கோழி இறகும் காகங்களும் - துவாரகன்

Photo by Freja Saurbrey on Unsplash

துவாரகன்-!
ஒரு நாள் மதியம்!
எல்லாக் காகங்களும் கூடிக் கரைந்தன. !
வீட்டின் முன்புற மாமரத்திலும்!
பின் வளவு முருங்கையிலும்!
வேலியோரக் கதியால்களிலும்!
கூடியிருந்த காகங்கள்!
பலமாகக் கரைந்தன.!
தேடலில் இறங்கினேன்.!
வீட்டிலேதும் மீன் வெட்டவுமில்லை.!
அதன் உறவுக் காகம் இறந்த !
அடையாளமும் இல்லை. !
வீட்டாரைக் கேட்டேன். !
யார்க்கும் ஏதென்று தெரியாதாம்.!
அப்போதுதான்,!
என் வீட்டு மஞ்சள் பூப்பந்தற் காலருகே!
பிடுங்கி எறியப்பட்ட !
நான்கைந்து !
வெள்ளை சாம்பல் கலந்த கோழி இறகுகள்.!
கோழி தானாக இறகு உதிர்க்குமா?!
காகங்கள் இன்னமும் கரைந்தபடி!
இறகுகள் மட்டும் அடையாளமாக
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.