னவன்!
நீரிலே எழுத்துப் போன்றவன்!
மகனே !!
கவிஞன் ....!
காற்றுப் புக முடியா இடையினுள்!
கண்மூடித்திறப்பதற்குள்!
களவாகச் சென்று வருபவன்!
சூரிய ஒளி பட முடியாத இடத்தின் மீது!
குளிர்மையாகப் படர்ந்து!
குறுங்கவிதை படிப்பவன்!
பைத்தியக்காரன் அவன்!
பத்தும் சொல்வான்!
பற்றியெறியும் நெருப்பின் மேல்!
படர்ந்திருக்கும் பனி போல!
நியாயமற்ற இந்தச் சமூகத்தில்!
நாளைய நடப்புக்களைச் சொல்வோர்!
நேற்றைய தவறுகளை அறிவோர்!
எனதருமைக் கவிஞர்களே ....!
தளராதே...!
தனயா... கண்விழித்து எழுந்ததும்!
கருத்து மேகத்தைக் குவித்து!
கவிதை மழையெனப் பொழிந்து விடு!
குளிர்காலத் தென்றலென!
நிலவுதனை உனது கவிதை தழுவட்டும்!
அப்போது....!
நிலவு உன்னைப் பார்த்துப் புன்னகைக்கும்!
நிலவில் களங்கமுண்டா ? எனக் கண்டு கொள்வாய்...!
நெஞ்சம் நிறைவாக!
அன்னை பாதம் பணிந்து!
அடுத்தநாள் காலை தனை!
ஆவலாய்ப் பார்த்திருந்தேன்!
!
-சக்தி சக்திதாசன்

மரணத்தின் ருஸி

கருணாகரன்
ஒரு ஆட்டுக்குட்டி !
என்றும் நினைப்பதில்லை!
தன் கழுத்தில் விழக்காத்திருக்கும் கத்தியை!
என்றும் அது அறிவதில்லை!
தன்னை வளர்ப்போனே !
ஒரு கொலையாளன் என்பதை!
!
சாவுக்குப்பிறகும் !
தனது குருதியும் மாமிசமும் !
மகிழ்ச்சிக்குரிய பண்டமாகிப் போகுமென்று !
துள்ளுகிறது மகிழ்ச்சியுடன்!
அழகாக!
நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.!
பிறகொருநாள் மடிகிறது!
நமது குருரவெளியில் எந்த நிபந்தனையுமின்றி!
அது !
நமக்கு ருஸியாகிப்போகிறது

துயரின் தொடக்கம்

த.அகிலன்
எப்போதும் !
ஏதேனுமொரு !
புன்னகையிலிருந்தே !
ஆரம்பிக்கிறது துயரம் !
ஓர் !
புன்னகையில் இருந்து !
மற்றுமோர்!
புன்னகைக்கு !
வழிநெடுக !
புன்னகைகளை !
வாரியணைத்தபடியும் !
ஒவ்வோர் !
புன்னகையின் !
முகத்திலும் !
தன்னை !
அறைந்தபடியும் !
பயணிக்கிறது !
துயரம் !
அது தன் !
தீராக்காதலோடு !
தொடர்ந்தும் இயங்கும் !
இன்னொரு !
புன்னகையைநோக்கி !
!
-த.அகிலன்

தூறல் கவிதை... 365 ஆவது நாள்

முத்துவேல்.ச
தூறல் கவிதை!
*நேற்றிரவு பார்க்கத்!
தவறிய மழை!
கண்ணில் படும்!
நிலப்பரப்பெங்கும்!
தன் ஆளுமையை நிறுவியிருந்தது!
கம்பி வேலியில்!
செடி ,கொடிகளில்!
முத்து முத்தாக...!
ஒரு குறுமரத்தின்!
கீழே நின்று!
ஒருமுறை உலுக்கிவிட்டு!
லேசாய்!
நனைந்து கொண்டபோது!
ஈரம் சுமந்த மனம்!
ஏன் லேசானது?!
!
உன்னருகில் நான்!
உன் பெரிய கரிய!
விழிகள்!
எப்போதும் மிரண்டு!
மருண்டிருப்பது!
கொள்ளை அழகு...!
இன்னும் அழகு!
கருவிழிப் படலத்தில்!
நான்மிதக்கும்போது.!
ஹைக்கூ கவிதைகள்!
நானும் எடுக்கவில்லை!
சாலையில் நாலணா!
நாலணா என்பதால்!
!
கதவு திறந்ததும்!
தப்பியோடிய கரப்பான்!
தண்ணீரில் விழுகிறது!
!
காணாமல் போனவனை!
பிடித்து வைத்துள்ளது!
புகைப் படம்!
!
365 ஆவது நாள்!
காற்றில் படபடக்கும் தாள்கள் தாங்கிய!
நாட்காட்டிகள் ஒவ்வொரு அறையிலும்!
தேவைக்கும் அதிகமாகவே...!
வணிக உத்தியாய் வந்தவை சில...!
அன்பளிப்பாய் வந்தவை சில...!
அன்பளிப்பு என்ற பெயரில் சில...!
புகைப்படத்தில் சிரிக்கும்!
ஊர் பெரும்புள்ளியின்!
கூப்பிய கரங்களுக்குள்!
குறுவாள் ஒளிந்திருக்கலாம்,!
குருதிக் கறையோடு...!
எவ் வருடத்திற்கும் பொருந்தும் வகையில்!
ப்ளாஸ்டிக் நாட்காட்டி ஒன்று மட்டும்!
எப்போதும் ஒரே நாளை காட்டிக்கொண்டிருப்பது!
இல்லத்து அரசியின் ஏற்பாடு...!
ஒரு நாளைக்கு இருமுறை!
சரியாய் மணிகாட்டும்!
ஓடாத கடிகாரம்!
எவ்வளவோ தேவலாம்!
வருடத்தில் ஒருநாள் மட்டும்!
சரியாய் நாள்காட்டும்!
இந் நாட்காட்டியை விட...!
மாற்றப்படாத அந்நாள்!
மறந்துவிடக்கூடாது!
என்பதற்காக அல்லவாம்!
நினைத்துக் கொண்டே இருக்கத்தானாம்...!
அப்படி என்ன சிறப்பு !!
அந்த ஒரு நாளில் மட்டும் ?!
இப்போதும் நீங்கள்!
அவள் வீட்டிற்குச் சென்றால் பார்க்கலாம்!
உப்புச் சப்பில்லாததற்கெல்லாம்!
திட்டிக்கொண்டிருக்கும் அவள் கணவனையும்!
அவன் பிறந்த நாளுக்காய் காத்துக்கொண்டிருக்கும்!
அவளையும்,அந்த நாட்காட்டியையும்

இந்த நிஜமான உணர்வு

நவஜோதி ஜோகரட்னம்
உனக்கும்!
எனக்குமான!
இந்த நிஜமான உணர்வு!
எப்போதும்!
புதுமையான ஒன்றாக!
அதீதத்துக்குரியதாக!
அழகானதாக!
ஆசையானதாக!
அழுவதாக!
இளமையடைவதாக!
குழந்தையைப்போலதாக!
கலைத்தோய்வு உள்ளதாக!
உணர்ச்சிவசப்பட்டதாக!
உயிர்ப்புள்ளதாக!
உற்சாகம் நிறைந்ததாக!
உறங்கிப்போவதாக!
பறப்பதாக!
பரிதாபகரமானதாக!
புன்னகையுடையதாக!
மௌனமானதாக!
மென்மையாக!
கண்காணிக்கப்படுவதாக!
கனவுகாண்பதாக!
பகல்பொழுதாக!
விழித்துக்கொள்வதாக!
வயப்படுவதாக!
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதாக!
ஒரு இருத்தலியாக!
வாழ்ந்துகொண்டிருக்கிறதாக!
கொடியதாக!
பிடிவாதமாக!
பொறாமையுடையதாக!
மூப்படைவதாக!
புண்படுத்துவதாக!
நம்பிக்கையிழந்ததாக!
நடுக்கமுடையதாக!
சிரிப்புடையதாக!
மோசமானதாக!
மிருதுவானதாக!
முட்டாள்தனமாக!
மறக்கப்படுகின்றதாக!
மறுக்கப்படுகின்றதாக!
துரத்தப்படுகின்றதாக!
தொடரப்படுகின்றதாக!
நிஜமானதாக!
நினைவிருக்கிறதானதாக!
உனக்கானதாக!
எனக்கானதாக!
இருவருக்குமானதாக!
இல்லை!
அனைவருடையதானதாகவும்...!
தனித்தவமானதான!
நீயும்!
நானும்!
நாமிருவரும்!
போகலாம்!
வரலாம்!
இந்த நிஜமான உணர்வில்

வெறுத்துப்போதல்

முஹம்மட் மஜிஸ்
வலி மிகைத்து!
ஆக்ரோஷமாய்!
மெல்லிய படர்தலின்!
இடர்பாட்டில்!
தோற்றன கனவுகள்!
மெய்களை கடந்த!
பொய்கள் அதன்!
ஆழங்களையும் அகலங்களையும்!
ஜடம் மறைத்து!
உயிர்த்தது!
சயனம்!
சபித்த இருள்கள்!
சூனியத்தை ஜெயித்தன!
சுயம் வன்மைகளை!
கௌரவிக்க பழகின!
ஜனநாயம்!
குரல் நெறித்து!
தற்கொலை செய்தன!
தலைகள் வெறுத்து!
கிரிடம் கால்களிலே!
பாவம் நான்!
தனியாகத்தான்!
நிற்கிறேன்!
வாக்கு நிராகரித்தோர்!
பட்டியலில்

அவள் இல்லாமையின் வெளிச்சம்

அசரீரி
அறிவிப்பேயில்லாமல் கரண்ட் போனது போலதான்!
என் வானப் பேப்பர்!
திடீரெனக்கறுப்பாகி வெறுமையாகிப் போனது!
ஒரு மின்னல்!
வெட்டியது போல இருந்தது!
அன்றிரவு!
உன்னைப் பற்றிய கவிதைகளும்!
நட்சத்திரங்தளுமாக இருந்த எல்லாம்!
நூர்ந்து வெற்றாகிப் போயிற்று .!
மின்னாமல் தொடர்ந்து பத்துமே!
அந்தப் பெரிய வெள்ளி!
அதையும் கள்ளத்தனமாக!
கவிதைக்குள்தான் ஒளித்து வைத்திருந்தேன்!
உனக்கும் தெரியாது!
அதுவும் சேர்ந்துதான் இல்லாமலாகியிருக்கிறது.!
அப்பாடா உன்னைப்பற்றிய!
ஒன்றுமேயில்லை!
இப்போதிருந்து என்னிடம்!
ஊர்க் கடற்கரையில்!
வெள்ளிக்கிழமை கழியும் போதோ,!
காட்டுத்தேங்கா மரத்தடியை!
சைக்கிளில் தாண்டும் போதோ,!
மெத்தைப்பள்ளி மூலைச்சந்தில்!
மெல்லத் திரும்பும் போதோ!
உன் முக்காட்டுக்கூரிலிருந்து கொட்டிய!
எந்த கவிதைத் துண்டுகளிலும்!
என் சைக்கிள் மூச்சை இழக்காது இனி..!
!
இனி நான் உரிமையுடன் அழைக்கலாம்!
சூரியன் வாங்க!
சேர்ந்தே எரிவோம்!
பாதிக்கு நீங்களும் பாதிக்கு நானுமாக இணைந்து!
உலகத்தில்!
அவளின் இல்லாமையின் வெளிச்சம்!
என்னை முழுக்கப்படர்ந்திருக்கிறது இப்போது!
!
-அசரீரி