தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எங்கள் குழந்தைகள்

துவாரகன்
எங்கள் குழந்தைகள்!
வீடுகளைத் தொலைத்து விட்டார்கள்!
எங்கள் குழந்தைகள்!
வீதிகளைத் தொலைத்து விட்டார்கள்!
எங்கள் குழந்தைகள்!
சிரிப்புகளைத் தொலைத்து விட்டார்கள்!
இனியும்!
அவற்றைத் தேடிக் கொள்வோம் என்ற நம்பிக்கை!
எங்கள் கைகளை விட்டுத்!
தூரப் போய்விட்டன.!
படகோட்டி தன் துடுப்பைத் தொலைத்து விட்டதுபோல்!
இப்போ எங்கள் குழந்தைகளுக்குத் தேவை!
வானவில்லும் நட்சத்திரங்களும் அல்ல!
நடந்த களைப்புத் தீர!
ஒரு முள்ளில்லாப் பற்றை!
தாகம் தீர்ப்பதற்குக்!
கொஞ்சம் குடிதண்ணீர்!
-துவாரகன்

நியாயமா...மானிடா

வைகறை நிலா
மேகம் தந்தேன்!
மழை தர...!
அதனையும் கலைத்திட!
கற்றுக்கொண்டாய் நீ!
உலோகம் தந்தேன்!
நற்கருவிகள் செய்திட..!
தீய கருவிகள் செய்தாய் நீ!
தீவிரவாதம் வளர்க்க...!
செடிகள் மரங்கள்!
செழிக்க வைத்தேன் நான்..!
அத்தனையும் அழித்துவிட்டு!
மழையில்லை!
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்!
இயற்கை செல்வத்தோடு!
மழையை பொழிந்தேன் நான்!
கடலில் விட்டுவிட்டு;!
வறட்சி வந்ததும்!
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்!
தவறெல்லாம் உன்மீது!
பழிமட்டும் என்மீதா..!
நியாயமா..மானிடா..?!
- வைகறை நிலா

இயற்கை மருந்து

சத்தி சக்திதாசன்
வெண்ணிலவே கொஞ்சம் நில் !
வேதனையால் வெந்த என் நெஞ்சத்தை உறங்க வைக்கும் !
குளிர்மை எங்கிருந்து பெற்றாய் சொல் !
தென்றலோடு உறவாடும் மல்லிகையே ! !
தூங்க மறுத்து சோகத்தில் தள்ளாடும் என்னிதயத்தை ஓர் நொடியில் !
மகிழ்விக்கும் சுகந்தத்தை யார் கொடுத்தார் !
நீலவானில் பவனி வரும் வெண்மேகங்களே ! !
காலகாலமாய் மாறாத காயத்தின் வடுக்களை கணத்தினிலே ஆற வைக்கும் !
தூய்மையான வெண்மையை எவ்விடத்தே பெற்றீர் !
இரவின் இருளைச் சுட்டுப் பொசுக்கும் சூரியனே ! !
உன் ஒளியைக் கொண்டு என் மன இருளை விலக்கும் !
ஆற்றல் நீ அடைந்தது எப்போ சொல் !
புவியில் பசி போக்கும் அரிசியைத் தாங்கி நிற்கும் நெற்கதிரே ! !
புண்ணான என் எண்ணங்களை ஒரு நொடியேனும் !
பூவாக்கும் அந்த பச்சை வண்ணத்தை எங்கே வாங்கினாய் !
இறைவா அடுக்கடுக்காய் நீ கொடுத்தாய் சோதனைகள் கருணையோடு !
இயற்கைதனை என்னருகில் இருத்தி உரையாடும் மனத்தை நீ எனக்கு !
ஈன்றதனால் மட்டுமே இன்றும் நான் இவ்வுலகில் தவழ்கின்றேன் !
-- சத்தி சக்திதாசன்

தொராண்டோவின் இரவுப் பொழுதொன்றில்

வ.ந.கிரிதரன்
1.!
கவிந்து கிடக்குமிரவின் அமைதியில்!
இளவேனிற்பொழுதொன்றின்!
துணையுடன் கழியுமொரு பொழுதொன்றில்!
'டொராண்டோ'ப் பெருநகரின் நடைபாதைகளில்!
'இடவெளி' வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்!
வீடற்றவாசிகள் சிலர்.!
விரிந்து கிடக்கிறது வெளி.!
எதற்கிந்த முடக்கம்?!
தாராளமாகவே உங்கள் கால்களைக் கைகளை நீட்டி,!
நிமிர்ந்து, ஆசுவாசமாகத் துயில்வதற்குமா!
தயக்கம் வேண்டிக் கிடக்கிறது.!
2.!
பகலவனாட்சியில்!
பல்வகை வாகனங்கள்!!
பல்லின மானிடர்கள்!!
விளங்குமிப் பெருநகரின்!
குணம்!
இரவுகளில்தான்!
எவ்விதமெல்லாம்!
மாறிவிடுகிறது!!
மாடப்புறாக்களே!!
நள்ளிரவில் துஞ்சுதல் தவிர்த்து!
இன்னும் இரைதேடுவீர்!!
உமதியல்புகளை!
எவ்விதம் மாற்றிக் கொண்டீர்?!
நகரத்துப் புறாக்களா?!
இரவுப் புறாக்களா?!
சூழல் மாறிடினும்!
கலங்கிடாப் பட்சிகளே!!
உம் வல்லமைகண்டு!
பிரமித்துத்தான் போகின்றதென்!
மனம்.!
3.!
நகரில் துஞ்சாமலிருப்பவை!
இவை மட்டும்தானென்பதில்லை!!
துஞ்சாமலிருப்பவர்களும்!
நிறைந்துதான் இருக்கிறார்கள்.!
ஆலைத் தொழிலாளர், ஓரின,!
பல்லினப் புணர்வுகளுக்காய்!
வலைவிரிக்கும்!
வனிதையர், வாலிபர்.!
'மருந்து'விற்கும் போதை!
வர்த்தகர்கள்,!
திருடர்கள், காவலர்கள்....!
துஞ்சாதிருத்தல் பெருநகரப்!
பண்புகளிலொன்றன்றோ!!
4.!
இவ்விதமானதொரு,!
வழக்கமானதொரு!
பெருநகரத்தின்!
இரவுப் பொழுதொன்றில்,!
'பின்இல்' புல்வெளியில்!
சாய்கதிரை விரித்ததில்!
சாய்ந்திருக்கின்றேன்.!
பெருநகரத்தின் இடவெளியில்!
ஒளிந்திருக்கும் இயற்கையைச்!
சுகிப்பதற்காக.!
சிறுவயதில்!
'முன்இல்' தந்தையின்!
'சாறத்'தொட்டிலில்!
இயற்கையைச் சுகித்ததின்!
நீட்சியிது.!
பல்வகைக் கூகைகள் (கோட்டான்கள், நத்துகள்)!
சப்திக்கும் இரவுகளில், விண்சுடர் ரசித்தல்!
பால்யத்துப் பிராயத்து!
வழக்கம்.!
இன்னும் தொடரும் -அப்!
பழக்கம்.!
தோடஞ்சுளையென!
அடிவானில்!
கா(ல)ல்மதி!!
அந்தரத்தில் தொங்குமந்த!
மதி!!
அதனெழிலில் தெரிகிறது!
வெளிதொங்குமென்னிருப்பின்!
கதி!!
!
5.!
பெருநகரத்துப் பரந்த 'காங்ரீட்' வனத்தின்!
மத்தியில் ஒளிந்திருக்கும் இயற்கைக்!
கன்னியின் வனப்பினை!
இவ்விதமான இரவுப் பொழுதுகளில்தான்!
ஆறுதலாக, உணர்ந்து, சிந்தித்து,!
இரசிக்க முடிகிறது.!
சில சமயங்களில் நகரத்தின்!
மயானங்களினருகில்!
நரிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன்.!
பள்ளத்தாக்குப் பகுதிகளில்!
மானினங்களைக் கண்டிருக்கின்றேன்.!
குழிமுயல்களை, இன்னும் பல!
உயிரினங்களையெல்லாம்!
இத்தகைய இரவுப் பொழுதுகளில்!
கண்டிருக்கின்றேன்.!
அப்பொழுதெல்லாம்!
வ்ளைகளுக்குள் வாழ்ந்து!
இரவுகளில்!
இந்தக் 'காங்ரீட்' வனத்தினுள்!
சஞ்சரிக்கும் அவற்றின்!
படைப்பின் நேர்த்தியில்!
மனதிழந்திருக்கின்றேன்.!
6.!
வெளியில் விரைமொரு!
வாயுக் குமிழி! - உள்!
உயிர்!
ஆடும் ஆட்டம்தான்!
என்னே!!
ஒளியாண்டுத் தனிமை!!
வெறுமை! -உணராத!
ஆட்டம்!!
பேயாட்டம்!!
இந்தத்!
- தனிமையெல்லாம்,!
- வெறுமையெல்லாம்,!
- தொலைவெல்லாம்,!
ஒளியணங்கின் ஓயாத!
நாட்டியமோ! - மாய!
நாட்டியமோ?.!
ஆயின்,!
விழியிழந்த குருடருக்கு!
அவை!
ஒலியணங்கின்!
சாகசமோ?!!
7.!
இந்தப் பெருநகரத்திருப்பில்!
நான் சுகிக்கும் பொழுதுகளில்!
இந்த இரவுப் பொழுதுகள்!
சிறப்பு மிக்கவை.!
ஏனெனில் -அவை!
எப்பொழுதுமே!
என் சிந்தையின்!
- விரிதலை,!
- புரிதலை!
- அறிதலை!
அதிகரிக்க வைப்பவை;!
அதனால்தான்

வாழ்வின் நீளம்

சத்தி சக்திதாசன்
ஆற்றின் ஓரம்!
நடக்கிறேன்!
வாழ்வின் நீளத்தை!
ரசிக்கின்றேன்!
எந்தையும் தாயும்!
புரிந்திட்ட!
விந்தையாய் நானும்!
விழுந்திட்டேன்!
தந்தையின் கைகளை!
பற்றியபடியே!
தாயின் மடியில்!
விளையாடிய பொழுதுகள்....!
நேற்றைய நினைவுகளில்!
புதைந்திட்ட வேளைகள்!
நாளைய உலகினில்!
புலர்ந்திட வழியில்லை!
உள்ளத்தினுள்ளே!
உண்மைகள் உறைந்தும்!
உலகத்தில் அதனை!
உணர்ந்தவர் சிலரே!
இன்பம் ஒரு பாதி!
துன்பம் மறு பாதி!
இரவு ஒரு பாதி!
பகலும் மறு பாதி!
காற்றில் பறக்கும்!
சருகினைப் போலே!
காலம் எம்மை!
உருட்டிடும் உண்மை!
நாமே அனைத்தும்!
புரிவது போலே!
நம்மை நாமே!
ஏய்த்திடும் செய்கை!
மணலின் மீது!
தவழ்ந்திடும் நதியாய்!
புவியின் மீது!
மிதந்திடும் தென்றலாய்!
இதமாய் நாம் வாழும்!
இனிமைப் பொழுதுகளை!
இறுகப் பிடியுங்கள்!
ஈட்டும் இன்பம் அதுவேதான்!
ஒருவரை ஒருவர்!
மிதித்தே முன்னேறிடும்!
பொல்லாத உலகை!
இல்லாமல் செய்வோம்!
பிறப்புக்கும் இறப்புக்கும்!
இருக்கும் இடைவெளி!
வாழ்வின் நீளத்தை!
அளந்திடும் ஜீவநதி!
வாழ்வின் நீளத்தின்!
அளவி மைல்களிலில்லை!
மனித மனத்தில் விளையும்!
நல்ல சிந்தைகளின் கனத்திலுள்ளது

பா.அகிலன் கவிதைகள் 2

பா.அகிலன்
1. யாரோ ஏதோ !
சில நட்சத்திரங்கள் !
துயர நிலவு !
யாரோ மட்டும் வருகிறேன். !
கையில் பற்றியிருந்த கொண்டல் மலர்களும் !
காற்றில் அலைவுற்று கூந்தலுமாய் !
குரூர வெளியில் !
உன்னையும் பறிகொடுத்தாயிற்று... !
”எங்கே போகிறாய” காற்றில் யாரோ ஒலிக்கவும் !
”தொ¤யாது...” !
!
2. முடிந்துபோன மாலைப்பொழுது !
பார்க்கிறோம், !
விழி கொள்ளாத் துயரம் !
உதடுகள் துடிக்கின்றன !
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும் !
காற்றள்ளப் போய்த் தொலைகிறது... !
நேற்று !
சணற்காட்டில் மஞ்சள் மௌனம், !
இன்று !
கண்களில் நீர் !
போகிறாய் !
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். !
-- பா.அகிலன்

எல்லா இடத்திலும் ஒரு கவிதை

முத்தாசென் கண்ணா
கொய்யாக்காய் விற்பவளின் கூச்சல்!
பாட்டுப்பாடி பிழைப்பவர்கள்!
இரயில் பெட்டிக்கே உரிய அருவருப்பு நிறம் !
என் கழுத்தை இறுக்கும் டை !
அலுவலக நேர நெரிசல் !
புதிய தமிழ் பாடல்களை சிணுங்கும் செல் போன்கள் !
பக்கத்தில் நிற்பவனின் இரண்டு நாள் வியர்வைச் சட்டை!
இத்தனை நெரிசலிலும் ஆசுவசப்படத்துகிறது!
அம்மாவின் முடியை இழுத்து!
அழகாய்ச் சிரிக்கும் ஆறுமாதக் குழந்தை.........!

எழுதிக்கிழி அல்லது கிழித்து எழுது

ரவி (சுவிஸ்)
என்னிடம் இப்போதெல்லாம்!
வெற்றுத் தாள்கள் வந்து சேர்கின்றன.!
ஒவ்வொரு எழுத்துகளின் மீதான வாசிப்பின்!
முடிவிலோ அல்லது இடைநடுவிலோ அவை!
என்னிடம் வந்து விழுகின்றன.!
அவற்றில்!
தொகுப்புகளாகிக் கொண்டிருக்கின்றன!
என் எழுத்துகள்!
யாரும் வாசிப்பதற்காக அல்ல அவை என்ற!
ஆணிகள் என்னிடம் கிடையாது.!
ஆனாலும் அவை எனது அனுமதியுடன்!
அறையப்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன!
இன்று நீ மௌனமாக இருப்பது நாளை!
எப்படியும் உனை வளைத்துக் காட்ட உதவுமென!
என் முன்னாள் தோழன் சொன்னதை ஒருவேளை!
அவன் மறந்திருக்கவும்கூடும்.!
அவனை மறக்கவிடாமல் தாங்கிக்கொண்டிருக்கிறது!
அவனது இந்த எறிதல்.!
எழுதி என்னத்தைக் கிழிச்சாய் எனவும்!
கூடி என்னத்தைக் கண்டியள் எனவும்!
பேசி எதைச் சாதிச்சியள் எனவும்!
கேட்போர் கூடம் ஒன்றை நிர்மாணித்தால்!
சோம்பல்சோலையாய் விரியும் அது.!
அதனால் எழுது!
எழுதிக்கிழி அல்லது கிழித்து எழுது!
ஒரு பெண்ணாய்!
தலித்தாய்!
கருப்பனாய் கருப்பியாய்!
போராளியாய்!
இன்னமும் இன்னமுமாய்ப் பேச!
கடலுறிஞ்சிக் கிடக்கிறது உனது பேனா!
எழுது!!
-ரவி (07062008)

கிளிநொச்சி

தீபச்செல்வன்
01.!
*பி*ரகாசிற்கு இப்பொழுது!
பியரில் நாட்டமில்லை!
முன்பு நாம்!
பியர் குடிப்பதில்லை!
சமாதான காலத்தில்தான்!
இங்கு பியர்கள்!
கொண்டுவரப்பட்டன.!
அப்போதுதான்!
நானும் பிரகாசும்!
பியர் குடிக்கப்பழகினோம்.!
இப்பொழுது இங்கு!
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை!
முன்பு கொண்டுவரப்பட்ட!
பியர் போத்தல்களின்!
சுட்டுத்துண்டு நிறங்கள்!
வெளுறிக்கிடக்கின்றன.!
!
02.!
நாங்கள் பயணம் செய்த!
பேருந்துகள்!
ஓய்ந்தோ முடங்கியோ!
கிடக்கின்றன!
நாங்கள்!
பேருந்துகளையோ பயணங்களையோ!
விரும்புவதில்லை!
இப்பொழுது!
சைக்கிளை!
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்!
எங்கள் மோட்டார் சைக்கிள்!
வீட்டில் நிற்கிறது.!
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.!
!
03.!
பிரகாசின் அம்மா!
புற்றுநோயில்!
இறந்துவிட்டாள்!
பாதை பூட்டியிருந்தததால்!
அவளுக்கான வைத்தியங்கள்!
தவறிவிட்டன.!
கடைசி நாட்களில்!
நல்ல சாப்பாடுகளைக்கூட!
பிரகாசு!
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.!
இப்பொழுது அவன்!
பியரை நன்றாக!
வெறுத்துவிட்டான்!
!
04.!
வீடுகளில்!
விளக்கு வைப்பது!
பெரும்பாடாகி விட்டது.!
சிவப்புநிற மண்ணெண்ணையில்!
வண்டிகள்!
புகையுடனும்!
பெரும் இரைச்சலுடனும்!
ஓடுகின்றன!
எமது வண்டிகளுக்கு!
எதிர்காலமே!
இல்லாமலாகி விட்டதென்று!
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.!
வீதிகள் எல்லாம்!
குன்றும் குழியுமாகி விட்டன.!
சில்லுடைந்துவிடும்!
காற்றுப் போயிவிடும்!
சைக்கிளை!
மெதுவாக ஓட்டுகிறோம்!
!
05.!
கான்ஸ்பிரஸ்கரின்!
சிரிப்புடன்கூடிய படம்!
எரிக்சொல்கெய்மின்!
சிரிப்புடன் கூடிய படம்!
எல்லாம்!
சுவர்களில் இருந்து!
அகற்றவேண்டி ஆகிவிட்டது.!
அவர்கள்தான்!
எங்களுக்கான பியர்களை!
எடுத்துவந்திருக்க வேண்டும்.!
அவர்கள்தான் சோடாவும்!
கொண்டு வந்திருக்க வேண்டும்!
மினரல் தண்ணீர்களும்!
கொண்டு வந்திருக்க வேண்டும்.!
இப்பொழுது சுடும்!
கலர் தண்ணிகளை!
பொலித்தீன் பையில் அடைத்து!
இங்கு விற்கிறார்கள்!
அது சூடாய் இருக்கிறது.!
கடைகள் குறைந்து விட்டன.!
!
06.!
எங்கள் தாத்தாவின்!
வாயில்!
மூள மறுக்கும்!
குறைச்சுருட்டுக் கிடக்கிறது!
அவர் பழைய!
குறைச்சுருட்டுக்களை!
தேடிக்கொண்டிருக்கிறார்!
நெருப்புக் கொள்ளியுடன்!
போராடுகிறார்.!
!
07.!
கடிகாரத்திற்கான!
பென்டோச் பற்றியுமில்லை!
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை!
ரணில் விக்கிரமசிங்கவும்!
தலைவர் பிரபாகரனும்!
இணைக்கப்பட்ட படமுடைய!
கடிகாரத்தை!
புத்தளத்தில் இருந்து வந்த!
முஸ்லீம் கடையில்!
அம்மா வாங்கி வந்தாள்.!
அது பழுதாகி விட்டது.!
பற்றி போட்டும் வேலையில்லை.!
நேரம் சரியில்லை.!
!
08.!
எப்படி வீடுகளில்!
பதுங்குகுழி என்று!
நானும் பிரகாசும்!
விசாரித்துக் கொள்கிறோம்.!
நாங்கள் நல்ல!
பதுங்குகுழி அமைக்கவில்லை.!
சாமாதான காலத்தில்!
சீமெந்துகள்!
அனுமதிக்கப்பட்டிருக்கையில்!
நிலத்தின்கீழ்!
வீடுகட்டியிருக்க வேண்டும்.!
!
09.!
படுகொலை செய்யப்பட்டவர்களின்!
பெயர் விபரங்கள்!
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.!
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.!
சைக்கிளை விட்டு!
இறங்கி வீதிக்கரையில்!
நிற்கிறோம்!
களமுனையில் வீழ்ந்த!
மாவீரர் ஒருவரின்!
விதையுடல்!
சிப்பு மஞ்சள் வண்டியில்!
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.!
!
10.!
சைக்கிளை ஒதுக்கி!
வழி விடுகிறோம்!
விமான தாக்குதலில்!
காயமடைந்த!
மக்களைக் காவிக்கொண்டு!
அம்புலன்ஸ் வண்டி!
ஓமந்தை நோக்கிப் போகிறது!
சிலவேளை!
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்!
!
11.!
நமது உடைகள்!
மங்கி சுருங்கி விட்டன!
செருப்பும் தேய்ந்துவிட்டது.!
பசிக்கிறது.!
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.!
நானும் பிரகாசும்!
மெலிந்து விட்டோம்!
மீண்டும் ஒருநாள்!
நானும் பிரகாசும்!
பதுங்குகுழியை விட்டு!
வெளியில் வந்து பேசுகிறோம்.!
!
-தீபச்செல்வன்

தொண்டு செய்தால்

இராஜ. தியாகராஜன்
அன்பே மலிய அனைவர்க்குந் தொண்டுசெயின் !
இன்பம் மலியுமென்ற பாவேந்தர் சொற்களையென் !
சிந்தனை மத்தால் சிலுப்பிய போதினில் !
வந்துதித்த எண்ணமதை வாகாய் இயம்புகிறேன். (வந்து) !
வாடிய நெற்பயிரை கண்டதுமே வாடியவர் !
தேடிய தென்றும் உயிர்தழைக்குந் தொண்டதுவே! !
நாடது போற்றும் விவேகா நந்தரும் !
நாடிய துண்டோ புகழை பொருளை? (நாடிய) !
இறைமை யெனுங்கரு தாண்டி மனிதம் !
பரப்பிய வாரியார் தீர்த்தர் ரமணர்; !
மறைமலை போன்றே செழுந்தமிழ் மேன்மை !
உரைத்தத் தமிழர் நிலையின்று தாழ்வோ? (உரைத்த) !
மதத்தின் தலைமை பொறுப்பென்றும் பீடத்தில் !
பதமா யமர்ந்தே புகழ்தேட லில்லை; !
மதத்தின் வழியினில் மக்களின் தொண்டாம்! !
அதைமறக்க வீழ்வா ரழிந்து! (அதை) !
---------------- !
வாடிய நெற்பயிர் கண்டு வாடியவர் = இராமலிங்க வள்ளல் !
வாரியார் = கிருபாநந்த வாரியார் !
தீர்த்தர் = இராம தீர்த்தர் !
ரமணர் = இரமண மகரிஷி !
மறைமலை = மறைமலையடிகள் !
அன்பு மலிய உயிர்களுக்கு தொண்டு செய்தால் இன்பம் மலியும் என்ற வரிகள் !
பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் !
-------------------------- !
அன்புடன் இராஜ. தியாகராஜன்