கனவில் வந்த கடவுள் - துவாரகன்

Photo by FLY:D on Unsplash

ஒரு நாள் என் கனவில் கடவுள் வந்தார்!
தான் யார் என்று கேட்டார்!
கடவுள் என்றேன்!
எல்லாம் அறிந்தவர்!
எங்கும் நிறைந்தவர்!
எல்லோரையும் காப்பவர்!
அவரே கடவுள் என்றேன்!
ஆனாலும் கடவுள் மிகக் கவலைப்பட்டார்!
என்னவென்று கேட்டபோது!
தான் நன்றாக இல்லை என்றார்.!
கடவுள் நீண்ட நேரம் சிந்திக்கிறார்!
கடவுள் நீண்ட நேரம் விடுப்புக் கதைக்கிறார்!
இதனால்த்தான்!
கடவுள் நன்றாக இல்லையென்பதைப்!
புரிந்துகொண்டேன்!
ஒளிவட்டம் கொண்ட!
ஞானிகள் போல் கடவுளும் இருக்கவேண்டும்!
இல்லாவிடில் இரணியன் வந்துவிடுவானே?!
இப்போ நானும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்!
இரவில் மின்னுகின்ற!
மின்மினிப் பூச்சிகளையும்!
நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டே
துவாரகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.