மரணத்தின் ருஸி - கருணாகரன்

Photo by Tengyart on Unsplash

ஒரு ஆட்டுக்குட்டி !
என்றும் நினைப்பதில்லை!
தன் கழுத்தில் விழக்காத்திருக்கும் கத்தியை!
என்றும் அது அறிவதில்லை!
தன்னை வளர்ப்போனே !
ஒரு கொலையாளன் என்பதை!
!
சாவுக்குப்பிறகும் !
தனது குருதியும் மாமிசமும் !
மகிழ்ச்சிக்குரிய பண்டமாகிப் போகுமென்று !
துள்ளுகிறது மகிழ்ச்சியுடன்!
அழகாக!
நமக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.!
பிறகொருநாள் மடிகிறது!
நமது குருரவெளியில் எந்த நிபந்தனையுமின்றி!
அது !
நமக்கு ருஸியாகிப்போகிறது
கருணாகரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.