நள்ளிரவின்.. உஷ்ண வெளிக்காரன் - எம்.ரிஷான் ஷெரீப்

Photo by Julian Wirth on Unsplash

நள்ளிரவின் பாடல்.. உஷ்ண வெளிக்காரன்!
01.!
நள்ளிரவின் பாடல் !
--------------------------!
நடுத்தெருவில் விளையாடும்!
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்!
இரவொன்றின் பாடலை!
நான் கேட்டேன் !
மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய!
எந்தப் பதற்றமுமின்றி!
துள்ளுமவற்றைத் தாங்கிக்!
கூட விளையாடுகிறது!
சலனமற்ற தெரு !
யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு!
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி!
நடக்கத் தொடங்குகையில்!
திசைக்கொன்றாகத் தெறித்தோடி!
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன!
மூன்று குட்டிகளும் !
நான் நடக்கிறேன்!
தெரு சபிக்கிறது!
நிசி தன் பாடலை!
வெறுப்போடு நிறுத்துகிறது !
இந்தத் தனிமையும்!
இருளும் தெருவும்!
வன்மம் தேக்கி வைத்து!
எப்பொழுதேனுமென்னை!
வீழ்த்திவிடக் கூடும்!
!
02.!
உஷ்ண வெளிக்காரன் !
-------------------------------!
கொதித்துருகும் வெயிலினை!
ஊடுருவிக் காற்றெங்கும்!
பரந்திடா வெளி !
வியாபித்து!
ஊற்றுப் பெருக்கும் புழுக்கம் !
வெப்பம் தின்று வளரும்!
முள்மரங்கள்!
நிலமெங்கிலும்!
கனிகளைத் தூவுகின்றன !
உச்சிச் சூரியனுக்கும்!
வானுக்கும் வெற்றுடல் காட்டி!
நிழலேதுமற்று கருகிய புல்வெளியில்!
ஆயாசமாகப் படுத்திருக்கும்!
சித்தம் பிசகியவன்!
புழுதி மூடிய பழங்களைத் தின்று!
கானல் நீரைக் குடிக்கிறான் !
கோடை!
இவனுக்காகத்தான் வருகிறது போலும்
எம்.ரிஷான் ஷெரீப்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.