இருந்தும் இல்லாமல் - புஸ்பா கிறிஸ்ரி

Photo by Sajad Nori on Unsplash

கண்களில் கண்ணீர் இருந்தது. !
மனத்தில் சுமையும் இருந்தது. !
கை கால்களில் பதட்டம் இருந்தது. !
வயிற்றில் பசியும் இருந்தது.. !
கை ஏந்திக் கேட்க மனமும் இருந்தது.. !
தருவார்களோ என்ற ஏக்கம் இருந்தது.. !
தராவிட்டால் வெட்கம் என்ற !
அவமான எண்ணமும் இருந்தது.. !
வயிறும் அழுது வடித்துக் கொண்டிருந்தது. !
இத்தனை இருந்தும் கையில் !
பணமிருக்கவில்லை. !
மனத்தில் தைரியமிருக்கவில்லை !
இறைவா இந்தப் பசியை !
எதற்குப் படைத்தாய்? !
எத்தனை ஓலங்கள்? !
கேட்கவில்லையா உனக்கு? !
ஓ.. உனக்குப் பசித்ததில்லையா? !
ஏழைக்குப் பசிக்கிறதே! !
என்ன செய்வது? !
-புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.