காதுகளால் நிரம்பி வழிகின்ற - துவாரகன்

Photo by Didssph on Unsplash

சனங்களின் கதைகள்!
------------------------------------------------------- !
சனங்களின் கதைகள் !
காதுகளால் நிரம்பி வழிகின்றன!
உள்ளத்தின் பெருத்த பாரங்களாகி!
காதுகளை நிரம்பிக் கொண்டு கழுத்தினால் கீழிறங்கி !
தோள்மூட்டால் வழிந்து !
குதித்தோடுகின்றன சனங்களின் கதைகள் !
சனங்களின் கதைகளை ஒரு பாத்திரத்தில் !
பிடித்து வைக்கவோ !
ஒரு பீப்பாவில் நிரம்பி வைக்கவோ முடியாதுள்ளது.!
சீமெண்ட் தரையில் எண்ணெய் வழுக்கலைப்போல் !
வழுக்கி ஓடுகின்றன.!
வீடு தாண்டி வாசல் தாண்டி !
கிராமங்கள் தாண்டி நகரங்கள் தாண்டி !
மரங்களின் மீதேறி !
வானத்துக் கயிறுகளைப் பிடித்துத் தொங்கி !
விண்ணைத் தாண்டிச் செல்கின்றன.!
எல்லோரும் இரவில் தூங்கும்போது !
வாசலுக்கு வெளியே நின்று !
கொட்டக் கொட்ட விழித்துப் பார்க்கின்றன!
அப்போது ஒரு பெரும் பூதம்போலவும்!
கதைகளில் அறிந்த பேய்கள் போலவும் !
உருக்கொள்கின்றன.!
இதயத்தை இரத்தத்துடன் கையில் தாங்கியும் !
உயிரைத் தனியே எடுத்து !
ஒரு இரும்புப் பெட்டியில் !
கவனமாக வைத்துக் கொண்டும்!
ஏக்கத்துடன் என்னைப் பார்க்கின்றன. !
உயிரியல் ஆய்வு கூடத்து !
பாடம் போட்ட மனிதர்களின் !
உடல்களைப் போலவும்!
இறந்த மனிதர்களின் எலும்புக்கூடுகளைத் தாங்கிக் கொண்டும் !
இன்னும் கொஞ்ச சனங்களின் கதைகள் !
மைதானத்தில் நிரம்பி வழிவதாகவும் !
சில கிரகவாசிகள் சொல்கிறார்கள். !
இந்தக் கதைகள் எல்லாவற்றையும்;!
நான் நேசிக்கும் பூனைக்குட்டியின் வருடலில் !
நிதானமாக நின்று கேட்க முடியவில்லை.!
அவை அதற்கு முன்னரே வழிந்தோடி விடுகின்றன.!
ஒரு வாமன அவதாரமாக !
இந்த உலகை அளந்தபடியே
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.