நாகரிகம் ஏனோ இன்னும்? - எதிக்கா

Photo by Jayden Collier on Unsplash

காலம் கடந்து உயிர் மூச்செறிந்து !
வானம் பொசுங்கியது !
வைகுண்டம் முதல் வங்கம் வரை !
பேரதிர்வு !
புத்தி பேதலித்துப் போன !
மனிதக்கூட்டம் !
சுத்திச் சுத்தித் தலையாட்டியே !
வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள் !
கடந்து விட்டன !
வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும் !
அழிக்கப்பட்டு !
சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ !
இதனால் மீதியில் தொலைந்துபோனது !
இயற்கையும் மனிதத்தலைகளும் தான் !
காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை !
மீண்டும் மேடையேறியது !
தெளிவற்ற கருத்துக்கள் !
முடிவுகள் !
மனித வம்சத்தையே புதைக்க !
ஊன்றுகோலாகியது இப்போதான் !
போர்க்கால மேகங்கள் மெல்ல !
விலகுமென இருக்க !
போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்? !
பகட்டான வாழ்க்கை !
பாதகர் யாரும் உய்யவே வேண்டாம் !
உங்கள் வாயசைப்புக்கள் !
இன்னும் இன்னும் எத்தனையோ !
பாதகர்களை உரமிட்டுச் செல்லும் !
பேதமின்றி சமத்துவம் தொலைந்து !
போன பின்னும் !
நாகரிகம் ஏனோ இன்னும்? !
!
எதிக்கா
எதிக்கா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.